Categories
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியா உர்ஜிட் படேல் காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் ப. சிதம்பரம் பண மதிப்பு நீக்கம் ராகுல் காந்தி ரூபாய் நோட்டு

பணமதிப்பு நீக்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல்லாத நோட்டு எண்ணிக்கை தொடருகிறது

பணமதிப்பு நீக்க நடவடிக்கை துவங்கிய 8 மாதங்களுக்குப் பிறகும் செல்லாத நோட்டுகள் எண்ணும் பணி தொடர்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது தெரிந்ததே. இத்தகவல் சமூக வலைத்தளங்களிலும் மக்களிடையேயும் பலவிதமாக சரமாரியாக கிண்டல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதுகுறித்து காங்கிரஸ்  துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், ரிசர்வ் வங்கிக்கு மட்டுமின்றி, பிரதமர் அலுவலகத்துக்கும் கணக்கு ஆசிரியர்களை  நியமிக்கலாம் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தனது ட்விட்டரில், “பணமதிப்பு நீக்கத்துக்கு 8 மாதங்கள் கழித்து ஆர்பிஐ நோட்டு எண்ணும் இயந்திரம் வாங்கியுள்ளது, குத்தகை என்று ஒன்று இருப்பது ஆர்பிஐ-க்கு தெரியுமா” என்று பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றக் குழுவின் முன்னால் பேசிய ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், தடைசெய்யப்பட்ட நோட்டுகள் இன்னமும் எண்ணப்பட்டு வருகின்றன, ஆகவே எண்ணிக்கை பற்றி இப்போது கூற முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு எவ்வளவு தொகை வங்கிகளில் பழைய நோட்டுகள் டெபாசிட் ஆகின என்ற விவரத்தை இன்னமும் கூட மத்திய அரசு வெளியிடவில்லை.

Share
Categories
இந்தியா காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் ராகுல் காந்தி

சீனத்தூதருடன் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி காட்டமான பதில்

இந்தியாவுக்கும் சீனவுக்கும் இடையிலான எல்லை தொடர்பான மோதல் நிலவிவரும் சூழலில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சீன தூதர் லுயோ ஜாயோஹூ சந்தித்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, எல்லையில் ஆயிரம் சீன வீரர்கள் அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த நிலையில், அந்நாட்டு அதிபரோடு ஊஞ்சலில் அமர்ந்து பேசுபவன் நானல்ல என்று கூறியுள்ளார். அண்மையில் சீனாவில் அதிபர் ஜிங்பிங்குடன் மோடி ஊஞ்சலில் அமர்ந்து பேசிய படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். சீனத் தூதர் தன்னை சந்தித்தது குறித்து கவலைப்படும் மத்திய அரசு, இருநாடுகள் இடையே பதற்றம் நிலவும் சூழலில் மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் சீனாவுக்கு பயணம் சென்றதேன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் “பாஜகவின் பக்த ஊடகங்கள் செய்தி வெளியிடும் முன்னர் உண்மைத்தன்மையை சோதிக்க வேண்டும்” என்று காட்டமாக பதிவுசெய்திருந்தார்.

Share