Categories
இந்தியா டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள் போராட்டம் விவசாயிகள் போராட்டம்

தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்துப் போராட்டம்

டெல்லியில் கடந்த ஏழு நாட்களாக போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள், இன்று பாதி மொட்டை அடித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று முன்தினம் விவசாயிகள் தங்களை தாங்களே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா விவசாயிகளை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

விவசாயிகளின் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. நேற்று விவசாயிகள் பாதி மொட்டை அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் பகுதியில் சிறிது தூரம் ஊர்வலமாக சென்ற அவர்கள், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் முன்வரவில்லை என்றும், எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதி மொட்டை அடித்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்றும் அப்போது அவர் கூறினார்.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் மாநிலங்கள் மேற்கு வங்காளம்

டார்ஜீலிங்கில் கலவரம்: ஒருவர் பலி; 36 பேர் படுகாயம்

டார்ஜீலிங்கில் ஜூன் 9 ம் திகதி தொடங்கிய  தனி மாநில கோரிக்கையைத் தொடர்ந்து நடைபெறும்  வன்முறையின்  தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினருக்கும் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா ( GJM)-வினருக்கும் நடந்த மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 36 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா ( GJM) தலைவர்கள் தங்கள் தரப்பில் 3 பேர் இறந்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோர்கா ஜன்முக்தி மோர்ச்சாவினரின் போராட்டங்கள் “வடகிழக்கு மற்றும் சில வெளிநாட்டு நாடுகளின் கிளர்ச்சி குழுக்கள் ஆதரவுடன் ஆழமான வேரூன்றி சதி வேலை” என்று கூறினார்.

வெள்ளிக்கிழமை இரவு ஜி.ஜே.எம் இன் உதவி பொது செயலாளரான பினய் தமங் வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியதுடன், டார்ஜீலிங்கைச் சேர்ந்த ஜி.ஜே.எம் எம்.எல்.ஏ. அமார் ராய் மகன் விக்ரம் ராய் என்பவரை கைது செய்தனர். அதன் பின்னரே இந்த வன்முறைப் போராட்டங்கள் துவங்கின.

 

Share