Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வட கொரியா: குவாம் மீதான ஏவுகணைத் தாக்குதல் திட்டம் நிதானம் ஆகியுள்ளது

அமெரிக்காவின் பகுதியான குவாம்க்கு அருகே, ஏவுகணைகளால் தாக்கும்  திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப் பட்டுருப்பதாகத் தெரிகிறது. இத்திட்டம்  பற்றி, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.


அமெரிக்கக் கடற்படைத் தளங்களும், ஆகாயப் படைத் தளங்களும் அமைந்திருக்கும் பகுதி, குவாம். குவாமுக்கு அருகில் 4 ஏவுகணைகளைப் பாய்ச்சுவதற்கான விரிவான திட்டம் தொடர்பான விவரங்கள் இம்மாத நடுப்பகுதிக்குள் உறுதிபடுத்தப்படும் என்று வடகொரிய ராணுவம் கடந்த வாரம் கூறியிருந்தது.

இத்திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆய்வு நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,  அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான, சி.ஐ.ஏ., யின் இயக்குனர் மைக் போம்பியோ, ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது: தற்போதைய சூழ்நிலையில், வட கொரியா உடனடியாக தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும், 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட, போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு தற்போது அதிகம் உள்ளது என்றார்.

வட கொரியாவின் தற்போதைய நிதானம், பல தரப்புகளிலிருந்தும், குறிப்பாக சீனாவிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாகவே என்பது தெளிவு. ஐ.நா.வின் தடைத் தீர்மானத்தின் பின்னர், வடகொரியாவில் இருந்து வரும் சில இறக்குமதிப் பொருட்களை சீனா, நிறுத்திக்கொண்டுள்ளது.

இதனைத் தவிர, முந்தைய அமெரிக்க அதிபர்களைப் போல கண்டும் காணாமல் இருக்காமல், தற்போதைய அதிபர் டிரம்ப், வடகொரியாவின் ஆணவப் பேச்சுகளுக்குத் தக்க பதில்களை அவ்வப்போது கூறிவருவதாலும், வட கொரியாவின் அண்டைய நாடுகள், எங்கே போர் வந்துவிடுமோ, என்ற அச்சத்தினால் எப்போதும் இல்லாத அளவுக்கு வட கொரியாவிற்கு அழுத்தம் கொடுப்பதாலேயே, இந்த தற்காலிக நிதானம் என்று கருதலாம். இருப்பினும், வட கொரியா போன்ற ரகசியமாக செயல்படும், சர்வாதிகார அரசின் செயல்பாடுகள் எவ்வாறு அமையும் என்று நாம்  உறுதியாக சொல்ல முடியாது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

அமெரிக்காவின் பகுதியான குவாமை தாக்க வட கொரியா திட்டம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வட கொரியாவிற்கு விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, மேற்கு பசிஃபிக் பெருங்கடலிலுள்ள அமெரிக்கப் பகுதியான குவாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த வட கொரியா தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுஎஸ் விமானப்படை B-1B லான்சர் கயாம் நோக்கி செல்லும் வழியில், ஜப்பானிலுள்ள கியூஷூவில் எரிபொருள் நிரப்புகிறது.

ஏவுகணைக்குள் பொருத்தக் கூடிய அளவில் அணுவாயுதம் ஒன்றை வெற்றிகரமாக வடகொரியா தயாரித்ததாக வெளியான தகவலை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், “வடகொரியாவின் அத்துமீறல்களுக்கு நெருப்புடன் கூடிய கோபத்துடன் பதில் கொடுக்கப்படும்; உலக நாடுகள் இதுவரை கண்டிராத கடும் நெருக்கடியை வடகொரியா எதிர்கொள்ள நேரிடும்; ஆகவே அமெரிக்காவுடன் மோதுவதை அந்த நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது பற்றி வடகொரியா தரப்பில் வெளியான அறிக்கையில்,  “அமெரிக்காவின் பசிபிக் பகுதியில் உள்ள தீவான குவாம் பகுதியை தாக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்டங்களை கவனமாக பரிசோதித்து வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வட கொரியாவின் அரசு ஊடகத்தில், “அதிபர் கிம் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவரிடமிருந்து அனுமதி வந்தவுடன் செயல்படுத்துவோம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் குறித்து குவாம் கவர்னர் கூறும்போது, ”நாங்கள் வெறும் ராணுவம் தடவாள பகுதி மட்டுமல்ல, அமெரிக்காவின் மண். குவாம் எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள தயராக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து வெள்ளை மாளிகையுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்றார்.

ஜப்பானிய மற்றும் தென் கொரிய சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமான குவாம், அமெரிக்காவின் தாட் (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மூலம் பாதுகாக்கப்படுகிறது.

 

 

 

Share
Categories
அமெரிக்கா ஆசியன் உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

கடுமையான பதிலடி தரப்படும் : வட கொரியா மிரட்டல்; ஆசியன் மாநாட்டில் வ.கொ.விற்கு அதிக அழுத்தம் கொடுக்க பிற நாடுகள் வலியுறுத்தல்

ஐ.நா.வினால் ஒப்புதலளிக்கப்பட்ட வட கொரியாவிற்கான தடைகள் குறித்தான தீர்மானத்திற்கு “ஆயிரம் மடங்கு” அதிகமாக கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.

இவ்வறிவிப்பு, ஐ.நா.வினால் வட கொரியாவின் மீது விதிக்கப்பட்ட, 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் ஏற்றுமதி பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, காரீயம், கடலுணவு பொன்றவற்றின் மீதான தடைத் தீர்மானம் நிறைவேறிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது. மேற்படி தடைகள் மூலம் வட கொரியாவின் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரிய அரசு ஊடகத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமது நாட்டை “தனிமைப்படுத்தி, தடுத்து நிறுத்துவதற்கு” உருவாக்கப்பட்ட அமெரிக்க சதித்திட்டம் “அதன் இறையாண்மையின் வன்முறை மீறல்” ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகள், வட கொரியாவின்  அணுசக்தி திட்டத்தைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது  அதன் அணுசக்தி திறனை வலுப்படுத்த முற்படுவதை தடுக்கவோ செய்யாது என்று அதில் கூறுப்பட்டுள்ளது. வட கொரியா விரைவில் ” ஒரு நீதி நடவடிக்கை எடுக்கும்” என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் என்ன நடவடிக்கை என்பதன் விபரம் தெரிவிக்கப்படவில்லை.

ஆசியன் மாநாட்டில் வட கொரியாவிற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட வலியுறுத்தல்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியன் மாநாட்டில் பங்குபெற்ற அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரிகள்,  வடகொரியாவிற்கு அனைத்து உலக நாடுகளும் அதிக நெருக்கடி கொடுக்க வேண்டுமென  கூட்டாக அறிவித்தனர்.

அந்த அறிக்கையில், “வடகொரியா தற்போது கையாண்டுவரும் அச்சுறுத்தும் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட அனைத்து நாடுகளும் அந்நாட்டிற்கு அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும். தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது கூடுதல் இராஜதந்திர மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்நாட்டிற்கு எதிராக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தடைகளை கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் நிறைவேற்றம்

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டன. இத்தடைகள், வடகொரியா சமீபத்தில் மேற்கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைச் சோதனைகளின் நிமித்தம் அந்நாட்டின் மீது விதிக்கப்படுகின்றன. இத்தடைகள் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் மீது ஏழாவது முறையாக விதிக்கப்படுவன ஆகும்.

வட கொரியாவின் மீதான இத்தீர்மானம், 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் ஏற்றுமதி பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, காரீயம், கடலுணவு பொன்றவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட கொரியாவின் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும். அதிபர் டிரம்ப் பதவிக்கு வந்த பின் முதல் முறையாக சீனாவும் தனது கூட்டாளி நாடான வட கொரியாவை விட்டுக் கொடுக்க வைத்து, தீர்மானத்தை நிறைவேற்ற வழி செய்துள்ளார்.

 

ஐ.நா.-விற்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி, இத்தடைத் தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக ஐ.நா. உறுப்பு நாடுகளை பாராட்டினார். “இதுவரை வட கொரியாவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தடைத் தீர்மானங்களைக் காட்டிலும் இது பெரிதாகும். எனினும், இப்பிரச்சனைக்கு முடிவு கட்டி விட்டதாக நினைப்பதானால், அது நம்மை நாமே எமாற்றிக் கொள்வதாகும்.  வடகொரியாவின்  சர்வாதிகார அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்கவே செய்கிறது, அது மேலும் வேகமாக, அபாயகரமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது” என்று நிக்கி ஹேலி கூறினார்.

 

மேலும் இத்தீர்மானம் வட கொரிய தொழிலாளர்களுக்கு பிறநாடுகளில் வேலைக்கான அனுமதி வழங்குவதையும் தடை செய்கிறது. வட கொரிய நிறுவனங்களுடன் மற்றநாட்டு நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுவதையும், புதிய முதலீடுகளையும் தடுக்கிறது.

 

வட கொரியாவின் 90 சதவீத வர்த்தகம் சீனாவுடனே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீர்மானத்தின் போது பேசிய சீனா பிரதிநிதி வட கொரிய மக்கள் மீது இத்தடைகள் எதிர்மறையான பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றார். எனினும் அணு ஆயுதங்கள் அற்ற கொரிய தீபகற்பத்தினை உருவாக்க பேச்சுக்கள் நடத்துவதைத் தூண்டும் என்றார். ரஷ்யாவின் தூதரும் இது முடிவல்ல. அந்நாட்டை பயனுள்ள முறையில் பேச்சு நடத்த வைக்க ஒரு கருவியாக பயன்படும் என்றார்.

 

இதனிடையே வருகின்ற ஆசியன் அமைப்பின் கூட்டம் ஒன்றில் வட கொரியாவின் வெளியுறவு அமைச்சருடன் தென் கொரியாவின் அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளதாக கூறியுள்ளார். கடந்த 2015 ஆண்டில் வட-தென்கொரிய நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சு வார்த்தை நின்று போனதிலிருந்து முதல் முறையாக இரு நாடுகளும் பேசவுள்ளன.

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

அமெரிக்க இராணுவம் பொறுப்பற்ற முறையில் கோபமூட்டுவதாக வடகொரியா குற்றச்சாட்டு

ஞாயிறன்று வடகொரிய அரசு ஊடகங்கள் அமெரிக்காவின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அமெரிக்க இராணுவம் பொறுப்பற்ற முறையில் தம்மை கோபமூட்டுவதாக வடகொரிய அரசு ஊடகங்கள்  குற்றம் சாட்டின. கொரிய தீபகற்பம் பகுதியை அணு ஆயுத போர் முனையமாக மாற்றிவிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடர்பாக, வட கொரிய அரசுக்கு சொந்தமான ‘ரோடாங் சின்முன்’ நாளிதழில் ’வெடி மருந்து பீப்பாய்க்கு அருகே நெருப்போடு விளையாட வேண்டாம்’ என்ற தலைப்பில் இன்று வெளியாகியுள்ள சிறப்பு கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகிலேயே எளிதில் தீப்பற்றக் கூடிய வகையில் உள்ள வட கொரியா பகுதியில் அமெரிக்க ராணுவம் நிகழ்த்தியுள்ள ஆபத்தான அத்துமீறல் கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுத போர் முனையமாக மாற்றும் நிலைக்கு தள்ளிவிடும். போர்வெறி கொண்டவர்களால் கூட்டுப் பயிற்சி என்ற பெயரில் நமது நாட்டுக்கு எதிராக தற்போது நடத்தப்பட்டுள்ள இதுபோன்ற அபாயகரமான தந்திரங்களை இந்த தீபகற்பத்தில் அணு ஆயுதப் போரை தூண்டிவிடும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.

ஒரு தவறான கணிப்பு அல்லது சிறிய பிழை நேர்ந்தாலும் அதன் விளைவு அணு ஆயுதப் போரின் துவக்கமாகவும் இன்னொரு உலகப் போரின் துவக்கமாகவும் அமைந்து விடும்.

இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு B-1 குண்டுவீச்சு விமானங்கள் குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளத்திலிருந்து 2,000 மைல்கள் பறந்து தென் கொரிய போர் விமானங்களுடன் ஒரு துல்லியமான தாக்குதல் பயிற்சியை நடத்தின. இவர்களுடன் ஜப்பானிய வீரர்களும் இணைந்து விமான பயிற்சியில் ஈடுபட்டனர்.

அமெரிக்க விமானப் படை, ஒரு அறிக்கையில், “எங்கள் நட்பு நாடுகளுக்கு இரும்புக் கவசப் பாதுகாப்பு அளிப்பதில்  அமெரிக்காவின் உறுதிப்பாட்டின் ஒரு நிரூபணம்” என்று கூறியது.

84 பில்லியன் பவுண்டு குண்டுகளை சுமந்து செல்லும் வசதியுள்ள குண்டுவீச்சு விமானங்கள், பிலுங்ங் ரேஞ்சில் மந்தநிலை ஆயுதங்களை வெளியிட்டன. இந்த பயிற்சி முடிய 10 மணி நேரம் எடுத்துக் கொண்டது.

பசிஃபிக் விமானப்படை கமாண்டரான ஜென். டெரென்ஸ் ஓ. சாக்னெஸ்ஸி இதுபற்றிக் கூறும்போது, “வட கொரியாவின் நடவடிக்கைகள் நம்முடைய கூட்டாளிகளுக்கும், பங்காளிகளுக்கும், நம் நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. தேவைப்பட்டால், எங்களது கூட்டு விமானப்படைகளின் முழுத் திறனையும் உபயோகிப்போம்; அதற்கான தகுந்த பயிற்சியையும் ஆயுதங்களையும் நாம் பெற்றுள்ளோம்”, என்றார்.

 

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வடகொரியாவின் அச்சுறுத்தலை தடுக்க சீனா எதுவும் செய்வதாகத் தெரியவில்லை : டிரம்ப்

வடகொரியா ஏற்படுத்தும் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்ப்பதில் சீனாவுக்குள்ள அக்கறை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதத்தில் சீனா-வட கொரியா இடையிலான வணிகம் 40 சதவீதம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப் சீனாவுடன் பேசுவதில் பயனில்லை என்றும் ஆனாலும் முயன்று பார்ப்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்புக் குழு விதித்த தடையை மீறி நடத்தப்பட்டதாகும். பாதுகாப்புக் குழுவை அவசரமாகக் கூட்டி இப்பிரச்சினையை விவாதிக்கவேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

நிக்கி ஹேலியின் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத் தூதுவர், நிக்கி ஹேலி, புதன்கிழமையன்று, ஐ.நா.வின் சிறப்பு பாதுகாப்புக் கூட்டத்தில் கூறுகையில், “வட கொரியாவை வழிக்குக் கொண்டுவர  அமெரிக்காவிற்கு  கணிசமான இராணுவத் தீர்வுகள் உள்ளன” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், “அமெரிக்கா மோதல் போக்கை விரும்பவில்லை, ஆனால், தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்”, என்று ஹேலி, வட கொரியாவை எச்சரித்தார்.

 எமது பலங்களில் ஒன்று, நாம் கணிசமான இராணுவ சக்திகளைக் கொண்டுள்ளது. தேவைப்பட்டால் நாம் அவற்றைப் பயன்படுத்துவோம். ஆனால் அந்த திசையில் செல்ல வேண்டும் என்று நாங்கள் இதுவரை விரும்பவில்லை

என்று அவர் கூறினார்.

இதனிடையில், அமெரிக்காவும் அதன் நேச நாடான தென் கொரியாவும் கூட்டாக ஜப்பானியக் கடலில் ஏவுகணைப் பரிசோதனை செய்துள்ளன.

போர் நிறுத்தம் போராக மாறாமல் இருப்பதற்குக் காரணம் சுயகட்டுப்பாடுதான் காரணம்; ஆனால் அந்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என அமெரிக்க- தென்கொரியக் கூட்டணி தெரிவித்துள்ளது. வடகொரியா வேறுமாதிரியாக நினைத்தால் அது மோசமான தவறாக மாறிவிடும் என்று இக் கூட்டணி தெரிவித்தள்ளது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் விடுவிக்கப்பட்ட மாணவர் ஓட்டோ மரணம் : வ.கொ. அரசுக்கு டிரம்ப் கண்டனம்

வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் சென்ற வாரம் விடுவிக்கப்பட்ட 22 வயது மாணவர் ஓட்டோ வார்ம்பியர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரியாவில் கொடுங்கோலாட்சி நடக்கிறது என்று கண்டனம் தெரிவித்தார்.  இன்று வெள்ளை மாளிகையில் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது :

பல கெட்ட காரியங்கள் நடந்துள்ளன. ஆயினும் நாம் அவரை அவருடைய  பெற்றோருடன் சேர்த்துவைக்கும் அளவாவது முடிந்தது. அது ஒரு மிருகத்தனமான ஆட்சி. ஆயினும் நாம்மால் அதை கையாள முடியும்.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் தில்லெர்சன் கூறுகையில், “ஓட்டோ வார்ம்பியர்  அநியாயமாக சிறையில் அடக்கப்பட்டதற்கு  அமெரிக்கா, வட கொரியாவையே பொறுப்பாளியாக்குகிறது” என்று குறிப்பிட்டார்.

 

Share