Categories
இந்தியா கர்நாடகா தலைப்புச் செய்திகள் மாநிலங்கள்

பெங்களூரு நகரின் முழுமையான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

பெங்களூரு நகரின் முழுமையான புதிய மெட்ரோ ரயில் சேவையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கட்டுமானம் 10 ஆண்டுகளுக்கு முன்  தொடங்கப்பட்டது.

நகரில் உள்ள 4 திசைகளையும் இணைக்கும் வகையில் கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு திசைகளில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது 18.10 கிலோ மீட்டர் நீளத்திற்கு கிழக்கு-மேற்கு திசையில் பையப்பனஹள்ளி-நாயண்டஹள்ளி இடையே பாதை அமைக்கப்பட்டு, அதில் கடந்த ஆண்டு முழுமையான சேவை தொடங்கப்பட்டது.

அதே போல் 24.20 கிலோ மீட்டர் நீளத்திற்கு வடக்கு-தெற்கு திசையில் நாகச்சந்திரா முதல் எலச்சனஹள்ளி வரை பாதை அமைக்கும் பணிகள் தற்போது தான் முடிந்தது. இதில் நாகச்சந்திரா-சம்பிகே ரோடு இடையே பாதை அமைக்கப்பட்டு அதில் ஏற்கனவே மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இப்போது சம்பிகே ரோட்டில் இருந்து எலச்சனஹள்ளி வரை பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது. அத்துடன் முதல் கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன.

இதையடுத்து நாகச்சந்திரா-எலச்சனஹள்ளி பசுமை பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா மற்றும் முதல் கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட முழுமையான சேவை தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு, முதல் கட்ட திட்டத்தின் முழுமையான மெட்ரோ ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

 

Share