Categories
ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் உடல்நலம் மூலிகைகள்

மலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள் – டான்டேலியன்

பொதுவாக முற்றத்தில் வளரும் களைச் செடியான டான்டேலியன் அதன் மருத்துவ குணங்களால் பண்டைக்காலத்திலிருந்தே
ஒரு மூலிகையாக கருதப்படுகிறது. ஹோமியோ மருத்துவத்தில் இது ஒரு சக்திவாய்ந்த டையூரிடிக் (Diuretic -சிறுநீர்ப் பெருக்கி)ஆக உபயோகப்படுத்தப் படுகிறது.

கல்லீரல் மற்றும் பித்த கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்களையும் சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.

இந்த இயற்கை மூலிகையை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துமூலிகை தேநீராக குடிப்பதால் மலச்சிக்கலை குணமாக்க முடியும். டன்டேலியன் தேநீர், ஒரு லேசான மலமிளக்கியாகவும், நீர்ப்பிடிப்புக்கான ஒரு தீர்வாகவும் பயன்படுத்தப்படலாம். குடலின் இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கவும் பயன்படுகிறது.


Share