Categories
இந்தியா உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

காஷ்மீரில் சீன துருப்புக்கள் நுழையலாம் : சீன நிபுணர் சொல்கிறார்

சீனா – பூட்டான் நாடுகளிடையேயுள்ள தர்க்கத்தின் அடிப்படையில் இந்திய ராணுவம் டோக்லாமில் நுழைந்த வாதத்தை முன்வைத்து காஷ்மீர் இந்திய எல்லைக்குள் தனது நாட்டின் துருப்புக்கள் நுழைய முடியும்  என்ற தலைப்பில் ஒரு சீன நிபுணர் வாதிட்டார். சீன அரசின் பத்திரிகையான குளோபல் டைம்ஸில் அவர் மேற்படி வாதத்தைக் கொண்டுள்ள கட்டுரையை எழுதியுள்ளார்.

இந்தியா டோக்லாம் பகுதிக்கு ராணுவத்தைக் கண்டித்து அவர் வெளியிட்ட பல வாதங்களில் மேற்படி வாதமும் ஒன்றாகும். இந்தியா இதுகுறித்தான தனது நிலையை முன்பே தெரிவித்திருந்தது.

சீனாவின் மேற்கு சாதாரண பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையத்தின் இயக்குனர் லோங் ஜிங்சுங், குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான தனது கட்டுரையில் கூறியதாவது:

சீனாவைப் பொறுத்தவரையில் மேற்கு நாடுகளைப் பற்றி கவலைப்படாமல், பெய்ஜிங், டோக்லாம் சர்ச்சைகளை சர்வதேசமயமாக்க முடியும்; ஏனென்றால் மேற்கத்திய நாடுகள் சீனாவுடன் அதிக அளவில் தொழில் முறை நட்புறவைக் கொண்டுள்ளன

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை மற்றும் வட கொரிய பிரச்சினையில் சீனா மீது அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட பிரச்சனைகளில் , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய நடவடிக்கைகள் சீனாவின் வணிக திறன்களால் மேற்கத்திய நாடுகள் (சீனாவுக்குச் சார்பாக) இறங்கி வரவில்லை என்பதை எளிதாகக்  காண முடிகிறது.

 

 

Share
Categories
இந்தியா காஷ்மீர் தலைப்புச் செய்திகள்

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 6 போலிஸாரை கொன்றனர்

முன்னெப்போதும் இல்லாத கொடூரத்துடன் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் காஷ்மீரில் 6 போலிஸாரை கொன்று அவர்களது முகங்களை துப்பாக்கிக் குண்டுகளால் சிதைத்திருக்கின்றனர்.

ஆனந்த்நாக் மவட்டத்தில் அசாபால் பகுதி தாஜிவாரா என்ற இடத்தில்  நேற்று மாலை, போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், சப் இன்ஸ்பெக்டர் பெரோஷ் உள்ளிட்ட 6 போலீசார் பலியானதாக போலீஸ் டிஜிபி வைத் கூறி உள்ளார். பலியான பெரோஷ் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர். அவருடன் சென்ற டிரைவர் மற்றும் 4 காவலர்கள் பலியாகி உள்ளனர்.

இச்சம்பவம் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜுனைத் மாட்டூ என்பவனை பாதுகாப்புப் படையினர் கொன்ற சில மணி நேரங்களில் நடந்துள்ளது. ஆகவே இது லஷ்கரின் வஞ்சம் தீர்க்கும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.

Share
Categories
இந்தியா காஷ்மீர் தலைப்புச் செய்திகள்

காஷ்மீரில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் : பாதுகாப்பு படையினர் பலர் காயம்

காஷ்மீரில்  4 மணி நேரத்தினுள் வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதில் 13 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் வடக்குக் காஷ்மீரில் 5 தாக்குதல்களையும் தெற்கு காஷ்மீரில் ஒரு தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

Share