Categories
இந்தியா உணவுப்பொருள்கள் ஜி.எஸ்.டி. தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஜி.எஸ்.டி.யின் தாக்கம் : ஹோட்டல் உணவுப் பொருள்கள் மற்றும் சினிமா கட்டணங்கள் விலை உயர்ந்தன

புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஜி.எஸ்.டி.யினால் ஹோட்டல்களில் விற்பனையாகும் உணவுப்புருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. குளிர்சாதன வசதியுடைய ஹோட்டல்களில் 18% சேவை வரியும் இல்லாத ஹொட்டல்களில் 12 % சேவை வரியும் விதிக்கப்படுவதால், இட்லி உள்ளிட்ட அனைத்து விதமான உணவுப்பண்டங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ரூ. 5 -க்கு விற்கப்பட்ட இட்லி தற்போது ரூ. 22 வரை விற்கப்படும் என்று தெரிய வருகிறது.

இதுபோல, தியேட்டரில் டிக்கெட் கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுகின்றது. ரூ. 100-க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், ரூ.100 -க்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யும் தியேட்டர்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது. தியேட்டர் கட்டணங்கள் மீது விதிக்கப்படும் வரியும் பொதுமக்களை பாதிப்பதோடு அல்லாமல் சினிமா துறையையும் பாதிக்கும்.  ஏனென்றால் தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப்பண்டங்களின் விலையும் உயருகிறது. வெளியில் இருந்து கொண்டு வரும் பொருள்களுக்கு தியேட்டர்களில் அனுமதியில்லாததால், இது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவையெல்லாம் திருட்டு விசிடி அதிகரிக்கவும் ஆன்லைனில் படம் பார்ப்பதை அதிகரிக்கவுமே வழி வகுக்கிறது.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் வங்கி வர்த்தகம்

பணமதிப்பு நீக்கத்தால் வங்கித்துறைக்கு கடும் இழப்பு: பாரத ஸ்டேட் வங்கி

சென்ற ஆண்டு நவம்பர் மாத்தில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.

இந்த நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வங்கித் துறையில் நீண்ட கால பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.15,000 கோடி மதிப் புள்ள பங்குகளை விற்பதற்கான நிறுவன முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஸ்டேட் வங்கி  இந்த கருத்தினை தெரிவித்திருக்கிறது.

இதன் காரணமாக வங்கிகள் மற்றும் மற்ற கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நிகர வட்டி வரம்பு மற்றும் இதர வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பணமதிப்பு நீக்க முடிவால் நிலையில்லாத் தன்மை ஏற்பட் டுள்ளது. வங்கித் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாக முதலீட்டாளர்களிடம் விளக்கி யுள்ளது. மேலும் பணமதிப்பு நீக்கத்தால் தொடர்ந்து இந்திய பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. இதனால் வங்கித் துறை கடுமையாக பாதிக்கப் படலாம் எனவும் கூறியுள்ளது.

Share