Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் ரஷ்யா

ஜி-20 : டிரம்ப் – புடின் முதல்முறையாக சந்திப்பு

ஜி-20 உச்சி மாநாட்டின்போது முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை பரிமாறி கொண்டார்.

ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக சந்தித்தனர் – இரு நாடுகளுக்கு இடையிலான பல்வெறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

வெளியுறவு விவகாரங்களில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரம் வரை, பல விஷயங்களைப் பற்றியும் இரு தலைவர்களும் கலந்துரையாடினார்கள். அவர்களின் உரையாடல் திட்டமிடப்பட்ட 35 நிமிட நேரத்தைவிட கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் நீட்டப்பட்டது.

“ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும், மற்றும் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களை நாங்கள் நன்முறையில் எதிர்நோக்குகிறோம்,” என்று டிரம்ப் புட்டினுடனான அவரது சந்திப்பில் தெரிவித்தார்.

புடின் கூறும்போது: “உக்ரேன், சிரியா, சில இருதரப்பு பிரச்சினைகள் முதலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது”, என்றார்.

 

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா தலைப்புச் செய்திகள் பயணத் தடை

அமெரிக்காவில் டிரம்பின் பயணத்தடை அமலுக்கு வருகிறது

அமெரிக்க அதிபர் டிரம்பின் நிறைவேற்று அதிகாரத்தில் வெளியிடப்பட்ட பயணத்தடையில், உச்ச நீதிமன்றம் அனுமதித்த பகுதிகள் இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது. பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழ்கின்ற 6 நாடுகளின் பிரஜைகளுக்கும், அகதிகளுக்கும் புதிய விசா வரையறை பின்பற்றப்படும்.

இந்த நாடுகளை சேர்ந்தோரும், அகதிகளும் இனிமேல் அமெரிக்கா விசா பெறுவதற்கு, அமெரிக்காவோடு நெருங்கிய குடும்ப அல்லது வர்த்தகத் தொடர்புகள் கொண்டவராக இருக்க வேண்டும் என்று இந்த புதிய வரையறை வலியுறுத்துகிறது.

இரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாட்டு மக்களை பாதிக்கின்ற இந்த விதிமுறைகள் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன.

அதிபர் டொனால்ட் டிரம்பின் பயணத்தடை உத்தரவின் ஒரு பகுதியை உச்ச நீதிமன்றம் அனுமதித்த பின்னர், இந்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகள்படி, நெருங்கிய உறவுமுறையுடைய பெற்றோர், மனைவி, குழந்தை, மருமகன் அல்லது மருமகள், அல்லது அவர்களின் குழந்தைகள் ஆகியோரை தவிர இந்த ஆறு நாடுகளை சேர்ந்த ஏனையோர் அடுத்து வரும் 90 நாட்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, செல்லுபடியாகும் விசாக்கள் வைத்திருப்போர் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள்.

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள்

டிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது

திங்களன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர்  டிரம்ப் அறிவித்த, ஆறு பெரும்பான்மை முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பயணத் தடை ஏற்படுத்தும் உத்தரவின் முக்கிய பாகங்களை மீண்டும் நிலைநிறுத்தி உள்ளது. இது குறித்தான முழு வாதங்களையும் இலையுதிர் காலத்திலிருந்து (அக்டோபர் மாதம்) கேட்கப்படும் என்றும் கூறியது. இது அதிபர் டிரம்பின் நிர்வாகத்திற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப் படுகிறது.

முன்னதாக, டிரம்பின் இப்பயணத் தடை உத்தரவுகள் 9 வது சுற்று நீதிமன்றங்களினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தன.

தீர்ப்பில், “ஒரு நற்பெயர் கொண்ட அமெரிக்கருடனோ அல்லது ஒரு அமெரிக்க  நிறுவனத்துடனோ சம்பத்தப்பட்ட நபர் ஒருவர் அகதி எனும் பெயரில் நாட்டுக்குள் நுழையும் போது  தடுக்கப்படுவதால் ஏற்படும்  கஷ்டங்களை சட்டபூர்வமாக  கூறுவதில் பிரச்சனையில்லை.” , என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், “இந்த தனிநபர்களையும், நிறுவனங்களையும் பொறுத்தவரை, நாம் பயண உத்தரவுகளைத் தடை செய்ய இயலாது. ஆனால் அமெரிக்க நாட்டுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத அகதிகளுக்கு, நாட்டினரின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, நாம் அரசாங்கத்தின் ஆணையை   ஆதரிக்க வேண்டியிருக்கிறது”, என்றும் உச்ச நீதிமன்ற குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா இந்தியா தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

அமெரிக்காவில் மோடி : இன்று டிரம்புடன் பேச்சுவார்த்தை

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று முன்தினம் போர்ச்சுக்கல் சென்றடைந்த மோடி, அந்நாட்டு பிரதமர் அன்டோனியோ காஸ்டாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இதில் இரு நாடுகள் இடையே, வர்த்தகம், விண்வெளி, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

நேற்று காலை அமெரிக்கா வந்தடைந்த மோடிக்கு, தலைநகர் வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மோடியைக் குறித்து,  ‘உண்மையான நண்பருடன் இருதரப்பு முக்கிய பிரச்னைகள் குறித்து பேச அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கிறேன்’ என  டிவிட்டரில் பதிவிட்டார்.


பயணத்தின் முதல் நாளான நேற்று, அமெரிக்காவின் 20 முன்னணி நிறுவன சிஇஓக்களுடன் வட்ட மேஜை மாநாட்டில் மோடி பங்கேற்றார். இதில், ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக், வால்மார்ட் தலைவர் மெக்மில்லன், கார்டர் பில்லரின் ஜிம் உம்பிலிபை, கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட்டின் சத்ய நாதெள்ளா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Share