Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் மாநிலங்கள் மேற்கு வங்காளம்

டார்ஜிலிங்கில் போலீஸ் நிலையம் முற்றுகை : மீண்டும் போராட்டம்

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மலைப்பகுதியை தனி மாநிலமாக்க கோரி கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இதன் காரணமாக அங்கு இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

 

முழுஅடைப்பு போராட்டம் நடந்து வருவதால் மருந்துகடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தொண்டர் டாசி பூதியா (வயது 28) என்பவர் மருந்து வாங்க கடைக்கு சென்றார். அப்போது, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

 

ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் சோனாடா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மீது அவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். நிலைமை மோசமானதால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும், வன்முறையை கட்டுப்படுத்த ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இதனால் அனைவரும் சிதறி ஓடினர்.

 

அப்போது சிலர் அங்கிருந்த போக்குவரத்து சோதனைச்சாவடியை தீ வைத்து எரித்தனர். இதற்கிடையே பாதுகாப்பு படையினர் யாரையும் சுட்டுக்கொல்லவில்லை என்று அரசு மறுத்து உள்ளது.

 

இதுகுறித்து மாநில சுற்றுலாத்துறை மந்திரி கவுதம் தேவ் கூறுகையில், ‘கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சித்தொண்டரை யாரும் சுட்டுக்கொல்லவில்லை. அது எதிர்பாராமல் நடந்த இறப்பு. போலீசாரும், பாதுகாப்பு படையினரும் சட்டம்-ஒழுங்கை பராமரித்து வருகிறார்கள்’ என்று தெரிவித்தார்.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் மாநிலங்கள் மேற்கு வங்காளம்

டார்ஜீலிங்கில் கலவரம்: ஒருவர் பலி; 36 பேர் படுகாயம்

டார்ஜீலிங்கில் ஜூன் 9 ம் திகதி தொடங்கிய  தனி மாநில கோரிக்கையைத் தொடர்ந்து நடைபெறும்  வன்முறையின்  தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினருக்கும் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா ( GJM)-வினருக்கும் நடந்த மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 36 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா ( GJM) தலைவர்கள் தங்கள் தரப்பில் 3 பேர் இறந்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோர்கா ஜன்முக்தி மோர்ச்சாவினரின் போராட்டங்கள் “வடகிழக்கு மற்றும் சில வெளிநாட்டு நாடுகளின் கிளர்ச்சி குழுக்கள் ஆதரவுடன் ஆழமான வேரூன்றி சதி வேலை” என்று கூறினார்.

வெள்ளிக்கிழமை இரவு ஜி.ஜே.எம் இன் உதவி பொது செயலாளரான பினய் தமங் வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியதுடன், டார்ஜீலிங்கைச் சேர்ந்த ஜி.ஜே.எம் எம்.எல்.ஏ. அமார் ராய் மகன் விக்ரம் ராய் என்பவரை கைது செய்தனர். அதன் பின்னரே இந்த வன்முறைப் போராட்டங்கள் துவங்கின.

 

Share