Categories
இந்தியா தலைப்புச் செய்திகள்

பாஜக-வுக்கு தனி 500 ரூபாய் நோட்டா ? காங்கிரஸ் புகார்

இன்று ராஜ்யசபாவில் இரண்டு வெவ்வேறு விதமாக ரூபாய் நோட்டுக்கள் பிரிண்டிங் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் சரத்யாதவ் இதுதொடர்பான ரூபாய் நோட்டுகளின் மாதிரிகளை காட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெரிக் ஒ’பிரையன் உள்பட சில உறுப்பினர்களும் 500 ரூபாய் நோட்டுகளை காட்டினர்.
காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் பேசியதாவது: மத்திய அரசு ஏன் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை எடுத்தது ஏன் என இப்போது தான் எங்களுக்கு தெரியவருகிறது. ரிசர்வ் வங்கி இரண்டு விதமான ரூ.500 நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது. இதன் வடிவம் மற்றும் அமைப்பு வெவ்வேறாக உள்ளது. இது எப்படி சாத்தியம் என்றார். அது குறித்து மாதிரி படத்தை காட்டினர்.
ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸின் குலாம் நபி ஆசாத், இது நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்று குற்றம் சாட்டினார்.
அருண் ஜெட்லி பேசுகையில் விதிமுறைகளில் எந்தஒரு ஷரத்தும் கிடையாது எந்தஒரு பேப்பரையும் காட்டுவதற்கு என்றார். இப்போது நடந்துக் கொண்டு இருக்கும் பூஜ்ஜிய நேரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றார் அருண் ஜெட்லி.
மாநிலங்களவை தேர்தலில் நோட்டா கொண்டுவரப்பட்டது தொடர்பாக அவர்கள் முதலில் பேசினார்கள், பின்னர் அவர்கள் ஆட்சியின் போதுதான் இந்த விதிமுறையானது கொண்டுவரப்பட்டது என்பதை தெரிந்துக் கொண்டார்கள் என்பதை ஜெட்லி சுட்டிக் காட்டினார்.
சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இவ்விவகாரத்தில் ஆசாத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உடன் வாதம் நீடித்த நிலையில், இந்த ரூபாய் நோட்டுக்களை எங்கிருந்து பெற்றீர்கள் என ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக நோட்டீஸ் கொடுக்க சபாநாயகர் கேட்டுக் கொண்டார். இவ்விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக அவை அடுத்தடுத்து ஒத்திவைக்க நேரிட்டது.
Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள்

சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படவில்லை: மத்திய அமைச்சர்

சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படவில்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு மானியம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ராஜ்யசபாவில் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து விளக்கமளித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், எரிவாயு மானியம் ரத்து தொடர்பான எம்.பி-க்களின் அமளி தேவையற்றது என்றார். சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது என்ற அவர், மானியம் முறைப்படுத்தப்பட்டு வழங்கப்படும் என்றார். யார் யாருக்கு சமையல் எரிவாயு மானியம் வழங்குவது என்பது குறித்து முறைப்படுத்தப்படும் என்றார். யாருக்கு சமையல் எரிவாயு மானியம் தேவைப்படுகிறது, யாருக்கு தேவைப்படவில்லை என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.

முன்னதாக வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிணடருக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை 2018 மார்ச் மாதத்துடன்   முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. மேலும் 2018 ஏப்ரல் முதல் மாதந்தோறும் சமையல் எரிவாயுவின் விலையை ரூ.4 கூட்டிக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்திகள் நாட்டு மக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில் இவ்விகாரத்தை கையிலெடுத்த எதிர்கட்சிகள் இன்று மாநிலங்களைவைில் கடும் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடதத்க்கது.

Share
Categories
இந்தியா கட்சிகள் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

பாஜக பல மானிலங்களில் நடத்தும் குதிரை பேர அரசியலின் விளைவாக ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெறுகிறது

பீகார், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு மானிலங்களில் பா.ஜ.க.வினால் நிகழ்த்தப்படும் குதிரைபேர அரசியலின் விளைவாக, பா.ஜ.க.வுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ராஜ்யசபாவில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. இதில் பெரும்பான்மை பெற, 123 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு தற்போது, 80 எம்.பி.,க்களின் ஆதரவு தான் உள்ளது. பீகாரில் சில நாட்களுக்கு முன் பா.ஜ.க.வின் பின்புல வேலைகளால் கூட்டணி மாற்றம் ஏற்பட்டது. நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி அரசு உருவாகி உள்ளது. எனவே, ஐக்கிய ஜனதா தளத்தின், ஒன்பது எம்.பி.க்களின் ஆதரவை சேர்த்தால், தே.ஜ., கூட்டணி அரசின் பலம், 89 ஆக உயரும். இதுபோலவே பாஜகவின் குதிரைபேர அரசியலினால்  குஜராத்தில் பல எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறும் ச்ச்ழல் இருக்கிறது. இங்கிருந்து  அமித்ஷா, ஸ்மிருதி இரானி மற்றும் காங்., கட்சியில் இருந்து பறிக்கப்பட உள்ள ஒரு இடம் ஆகிய மூன்றை சேர்த்தால், அரசின் பலம், 91 ஆக உயரும்.

தமிழகத்தில் பா.ஜ.க.வின் கண்ட்ரோலில் இயங்கும் அ.தி.மு.க. , ஒரிஸ்ஸாவின் பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷட்ரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்., இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளிடம், 26 எம்.பி.க்கள் உள்ளனர். இந்த கட்சிகள் பெரும்பாலும் ஆளும் அரசை தான் ஆதரித்து வருகின்றன. எனவே, இதையும் சேர்த்தால், பா.ஜ.க.வின் பலம், 117 ஆக உயரும். இத்துடன் நான்கு நியமன எம்.பி.,க்களின் ஆதரவை சேர்த்தால், பா.ஜ.க.வின் பலம், 121 ஆக உயரும். இதனால் கிட்டத்தட்ட, பெரும்பான்மையான, 123 எம்.பி.,க்களின் எண்ணிக்கையை நெருங்கிய விஷயமாகும். உ.பி.,யில் நடக்கும் தேர்தல் மூலம், 9 எம்.பி.,க்களில் எட்டு எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால், பீஹாரில் அடுத்த ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு சற்று பின்னடைவு ஏற்படும் என கருதப்படுகிறது. தற்போது அந்த மாநிலத்தில், பா.ஜ.க.வுக்கு இரண்டு, ஐக்கிய ஜனதா தளத்திற்கு, நான்கு எம்.பி.க்கள் உள்ளனர்.

Share