Categories
சினிமா தமிழ் சினிமா ரஜினிகாந்த்

கேளிக்கை வரி தொடர்பாக தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

சினிமா டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரியும், தமிழக அரசு 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதித்து இருப்பது தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேளிக்கை வரியை ரத்து செய்து திரையுலகை காப்பாற்ற நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று பட உலகினர் பலர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பதிவிட்டனர். ரஜினிகாந்த் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அடுத்த வாரம் அவர் சென்னை திரும்ப திட்டமிட்டு உள்ளார்.

இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கேளிக்கை வரி குறித்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ரஜினிகாந்த் கருத்து பதிவிட்டு உள்ளார்.

டுவிட்டரில், “தமிழ் திரையுலகில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்கள் கோரிக்கையை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு உள்ளார்.

திரைப்படத்துறைக்காக அரசுக்கு கோரிக்கை விடுத்த ரஜினிகாந்துக்கு, கமல்ஹாசன் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “திரைப்படத்துறைக்காக அக்கறையோடு குரல் கொடுத்த ரஜினிகாந்துக்கு நன்றி. முதலில் அரசுக்கு கோரிக்கை வைப்போம். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கமல்ஹாசன் கருத்து பதிவிட்டு இருக்கிறார்.

Share
Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா ரஜினிகாந்த்

திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா : டி. ராஜேந்தர்

லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவரும்  டைரக்டருமான டி. ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா என வினவியுள்ளார். சினிமா மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ரஜினி குரல் கொடுக்காதது ஏன்   அரசியல்வாதிகள் சேவை செய்யும் போது எங்களுக்கு ஏன் சேவை வரி என வினவினார். சினிமா டிக்கெட் விலையை அதிகரிக்கும் முடிவில் தான் முரண்படுவதாக கூறியுள்ளார்.

Share
Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா ரஜினிகாந்த்

ஜூலை மாதம் அரசியலில் இறங்குவாரா ரஜினி ?

நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு தருணங்களில் தான் அரசியலில் குதிக்கப் போவதாக சூசகமான தகவல்களை வெளியிடுவதும், பிறகு அரசியலில் தற்போது இறங்கவில்லை என்பதுவும் நாம் அறிந்ததே. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி “நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக  இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார்.

எனவே, அவர் அரசியலுக்கு வருவது நிச்சயம் என அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுபற்றி கர்நாடகாவில் வசிக்கும் ரஜினியின் அண்ணன் சத்யநாரயணா, செய்தியளர்களிடம் கருத்து தெரிவித்த போது “ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். ஊழலை அகற்றவே ரஜினி அரசியலுக்கு வர  விரும்புகிறார். இதுதான் மக்களின் விருப்பமும் கூட. இதுகுறித்து அவர் தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் கருத்து கேட்டு வருகிறார். அனைவருமே அவர் அரசியலுக்கு வரவேண்டும் என கூறி வருகின்றனர். வருகிற ஜூலை மாதம் அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார்” என கூறினார்.

இதன் மூலம், ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதில் உறுதியாகியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது ரஜினிகாந்தின் அடுத்த படமான “காலா”-வைப் பிரபலப்படுத்துவதற்கான உத்தியோ என்றும்  சிலர் கருதுகிறார்கள்.

Share
Categories
கட்சிகள் தமிழகம் பா.ஜ.

ரஜினிக்கு எங்களுடைய கதவு எப்போதும் திறந்தே இருக்கும் பா.ஜனதா

ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசிஉள்ள நிலையில் எங்களுடைய கதவு ரஜினிக்கு எப்போதும் திறந்தே இருக்கும் என கூறி பா.ஜனதா தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்து உள்ளார்.
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரஜினிக்காக பா.ஜனதாவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். நல்ல மக்கள் யார் வேண்டு மானாலும் பா.ஜனதாவில் வந்து சேரலாம் என்றார் அமித் ஷா. ரஜினி காந்த் அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அமித் ஷா, எப்போதும் எங்களுடைய கட்சிக்கு சூப்பர் ஸ்டாரை வரவேற்போம் என்றார். ரஜினிகாந்த் அரசியல் விஷயங்களில் முன்நோக்கி நகர்வதற்கு முன்னதாக அவர் அரசியலில் இணைய வேண்டும் என்றும் பேசிஉள்ளார் அமித் ஷா.
Share
Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா ரஜினிகாந்த்

நான் பச்சைத் தமிழன்தான் : ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் கடந்த மே 15ஆம் தேதி முதல் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துவருகிறார். முதல் நாளில் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் சிறிது நேரம் பேசினார் ரஜினி. அதற்குப் பிறகு, இன்றும் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் பேசினார் ரஜினிகாந்த்.

கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்துவரும் தான், பச்சைத் தமிழன்தான் என்றும் தமக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அந்த எதிர்ப்புகளின் மூலம் உதவிக்கொண்டிருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

“முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில், அரசியலுக்கு வருவது குறித்து நான் தெரிவித்த சில கருத்துக்கள் பெரும் விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகின. எதிர்ப்புகள் இருக்க வேண்டியதுதான். சமூக வலைதளங்களிலும் இது குறித்து கடுமையாகப் பேசினார்கள். அதில் எழுதியிருந்த வாசகங்களைப் பார்த்து நான் வருத்தப்படவில்லை. ஆனால், நம் தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்கள் என்று தோன்றியது” என்று குறிப்பிட்டார் ரஜினி.

மேலும், “ரஜினிகாந்த் தமிழரா என்ற கேள்வி வருகிறது. எனக்கு இப்போது 67 வயதாகிறது. 23 ஆண்டுதான் நான் கர்நாடகத்தில் இருந்தேன். மீதி 44 ஆண்டுகள் நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன். கர்நாடகத்திலிருந்து, மராட்டியத்திலிருந்து வந்திருந்தாலும் நீங்கள்தான், பெயரும் புகழும் கொடுத்து அன்பைக் கொடுத்து நீங்கள் என்னைத் தமிழனாகவே ஆக்கிவிட்டீர்கள். நான் பச்சைத் தமிழன். என்னுடைய மூதாதையர்கள், அப்பா எல்லாம் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்கள்” என்று தெரிவித்த ரஜினி, “என்னை இங்கிருந்து போ என்று தூக்கிப்போட்டால் இமயமலையில்தான் போய்விழுவேன். ஏனென்றால் நல்ல மக்கள் உள்ள தமிழகத்தில் இருக்க வேண்டும் அல்லது சித்தர்கள் வாழும் இமயமலையில் இருக்க வேண்டும்” என்றார்.

Share