Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள்

இந்திய ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் கோவிந்த் முன்னிலை

இந்திய ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வருகிறார்.

இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடந்தது. இதில், மொத்தம் 99 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த நிலையில், பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, ராம்நாத் கோவிந்த் 4,79,585 வாக்குகளையும் , மீரா குமார் 2,045,94 வக்குக்களையும் பெற்றுள்ளனர்.

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள் தேர்தல் ஆணையம்

இந்திய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது; ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு

இந்தியா முழுவதும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. பாஜ.க. கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். தற்போதைய கட்சிகளின் பிரதிநிதித்துவ அடிப்படையில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு சட்டப்பேரவை செயலாளார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவார். சென்னையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு சென்னை தலைமைச் செயலக சட்டப்பேரவை செயலாளர் அறைக்கு அருகே உள்ள கூட்டரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்காளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த பிங்க் நிற வாக்குச்சீட்டு வழங்கப்படும். வாக்குச்சீட்டில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பெயரும் அவர்களுக்கான எண்ணும் அச்சிடப்பட்டிருக்கும்.

வாக்குப்பதிவு செய்யும் அரங்கில் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என்ற அடிப்படையில் இரண்டு முகர்வர்கள் அமர்ந்திருப்பர். வாக்களிக்கும் உறுப்பினர்கள், வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு நேராக உள்ள எண்ணை மட்டும் தேர்வு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கும் பேனாவைக் கொண்டே இந்த எண்ணை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், வேறு பேனாக்களை பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச்சீட்டில் கையொப்பமோ, வேறு குறியீடோ எழுதப்பட்டால் வாக்கு செல்லாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவடைந்தவுடன் வாக்குபெட்டி சீல் செய்யப்பட்டு அன்று இரவோ அல்லது அடுத்த நாள் காலையோ பாதுகாப்பாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Share
Categories
இந்தியா கட்சிகள் குடியரசு தலைவர்

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த கூட்டணி கட்சிகளுக்கு மீரா குமார் நன்றி தெரிவித்தார்

புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 14 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

எதிர்கட்சிகள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக  மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக வேட்பாளர் ராம்நாத்தை எதிர்த்து மீராகுமார் போட்டியிடுகிறார். அனைத்து கட்சிகளும்  மீராகுமாருக்கு ஆதரவு அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த கட்சிகளுக்கு மீரா குமார் நன்றியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று 17 கூட்டணி கட்சிகள் என்னை ஒருமனதாக ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்தற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணத்தில் எதிர்கட்சிகளின் ஒற்றுமை எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராக மீரா குமார் தெரிவு

அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறவிருக்கின்ற இந்திய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகளின் சார்பாக மீரா குமார் தெரிவு செய்யப்பட்டார். தலித் தலைவராக இருந்த ஜக ஜீவன் ராமின் மகளும், மக்களவை முன்னாள் சபாநாயகராகவும் இருந்த மீரா குமாரை, காங்கிரஸ் உட்பட 17 கட்சிகள் ஒருமனதாக ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தனர்.

முன்னதாக, பாரதீய ஜனதாவும் அதன் தோழமைக் கட்சிகளும் பீகார் கவர்னராக பதவி வகித்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தன. ராம்நாத் கோவிந்தும் ஒரு தலித் தலைவரே. தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க. (அம்மா) மற்றும் அதிமுக (புரட்சித் தலைவி) அணிகள் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் அவருக்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தார். எனினும், தற்போது எதிர்கட்சிகளின் வேட்பாளர் அறிவிக்கப் பட்ட பின்னர், நிதிஷ் குமார், தனது ஆதரவை மாற்றிக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

Share