Categories
கன்யாகுமரி தமிழகம் மாவட்டம்

குளச்சல் அருகே படகு கடலில் கவிழ்ந்து 2 மீனவர்கள் சாவு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நடுக்கடலில் படகு கவிழந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ரசலையன், பெஞ்சமின், தாசன் ஆகிய மீன்று மீனவர்கள் பைபர் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

குளச்சலில் இருந்து ஒன்றரை கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ராட்சத கடல் அலை தாக்கியதில் படகு கவிழ்ந்தது. கடலில் தத்தளித்த மூன்று மீனவர்களில், ரசலையன் மட்டும் கடலில் நீந்திக் கரை சேர்ந்தார்.

மாயமான மற்ற இருவரையும் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை மீனவர்கள் பெஞ்சமின் மற்றும் தாசன் ஆகியோரது உடல்கள் குளச்சல் பகுதியில் கரை ஒதுங்கியது.

இதனையடுத்து மீனவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
Categories
ஈரான் தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஈரானிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

ஈரான் நாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் இன்று காலை சென்னை வந்தனர். அவர்கள் அனைவரும் தமிழகஅரசின் சொந்த செலவில், சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் துபாயில் தங்கி மீன்பிடித்து வந்தனர்.

அவர்களில் 15 பேர் ஈரான் எல்லையைத் தாண்டியதாக் கூறி, அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து 13 தமிழக மீனவர்களும்,   குஜராத்தைச் சேர்ந்த 2 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், அவர்களை மீட்க மத்திய அரசு மூலம் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தமிழக மீனவர்கள் கடந்த மாதம் 28-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, 13 மீனவர்கள் இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர்.

 அவர்களை தமிழக அரசு சார்பில் உயரதிகாரிகள் வரவேற்றனர். இதேபோல், மேலும் 2 பேர் திருச்சி விமான நிலையம் வந்திறங்கினர். பின்னர் மீனவர்கள் அனைவரும் தமிழக அரசின் சொந்த செலவில், அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Share