Categories
ஆரோக்கியம் உடல்நலம் காணொளி சிறப்புச்செய்தி மூலிகைகள்

புற்றுநோயைக் குணமாக்கும் தாவரங்கள்: 2

புற்றுநோய் நோயாளிகள் பல சமயங்களில் அலோபதியைத் தவிர்த்து, மாற்று சிகிச்சைகளைத் தேடுகின்றனர். குறிப்பாக மூலிகை வைத்தியத்தில்  இதற்கான மருந்துகள் உள்ளனவா என்று நோக்குகின்றனர்.

எஸ்ஸியக் தேநீர் (ESSIAC Tea) என்பது கனடாவில் உருவான, புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு பிரபல மூலிகை சூத்திரம். இதனை உருவாக்கியவரின் பெயர் ரெனெ கெய்ஸ் (Rene Caisse).   ரெனெ கெய்ஸ் 1920-களில் நர்ஸ்-ஆக பணிபுரியும் சமயத்தில், ஒரு செவ்விந்திய பழங்குடி மருத்துவரிடமிருந்து புற்றுநோயைக் குணமாக்கும் மருந்தைப் பற்றி அறியவந்ததாக கூறியுள்ளார்.

எஸ்ஸியக் தேநீர் நான்கு தாவர பொருட்களின் கலவையை கொண்டுள்ளது:

1) ஷீப் சோறெல் (sheep sorrel) பொடி

ஷீப் சொறல்

2) பொடிசெய்யப்பட்ட வழுக்கும் எல்ம் மரப் பட்டை (slippery elm bark)

எல்ம் மரப் பட்டை

3) பர்டோக் வேர் (Burdock root)

பர்டோக் வேர்

4) வான்கோழி ரூபார்ப் (turkey rhubarb) பொடி.

டுர்கி ரூபார்ப்

இவற்றில் டுர்கி ரூபார்ப் மற்றும் வழுக்கும் எல்ம் மரப்பட்டை ஆகியன முக்கியமான பாரம்பரிய மூலிகை மருந்துகளாகும்.

ஏஸ்ஸியக் தேநீர் தயாரிக்க தேவையானவை

செய்முறை

6 ½ கப் பர்டோக் வேர் (பொடி) (மேல் இடது)

1 பவுண்டு ஷீப் சோறெல் (sheep sorrel) பொடி (மேல் வலது)

1/4 பவுண்டு, பொடிசெய்யப்பட்ட வழுக்கும் எல்ம் மரப் பட்டை (கீழ் இடது)

1 அவுன்ஸ் வான்கோழி ருபார்ப் வேரின் தூள் (கீழ் வலது)

 

இந்த பொருள்களை முழுமையாக கலந்து, இருண்ட உலர் அலமாரியில் கண்ணாடி குடுவைகளில் சேமித்து வைக்கவும்.

ஒரு அளவிடும் கப் எடுத்து, நீங்கள் செய்ய வேண்டிய அளவைப் பொறுத்து,  32 அவுன்ஸ் தண்ணீருக்கு 1 அவுன்ஸ்  மூலிகை கலவை என்ற விகிதத்தில் அளந்து பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக 1 கப் மூலிகைக் கலவையுடன் 8 x 32 = 256 அவுன்ஸ் தண்ணீர் பயன்படுத்தலாம். 10 நிமிடங்கள் (மூடி) கடினமாக கொதிக்க வைத்து, பின் வெப்பத்தை அணைக்கவும். பின்னர் அந்த சூடான தட்டைல் அடுத்த நாள் காலை வரை அப்படியே மூடி வைத்திருக்கவும்.

காலையில் மீண்டும் ஆவி வரும்வரை சூடாக்கிய பின் ஒரு சில நிமிடங்கள் ஆறவிட்டு, பின்னர் சூடான சுத்திகரிக்கப்பட்ட பாட்டில்களில் நன்றாக வடிகட்டி ஆறவைக்கவும். இருண்ட குளிர் அலமாரியில் சேமிக்கவும். இந்த பாட்டிலை உபயோகிக்கத் திறந்தால், பின்னர்  குளிரூட்டப்பட (refrigerated) வேண்டும். இறுதியாக இருப்பவற்றை ஒரு பெரிய ஜாடியில்  ஊற்றி, இரவு முழுவதும் ஒரு குளிர்சாதன பெட்டியில் வைத்தபின்,  படிவுகள் ஏதும் இல்லாத திரவத்தை தனித்தனி பாட்டில்களில் ஊற்றவும்.

 

எஸ்ஸியாக் தேநீர் பல்வேறு வகையான நாள்பட்ட புற்றுநோய் மற்றும் வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், சிறந்த இயற்கைமுறை நச்சுநீக்கத்திற்கும்  பயன்படுகிறது.

ஆயினும், ரெனே கெய்ஸின் எஸ்ஸியாக் தேநீர் மருந்து இதுவரை எந்த FDA- அங்கீகாரம் பெற்ற மருத்துவ ஆய்வுகளில் இடம் பெறவில்லை. இது புற்று நோய் அல்லது நிலைமையைத் தணிக்கிறது அல்லது தடுக்கிறது என்று முழுமையாக நிருபிக்கப் படவில்லை. ஆனால் பலரும், இதனை உபயோகித்தபின்னர் குணமடைந்திருப்பதாக கூறியுள்லனர். ஆகவே இந்த மாற்று மூலிகை மருந்தை எடுப்பதற்கு முன் உங்கள் டாக்டரிடம் ஆலோசித்து செய்வது நல்லது.

 

 

Share
Categories
உடல்நலம் சிறப்புச்செய்தி மருத்துவ ஆய்வு மூலிகைகள்

புற்றுநோயைக் குணமாக்க உதவும் தாவரங்கள் : 1

சில தாவரங்களில் இருந்து புற்று நோயைக் குணமாக்கும் மருந்துகள் எடுக்கப்படுகின்றன என்பது பலரும் அறிந்த விஷயம்தான். ஆனால், ஒரு தாவரத்திலிருந்து மருந்து எடுக்கப்படும் செயல்முறையை உருவாக்கவும், பல நிலைகளில் சோதனை செய்து இறுதியில் அதனை மருந்தாக விற்கவும் எடுத்துக் கொள்ளப்படும் காலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும், என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

புற்றுநோய் என்பது என்ன ?

உடலிலுள்ள உயிரணுக்கள்ளான செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.

கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும்.

தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.

கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.

செல்கள் எதனால் இயல்புக்கு மாறாக கட்டுப்பாடின்றி பிரியத் துவங்குகிறது என்பது இதுவரைத் துலக்கமாக கண்டறியப்படவில்லை. ஆனால் மரபியல், சுற்றுச்சூழல் அசுத்தங்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகள் ஆகியன முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?

அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும். புற்றுநோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.

பசுமை கீமோதெரப்பி

இவற்றுள், கீமோதெரப்பியில் தாவரங்களிலிருந்து பெறப்படும் மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன.

இந்த சக்திவாய்ந்த கலவைகள் பொதுவாக விரைவாக பிரியும் செல்களைத் தாக்குகின்றன. இந்த டாக்ஸின்கள் பொதுவாக புற்றுநோய் கழலைகளை இலக்காகக் கொண்டிருந்தாலும்,  சிலசமயம் முடியை உருவாக்கும் சுரப்பிகளைப் போன்ற நல்ல செல்களையும் தாக்குகின்றன, இதனால் தற்காலிக முடி இழப்பு ஏற்படுகிறது.

பசிபிக் யூ (Pacific yew) என்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் பக்ளிடேக்ஸெல் (Paclitaxel – Taxol) என்ற  கருப்பை புற்றுநோயைக் குணப்படுத்தப்  பயன்படுத்தப்படும் மருந்து உருவாக்கப்படுகிறது. இம்மருந்து புற்றுநோய் செல்களின் விகிதங்களை வெகுவாக குறைக்கிறது.  வட அமெரிக்காவில் கிடைக்கும், அமெரிக்கன் யூ-வும் (taxus canadensis) பக்லிடாக்சல் மருந்து உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.

 

ரோசி பெரிவிங்கிள் (rosy periwinkle) என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்படுக் வின்கிரிஸ்டைன் (Vincristine)   மற்றும் வின்பிளஸ்டைன் (vinblastine) மருந்துகள்  குழந்தை பருவ லுகேமியா (leukemia) சிகிச்சையில் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகின்றன.

 

 

 

சீனாவில் வளரும் “ஹேப்பி ட்ரீ” (கேம்ப்டொத்கா அகுமினாட்டா), என்ற மரத்திலிருந்து எடுக்கப்படும்  காம்ப்டோடைசின் (Camptothecin) என்ற மருந்து சீனாவில் இரைப்பை குடல் புற்றுநோயைப் பயன்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

 

 

 

மேலும் மேயாப்பிள்(mayapple) என்றழைக்கப்படும் ஒரு உள்ளூர் காட்டு மலர் விரைவில் நுரையீரல் மற்றும் விரைப் புற்றுநோய்களுக்கான, தற்போது சோதனையிலுள்ள  எடோபாஸைடு (etoposide) என்ற மருந்துக்குத் தேவையான பாடோபிளைலோடாக்சினை (podophyllotoxin) உருவாக்க பயன்படுகிறது.

தொடரும்

 

Share
Categories
ஆரோக்கியம் தலைப்புச் செய்திகள் மருத்துவ ஆய்வு

புற்றுநோயை மரபணு மாற்றம் மூலம் சரி செய்யலாம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை ‘மரபணுவை மாற்றும் முறை’ மூலம் குணப்படுத்த முடியும் என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் புற்றுநோய் போன்ற பல கொடூர நோய்களுக்கு எளிய முறையில் சிகிச்சையளிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

புற்றுநோய் உடையவர்களின் உடலில் நோய்கான உயிரணுக்களும், சாதாரண உயிரணுக்களும் தனித்தனியே வெவ்வேறு மரபணுக்களையே கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நோய்க்கு காரணமான பெரிய அளவிலான மரபணுவை மாற்றுவதன் வாயிலாகப் புற்றுநோயின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
உடலின் எந்தப் பாகத்தில் வரும் புற்றுநோயாக இருந்தாலும் அதன் முக்கிய கட்டுப்பாட்டு மண்டலமாக இருக்கக் கூடிய மரபணுவை மாற்றுவது, மேற்கொண்டு புற்றுநோய் கட்டி உருவாவதை தடுக்கும். முதற்கட்டமாக எலிகளின் மீது இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டதில், இது சாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று உறுதிபடுத்தபட்டுள்ளது.
கரோலின்ஸ்கா நிறுவனத்தின் பேராசிரியரான ஜூஸ்ஸி டைபல் இதைப்பற்றிக் கூறுகையில், “சாதாரண மற்றும் புற்றுநோய் வளர்ச்சிக்கான உயிரணுக்கள் தனித்தனியே வளர்கிறது என்று நாங்கள் கண்டுபிடித்தவுடன் புற்றுநோய்க்கான மரபணுவை மட்டும் மாற்றுவது சாதாரண உயிரணுக்களின் வளர்ச்சிக்கு எந்த அபாயமும் விளைவிக்காததோடு, புற்றுநோயைத் தடுக்கவும் செய்யும் என்று தெரியவந்துக் கொண்டோம்” என்றார். மேலும் “இது மிகவும் குறைவான நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் புற்றுநோயின் சிகிச்சைக்கு ஒரு புதிய அணுகுமுறையைக் கொடுக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வில் மார்பக, பெருங்குடல், சிறுநீரக பை, தைராய்டு புற்றுநோய்கள் மற்றும் நாட்பட்ட லிம்போசைடிக் லுகேமியா மற்றும் மைலோமா போன்ற பல வகையான புற்றுநோய்களுக்கு இதனால் தீர்வு காணமுடியும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Share
Categories
ஆரோக்கியம் மருத்துவ ஆய்வு

புதிய ஆய்வு: மதுபானம், ஷாம்பு, அழகு சாதன பொருட்கள் புற்றுநோயை விளைவிக்கும்

நமது உடலில் சிறிது அளவு மட்டுமே சுரக்கும் ஆல்டிஹைட் எனப்படும் ரசாயனம், இன்றைய சூழலில் நம்மைச் சுற்றியுள்ள, நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் அதிகமாகக் காணப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடலில் ஏற்படும் மரபணு சேதத்தைச் சரிசெய்யும் அணுக்களின் செயல்பாடானது பாதிக்கப்பட்டு, புற்றுநோயை விளைவிக்குமாம்.

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களான மரசாமான்கள், அழகுசாதனங்கள், ஷாம்பு மற்றும் மதுபானங்களில் பொதுவாக காணப்படும் ரசாயனங்கள், இயற்கையாகவே நமது உடலில் சிறிது அளவு மட்டுமே இருக்க வேண்டிய ஆல்டிஹைடின் அளவை அதிகரிப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை இது அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் இந்திய வழி பேராசிரியரான அசோக் வெங்கடராமன் மார்பக புற்றுநோய் மரபணுவான பி.ஆர்.சி.ஏ.2-வை வைத்து மேற்கொண்ட ஆய்வில் சாதரணமாக நம்மைச் சுற்றி காணப்படும் இந்த ஆல்டிஹைட்டின் அதிகமான வெளிப்பாடு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். நம் உடல் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் தன்மையுடையது. ஆனால் இந்த ஆல்டிஹட்டின் மிகுதியால் ஏற்படும் மரபணுக்களின் சேதமானது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அதிலும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட உயிரணுக்களை உடையவர்களை இது மேலும் பலவீனம் அடையச் செய்யும்.
இதைப்பற்றி பேராசிரியர் வெங்கடராமன் கூறுகையில், “இந்த ஆய்வானது நமது தினசரி வாழ்வில் இந்த வகையான ரசாயனங்களுக்கு நாம் அதிக அளவில் வெளிப்படுத்தப்படும் பொழுது அது எவ்வாறு புற்றுநோயின் ஆபத்தை அதிகரிக்கிறது என்று அறியவும், மேலும் ஏன் பலவீனமான மரபணுக்களை உடையவர்கள் சுலபமாக புற்றுநோய் வயப்படுகிறார்கள் என்பதை விளக்கவும் ஆகும்” என்றார்.
இந்த ஆல்டிஹைட்ஸிற்கு ஒரு பொதுவான ஆதாரம் மதுபானங்களே ஆகும், நாம் குடிக்கும் மதுவானது அசிடால்டிஹைட் என்னும் ஒரு ரசாயனத்தை நம் உடலில் சுரக்க செய்து இயற்கை நொதியில் முறையை உடைக்கிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதிலும் 50 கோடிக்கும் மேலானோர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பாக ஜப்பான், சீனா மற்றும் கொரியா நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நாட்டைச் சேர்ந்த மக்கள் பொதுவாக 30-60% குறைபாடுடைய மரபணுக்களை உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள்.
Share