Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பீகார்

பீகாரில் ஆளும் மெகா கூட்டணி உடையுமா? நிதீஷ் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியை தேஜேஸ்வி யாதவ் புறக்கணிப்பு

சனிக்கிழமையன்று பாட்னாவில் முதல்வர் நிதீஷ் குமாருடன் தான் கலந்து கொள்ளவிருந்த மானில அரசு நிகழ்ச்சியொன்றை  துணை முதல்வர் தேஜஷ்வி யாதவ் புறக்கணித்ததால், பீகாரில் ஆளும் மெகா கூட்டணிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

பாட்னாவில்  இன்று அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக இருந்தது. இதன்படி, இருக்கையில் தேஜஸ்வி யாதவ் பெயர்ப்பலகையும் இடம் பெற்றிருந்தது.  அனால், தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ளவில்லை. இதன்காரணமாக அவரது பெயர், முதலில் மறைக்கப்பட்டு பின்னர் பெயர் முற்றிலுமாக நீக்கப்பட்டது. நிதிஷ் குமார் திட்டமிட்டபடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பீகாரின் மெகா கூட்டணியில் லாலு பிரசாத் யாதவ் கட்சி 80 இடங்களும், நிதிஷ்குமாரின் கட்சி 71 இடங்களும், காங்கிரஸ் கட்சி 27 இடங்களும் கொண்டுள்ளன. முதல்–மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல்–மந்திரியாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பதவி வகிக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் நிதீஷ் குமார் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்தபின், இக்கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் ஓட்டல் நிலம் பேர ஊழல் வழக்கில் தேஜஸ்வி யாதவ் மீதும், லாலு பிரசாத் யாதவ், மற்றும் குடும்பத்தினர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து நிதீஷ் குமார் வாயே திறக்கவில்லை. இதனால், கூட்டணிக்குப் பிரச்சனை ஏற்படும் என்று கருதப்பட்டது.  இருப்பினும் காங்கிரஸ் இவர்களிடையில் மத்தியஸ்தம் செய்து கூட்டணியை தொடரச் செய்வதாக கருத இடம் இருக்கிறது.

சென்ற வாரம், “எங்கள் குழந்தையை எப்படி கொல்வோம் ?”, என்று கேட்டு, பீகார் மாநிலத்தின்  மெகா கூட்டணி தொடரும் என ஜனதா தளம் (யூ) அறிவித்த அதே சமயத்தில், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன்  பேச்சுவார்த்தை  நடத்திக்கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

ஆயினும் தற்போது முதல்வர் நிதீஷ்குமார் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை தேஜஸ்வி யாதவ் புறக்கணித்ததன் மூலம் இரு கட்சிகளிடையே விரிசல் அதிகரித்து இருப்பதையே காட்டுகின்றது.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பீகார் மாநிலங்கள்

லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் மகன் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகனும் பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது,  டெண்டர் விட 3 ஏக்கர் நிலம் பெற்றதாக ஊழல் புகாரை முன்வைத்து மொத்தம் 5 வழக்குகளை சிபிஐ  இன்று பதிவு செய்துள்ளது.

பிஹாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. பாட்னா, ராஞ்சி, புவனேஸ்வர் மற்றும் குர்காவ்ன் உட்பட மொத்தம் 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில், ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது லாலு மீது பல்வேறு ஊழல் செய்தற்கான ஆதாரம் சிக்கியிருப்பதாக சிபிஐ கூறியுள்ளது.

தன் மீதான வழக்கு பதிவு செய்த சிபிஐ புகார்களை லாலு மறுத்துள்ளர். இது ‘பாஜகவின் சதி’ எனவும் லாலு கருத்து கூறியுள்ளார். இது குறித்து லாலு கூறுகையில், ”இதைக் கண்டு நானும், எனது கட்சியும் அஞ்ச மாட்டோம். அந்த டெண்டர் விடப்பட்டதில் எந்த தவறுகளும் செய்யப்படவில்லை. தனக்கு எதிராகப் பேசுபவர்களின் வாயை அடைக்க பாஜக செய்யும் வேலை இது. குறிப்பாக எனது குடும்பத்தார் தொடர்ந்து குறி வைக்கப்படுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர், “சி.பி.ஐ ஏன் சோதனையில் ஈடுபட்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். என்னை அழித்தாலும் பி.ஜே.பி மற்றும் மோடியை, ஆட்சியில் இருந்து அகற்றிய பின்னரே ஓய்வுபெறுவேன். பி.ஜே.பி-க்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைப்பதன் காரணமாகவே என்னை இலக்காக்குகிறார்கள். எனக்கு எதிராகவும் என்னுடைய குடும்பத்துக்கு எதிராகவும் அரசியல் பழிவாங்கும் செயல் நடக்கிறது. என்னுடைய எதிரிகள் என்னைச் சிறைக்கு அனுப்ப முயலுகிறார்கள்” என்றார்.

அவருக்கு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பதிலளிக்கும் விதமாக, “அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அதிகாரத்தின்படி சி.பி.ஐ தனது கடமையை செய்கிறது.” என்று கூறியிருக்கிறார்.

 

Share