Categories
இந்திய சினிமா ஈஸ்வரி ராவ் சினிமா தமிழ் சினிமா

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சி: நடிகை ஈஸ்வரி ராவ்

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது தன்னுடைய குழந்தைகளை அதிரவைத்து இருப்பதாக நடிகை ஈஸ்வரி ராவ் தெரிவித்துள்ளார்.

‘கபாலி’ வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘காலா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் ரஜினி மும்பையைச் சேர்ந்த தாதாவாக நடிக்கிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாத இறுதியில் மும்பையில் தொடங்கியது.

Tamil Actress Eswari Rao Photos
 இந்தப் படத்தில் பாலிவுட் நடிகைகள் அஞ்சலி பாட்டில், ஹூமா குரோஷி, நானா படேகர், சமுத்திரகனி, பங்கஜ் திரிபாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வரிசையில் தற்போது நடிகை ஈஸ்வரி ராவும் முக்கிய கதாபாத்திரமாக இணைந்துள்ளார். இது குறித்து  நடிகை ஈஸ்வரி ராவ் கூறியதாவது:

ரஜினிகாந்துடன் இணைந்து ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் எனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனது ரோல் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. இதில் நடிப்பதற்காக மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று கூறினார்.

Share