Categories
இந்தியா ஐகோர்ட் தமிழகம் தலைப்புச் செய்திகள்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-க்குள் முடிவு செய்ய கெடு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, எந்த இடத்தில் மருத்துவமனை அமைப்பது என்று டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கு  கெடு விதித்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், அதற்கான இடங்களை தேர்வு செய்து தெரிவிக்கவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது.  தமிழக அரசு சில இடங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆனால் அதன் பிறகு  எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான வேறு எந்த அறிவிப்பையும் மத்திய அரசு செய்யவில்லை. எந்த இடத்தில் மருத்துவமனை அமையும் என்றும் முடிவு செய்யவில்லை.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும் என்பது இதுவரை மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. இது பற்றி உரிய அறிவிப்பு வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐக்கோர்ட் நீதிபதிகள், “தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். இடத்தை ஆய்வு செய்து முடிவு செய்ய 2 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஜனவரி 1-ல் அறிவிக்கவேண்டும்” என்று  உத்தரவிட்டுள்ளனர்.

Share
Categories
ஆரோக்கியம் தமிழகம் மருத்துவ ஆய்வு

தமிழகத்தில் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு

தமிழகத்தில் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் ஜிக்கா வைரஸ் பீதி எழுந்துள்ளது. கடந்த 2007 மற்றும் 2013ம் ஆண்டுகளில் பசிபிக் பிராந்திய நாடுகளான, அமெரிக்க, பிரேசில், கொலம்பியா, ஆப்ரிக்கா என ஜிகா வைரஸ் தாக்கம் பரவ தொடங்கியது. ஆப்ரிக்காவிலும், ஆசியக் கண்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் பாதிப்பு இருந்து வந்தது.

2007ம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடலில் அருகில் உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 சதவீதம் பேரை இந்த வைரஸ் தாக்கியது. அதன்பிறகு, 2015ம் ஆண்டு மேதம் மாதம் பிரேசிலில் இந்த வைரஸ் தாக்கியதை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள சுமார் 23 நாடுகளில் ஜிகா பாதிப்பு காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தியாவில் இதன் பாதிப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தமிழகத்திலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதை சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நெட்றாபாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு இதன் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. ஜிக்கா வைரசால் பாதிக்கப்பட்ட 27 வயது இளைஞர் சிகிச்சைக்குப்பின் உடல்நலம் தேறிவருகிறார். பாதிக்கப்பட்டவரின் சிறுநீர், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Share
Categories
தமிழகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி வருகை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்ட விக்ரம் பத்ரா, தனது பணியை நேற்று தொடங்கினார். பணப் பட்டுவாடாவை தடுக்க 70 நுண் பார்வையாளர்கள் இருசக்கர வாகனத்தில் தொகுதி முழுவதும் ரோந்து செல்கின்றனர்.

பாதுகாப்பு பணிக்காக இதுவரை 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆர்.கே.நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் காலியாக உள்ள 10 சட்டப்பேரவை மற்றும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் தமிழ கத்தின் ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியும் ஒன்று. பல பகுதிகளில் தேர்தல் நடந்தாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்தான் தேர்தல் ஆணையம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அரசியல் கட்சிகள் அளிக்கும் புகார்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை களை எடுத்து வருகிறது. காவல் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் ஆர்.கே. நகரில் 5-க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். மேலும் நுண் பார்வையாளர்கள், துணை ராணு வத்தினர் ரோந்து, சிசிடிவி கண் காணிப்பு என ஆர்.கே.நகர் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.

இந்நிலையில், தொப்பி சின்னத் தில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகர னுக்கு ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு ரூ.4 ஆயிரம் வரை பணம் விநியோகிக்கப்பட்ட தாக திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தன. அதற்கான புகைப்பட, வீடியோ ஆதாரங்களும் அளிக்கப்பட்டன.

இதே புகாரை திமுக எம்.பி. திருச்சி சிவா டெல்லியில் தேர்தல் ஆணையத்திலும் அளித்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி பக்கம் முழு கவனத்தையும் தேர்தல் ஆணையம் திருப்பியுள்ளது.

Share