Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

மந்திரத்தை ஜபித்தால் சீனாவை வீழ்த்தலாம் : ஆர்.எஸ்.எஸ். யோசனை

சிக்கிம் எல்லையில் உள்ள டோகோலாம் பகுதியை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை,  ஒரு மந்திரத்தை நாள்தோறும் பூஜையின்போது ஜபிப்பதால் தடுக்க முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். யோசனை கூறியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு உறுப்பினரான, இந்தரேஷ் குமார்  பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ” ‘கைலாஷ், ஹிமாலயா, திபெத் ஆகிய பகுதிகளுக்கு, சீன ராட்சசனின் பிடியில் இருந்து விடுதலை வேண்டும்’ என, தினமும் காலையில் பூஜை செய்யும்போது, ஐந்து முறை கூற வேண்டும். ஹிந்துக்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினரும், இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

சீனா வன்முறையின் ஒரு வாக்காளியாக மாறிவிட்டது. சீனா ஒரு ஏகாதிபத்திய மற்றும் விரிவாக்க பாத்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் குமார் கூறினார். இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளின் பிராந்தியத்தை திபெத்திலிருந்து சீனா கைப்பற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.

இதனிடையே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் சீனா செல்லவுள்ளார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த வாரம் சீனா செல்லும் அவர் டோக்லாம் பிரச்சனையை எழுப்புவார் என கூறப்படுகிறது.

 

Share
Categories
இந்தியா உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

இந்தியா ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம்மை பிரிப்போம்: சீன அரசு மீடியா

இந்தியா- பூடான் – சீனாவின் முச்சந்திப்பான டோகாலம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சிகளை மேற்கொள்கிறது. பூடான் மற்றும் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறியபோது , இந்திய ராணுவம் அதனை தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் பெரும் ஆத்திரம் அடைந்து உள்ள சீனா அடாவடியான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்தியா தன்னுடைய படையை திரும்ப அழைக்க வேண்டும் என கூறி வருகிறது. இந்தியா, அமைதியான பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால் படைகளை திரும்ப பெற மாட்டோம் என கூறிவிட்டது.

இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. சிக்கிம் செக்டாரில் இருநாட்டு ராணுவத்திற்கு இடையே கடும் பதட்டம் நிலவி வரும் நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போன்று சீனாவின் அரசு மீடியாவான குளோபல் டைம்ஸ் எழுதி வருகிறது.

 

இந்தியா தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம் என கூறிஉள்ளது குளோபல் டைம்ஸ். “சிக்கிம் விவகாரத்தில் சீனா தன்னுடைய நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்யும். 2003-ம் ஆண்டைய ஒப்பந்தத்தின் போது சிக்கிம்மை இந்தியாவின் ஒரு மாநிலமாக எற்றுக் கொண்டந்தை சீன மறு பரிசீலனை செய்யும். சிக்கிம் தனிநாடு என்ற எண்ணம் கொண்டவர்கள் உள்ளனர், சிக்கிம் விவகாரத்தில் உலக நாடுகளின் பார்வை எப்படியிருக்கும் என உணர்ச்சிப்பூர்வமாக உள்ளனர்.

 

சுதந்திர சிக்கிம் என்பதற்கு சீன சமூதாயத்திலும் ஆதரவு உள்ளது, அவர்களுடைய கோரிக்கையானது விரிவடையும். சிக்கிமில் சுதந்திர போராட்டத்திற்கு வழிவகைசெய்யும்,” என சீன மீடியாவான குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது. பூடான் – இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தப்படி பூடானின் எல்லையைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. இதனால்தான் பூடான் எல்லையில் இந்தியா ராணுவத்தை நிறுத்தி உள்ளது. இதனை விமர்சனம் செய்து உள்ள குளோபல் டைம்ஸ், சமமற்ற ஒப்பந்தங்கள் மூலம் சீனா பூடானின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை இந்தியா பாதிக்கிறது, என குறிப்பிட்டு உள்ளது.

 

பூடான் மற்றும் சிக்கிமில் இந்தியாவிற்கு எதிரான இயக்கங்கள் காணப்படும், இந்தியாவிற்கு இது எதிர்மறையாக பாதிப்பை ஏற்படுத்தும் தெற்கு இமாலைய புவிசார் அரசியலை மாற்றி எழுதும் என கூறிஉள்ளது சீன மீடியா.

Share