Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் ரஷ்யா

அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற புடின் முடிவு

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற ரஷ்யாவின் அதிபர் புடின் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஜனநாயகக் கட்சியினராலும், ஊடகங்களாலும், சில குடியரசு கட்சியினராலும்  எழுப்பப் பட்டிருந்தது.

மேலும், அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும்  ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதினிமித்தம், மேற்கண்ட நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதிபர் டிரம்ப்பின் கையெழுத்திற்காக அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையால் கோபமடைந்துள்ள ரஷ்யா, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் விளைவாக, ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளில் 755 பேர் செப்டம்பர் 1-ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஷ்ய வெளியுறவுத் துறை, அங்குள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 455-ஐ தாண்டக்கூடாது என அமெரிக்கத் தூதரகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையேயான பனிப்போரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் சீனா தலைப்புச் செய்திகள் ரஷ்யா வட கொரியா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை பொருளாதார ரீதியாக  சீனாவும், ரஷ்யாவுமே ஊக்குவிக்கின்றன என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

நேற்று டில்லர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவில் இருந்து வளர்ந்துவரும் அணுசக்தி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று  அழைப்பு விடுத்தார்.

வெள்ளிக்கிழமை வடகொரியா  நடத்திய ஹுவாசாங்-14 ஏவுகணையை சோதித்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற பெரிய நகரங்களை தாக்க வல்லது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்திய வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் குறித்து கூறுகையில்,  “வடகொரியாவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்றது, ஆபத்தானது. உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் வடகொரியாவின் இந்த ஏவுகணை நடவடிக்கைகள் அந்நாட்டை தனிமைப்படுத்தும், அதன் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும்” என்று கூறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க செனட் சபை வடகொரியா மீதான பொருளாதார தடைகளை  நிறைவேற்றிய சில மணி நேரங்களில் வடகொரியா இந்த புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா குடியரசு கட்சி தலைப்புச் செய்திகள்

வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலரான ரெயின்ஸ் ப்ரீபஸுக்கு பதிலாக ஜான் கெல்லி நியமனம்

வியாழனன்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்,   வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலராக இருந்த ரெயின்ஸ் ப்ரீபஸுக்கு பதிலாக  உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ஜான் கெல்லியை நியமித்துள்ளார். ஓய்வு பெற்ற ஜெனரலும் அரசினால் கௌரவப்படுத்தப் பட்டவருமான ஜான் கெல்லி குடிவரவு  அமலாக்கத்தினை தனது நிர்வாகம்  நடைமுறைப்படுத்த வழிவகுத்தவர்.

இந்த அதிர்ச்சிகரமான மாற்றம் ப்ரீபஸுக்கும்  புதிய வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் அந்தோனி ஸ்காரமுக்கிக்கும் இடையே, வெஸ்ட் விங்ஙில் இந்த வாரம் வெளிப்படையாக நிகழ்ந்த மோதல்கள் எல்லவற்றுக்கும் முத்தாய்ப்பாக நிகழ்ந்துள்ளது.

அந்தோனி ஸ்காரமுக்கி வெள்ளை மாளிகையின் பதவியில் நியமிக்கப் பட்டபின், ஊடகச் செயலாளர்  ஷான் ஸ்பைசர் அதனை ஆட்சேபித்து, ஒரு வாரத்திற்கு முன்னர் பதவி விலகினார். அதனை தொடர்ந்து ரெயின்ஸ் ப்ரீபஸ்  அடுத்ததாக பதவி விலகக் கூடும் என்ற ஊகம் பரவலாக எழுந்திருந்தது.

குடியரசுக் கட்சியின் முன்னாள் தலைவரான ப்ரீபஸ், வியாழனன்று ரகசியமாக ராஜினாமா செய்தார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

ப்ரீபஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “இந்த ஜனாதிபதிக்கும், நமது நாட்டிற்கும் சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன்.  இந்த மிக சிறந்த வாய்ப்பை வழங்கியதற்காக  ஜனாதிபதிக்கு நன்றி கூற விரும்புகிறேன். ஜனாதிபதியின் செயல் மற்றும் கொள்கைகளின் வலுவான ஆதரவாளராக தொடர்ந்து பணியாற்றுவேன். எனது பணியைத் தொடர ஜான் கெல்லியைக் காட்டிலும் சிறப்பானவர் யாரும் இல்லை. கடவுளின் ஆசீர் அவருடன் இருக்கவும், பெரும் வெற்றி அவருக்கு கிடைக்கவும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Share