Categories
இந்தியா கர்நாடகா சசிகலா தமிழகம் தலைப்புச் செய்திகள்

டிஐஜி ரூபாவிடம் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ்

பெங்களூரு சிறையில் முறைகேடு பற்றிய புகார்களை கூறிய டிஐஜி ரூபாவிடம் 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டதாகவும் அதற்காக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படும் விவகாரத்தை,  டிஐஜி ரூபா அம்பலப்படுத்தி இருந்தார். இது குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவின்பேரில், உயர்மட்ட குழு விசாரணை நடத்த தொடங்கியது.

இதனிடையே, டிஐஜி ரூபா, வேறு பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டார். டிஜிபி சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டிஐஜி ரூபாவிற்கு சத்யநாராயணராவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், சத்யநாராயணராவின் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில், ஆதாரமின்றி, ரூபா குற்றம் சாட்டியுள்ளதாகவும், சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை ஏற்பாடு செய்து கொடுத்ததாக, கூறியுள்ள ரூபா, அதற்கான ஆதாரத்தை வெளியிடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து, 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், 50 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
Categories
அ.தி.மு.க. இந்தியா கர்நாடகா சசிகலா தலைப்புச் செய்திகள்

மூத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகாரளித்த டி.ஐ.ஜி.ரூபா வேறு துறைக்கு மாற்றம்

திங்கள்கிழமையன்று கர்நாடக அரசு சிறைத்துறை டி.ஐ.ஜி.யான ரூபா டி மூட்கிலை வேறு துறைக்கு மாற்றியது. அண்மையில் அவர், அ.இ.அ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா  ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததன் மூலம் பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் தனிச் சலுகைகள் பெற்றார் என்று கூறியிருந்தார்.

ரூபா மூட்கில் தற்போது பெங்களூருவின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு  பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் கமிஷனர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ரூபா அளித்திருந்த அறிக்கையில்,  சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாகவும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டுவது அடிப்படையற்றது என டிஜிபி சத்தியநாராயணராவ் மறுப்பு தெரிவித்திருந்தார்.

டி.ஐ.ஜி. சத்தியநாராயணராவ் மாத இறுதியில் ஓய்வு பெறப்போவதால் தற்போது நிர்வாகப் பொறுப்பு எதுவும் இல்லாத நிலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன்முன்பு  ஊழல் தடுப்பு ஆணையராக இருந்த என்.எஸ். மேகரிக் தற்போது கூடுதல் சிறைத்துறை இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share