Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் குடியரசு கட்சி தலைப்புச் செய்திகள்

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 11 நாட்கள் பதவி வகித்த அந்தோனி ஸ்காரமுக்கி பணிநீக்கம்

வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதியில் நிகழும் உள்கட்சி மோதல்களைத் தவிர்த்து, ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்காக, புதிதாக அலுவலர்களின் மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜான் கெல்லி, கடந்த 11 நாட்களாக தகவல் தொடர்பு இயக்குநராக  பதவி வகிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்த அந்தோனி ஸ்காரமுக்கியை பணிநீக்கம் செய்துள்ளார். இது ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்கான அவரது முயற்சியின் முதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையின் ஊடகவியல் செயலாளரான சாரா ஹக்கபீ சாண்டர்ஸ், கெல்லிதான் ஸ்காரமுக்கியை பணி நீக்கம் செய்யக் கோரினார் என்பதை உறுதி செய்யவில்லை. எனினும், தற்போது  ஸ்காரமுக்கி வெளியேறியபின், ஜான் கெல்லியிடம் முழுப் பொறுப்பும் கிடைத்திருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டார்.

“ஜெனரல் கெல்லி வெள்ளை மாளிகையில் முழுமையாக செயல்பட  அதிகாரம் கிடைத்துள்ளது , மேலும் அனைத்து ஊழியர்களும் அவரது அதிகாரத்தின் கீழ் வேலை செய்ய வேண்டும்”, என்று கூறிய சாரா ஹக்கபீ, மேலும் வேறு ஊழியர்கள் மாற்றப் படும் நிலை இல்லை என்று தெரிவித்தார்.

 

 

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா குடியரசு கட்சி தலைப்புச் செய்திகள்

வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலரான ரெயின்ஸ் ப்ரீபஸுக்கு பதிலாக ஜான் கெல்லி நியமனம்

வியாழனன்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்,   வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலராக இருந்த ரெயின்ஸ் ப்ரீபஸுக்கு பதிலாக  உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ஜான் கெல்லியை நியமித்துள்ளார். ஓய்வு பெற்ற ஜெனரலும் அரசினால் கௌரவப்படுத்தப் பட்டவருமான ஜான் கெல்லி குடிவரவு  அமலாக்கத்தினை தனது நிர்வாகம்  நடைமுறைப்படுத்த வழிவகுத்தவர்.

இந்த அதிர்ச்சிகரமான மாற்றம் ப்ரீபஸுக்கும்  புதிய வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் அந்தோனி ஸ்காரமுக்கிக்கும் இடையே, வெஸ்ட் விங்ஙில் இந்த வாரம் வெளிப்படையாக நிகழ்ந்த மோதல்கள் எல்லவற்றுக்கும் முத்தாய்ப்பாக நிகழ்ந்துள்ளது.

அந்தோனி ஸ்காரமுக்கி வெள்ளை மாளிகையின் பதவியில் நியமிக்கப் பட்டபின், ஊடகச் செயலாளர்  ஷான் ஸ்பைசர் அதனை ஆட்சேபித்து, ஒரு வாரத்திற்கு முன்னர் பதவி விலகினார். அதனை தொடர்ந்து ரெயின்ஸ் ப்ரீபஸ்  அடுத்ததாக பதவி விலகக் கூடும் என்ற ஊகம் பரவலாக எழுந்திருந்தது.

குடியரசுக் கட்சியின் முன்னாள் தலைவரான ப்ரீபஸ், வியாழனன்று ரகசியமாக ராஜினாமா செய்தார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

ப்ரீபஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “இந்த ஜனாதிபதிக்கும், நமது நாட்டிற்கும் சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன்.  இந்த மிக சிறந்த வாய்ப்பை வழங்கியதற்காக  ஜனாதிபதிக்கு நன்றி கூற விரும்புகிறேன். ஜனாதிபதியின் செயல் மற்றும் கொள்கைகளின் வலுவான ஆதரவாளராக தொடர்ந்து பணியாற்றுவேன். எனது பணியைத் தொடர ஜான் கெல்லியைக் காட்டிலும் சிறப்பானவர் யாரும் இல்லை. கடவுளின் ஆசீர் அவருடன் இருக்கவும், பெரும் வெற்றி அவருக்கு கிடைக்கவும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Share