Categories
செய்தித்தாள்கள்

இணையத்திலிருந்து செய்திகள்

இஸ்ரேலில் மோடி | திருப்பிவிடப்பட்ட விமானம் | உடைபற்றிய உகாண்டா அரசின் உத்தரவு | நீட் தேர்வு மனு தள்ளுபடி | கிழக்கு மாகாண புதிய ஆளுநர் | டெங்கு கொசு ஒழிப்பு | மே.வங்க ஆளுநர் மிரட்டினார் | புதிய தலைமை தேர்தல் ஆணையர்

 பி.பி.சி. தமிழ்

இஸ்ரேலில் நரேந்திர மோதி உரையின் 5 முக்கிய அம்சங்கள்

இஸ்ரேலுக்கு அரசுமுறையிலான பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. இந்தப் பயணம், இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கும் என்று நம்பப்படுகிறது.

பறவையால் தாக்கப்பட்டதா? திருப்பிவிடப்பட்டது ஏர்-ஏசியா விமானம்

பறவையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஏர்ஏசியா எக்ஸ் விமானம் பிரிஸ்பேன் நோக்கி திருப்பிவிடப்பட்டது

மார்பகங்கள்தொப்புள்முழங்கால் தெரியாமல் உடையணிய உகாண்டா அரசு உத்தரவு

உகாண்டாவில் அரச பணியாளர்கள் கண்ணியமாக உடையணிந்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுளது. பெண்கள் மார்பங்களை மறைக்கும்படி சுற்றறிக்கை.

தமிழகத்தில் `நீட்‘ தேர்வுக்கு விலக்கு கோரிய மனு தள்ளுபடி

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக மாணவரின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இலங்கை கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர்

இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

டெங்கு அச்சுறுத்தல்: கொசு ஒழிப்புப் பணியில் அதிகாரிகளுக்கு உதவும் இலங்கை ராணுவம்

நாட்டின் மிக மோசமான டெங்கு காய்ச்சல் பரவலை தொடர்ந்து, அதற்குக் காரணமான கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க, இலங்கை சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் பணியில் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

மே.வங்க ஆளுநர் திரிபாதி என்னை மிரட்டி, அவமானப்படுத்தினார்: மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு

மேற்குவங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார். அவரது பேச்சால் எனக்கு அவமானம் ஏற்பட்டது என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

 

தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம்

நசீம் சைதிக்குப் பதிலாக புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமிக்கப்பட்டார்.

Share
Categories
செய்தித்தாள்கள்

இன்றைய இணைய செய்தித்தாள்களில் இருந்து

BBC தமிழ்

குற்றமற்ற அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை கைவிட விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் கடிதம்

இலங்கை வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தணிப்பதற்காக, குற்றவாளிகளாக இனம் காணப்படாத இரு அமைச்சர்களின் தண்டனையில் திருத்தம் தேவை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசைக் கலைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஆளுநரிடம் ஸ்டாலின் மனு

தமிழக சட்டப்பேரவையில் பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்துசெய்துவிட்டு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெண்களின் மார்பைத் தொடுவதற்காக தந்திர வித்தைக்காரராக காட்டிக்கொண்டவரால் சர்ச்சை

சீனாவில் பெண்களின் மார்பகங்களை தொடுவதற்காக தன்னை ஒரு தெரு தந்திர வித்தைக்காரர் போல காட்டிக் கொண்ட தனது காணொளியை, வலைப்பூ பதிவர் ஒருவர் பதிவேற்றியதை அடுத்து அந்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை அவர் கிளப்பியுள்ளார்.

தி இந்து – தமிழ்

ஆளுநரிடம் ஆட்சியைக் கலைக்க வலியுறுத்தி உள்ளோம்: ஸ்டாலின் பேட்டி

ஆளுநரிடம் ஆட்சியைக் கலைக்க வலியுறுத்தி உள்ளோம் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை ராஜ்பவனில் சனிக்கிழமை மாலை ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். உடன் துரைமுருகன், கே.ஆர்.ராமசாமி, அபுபக்கர் ஆகியோர் இருந்தனர்.

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு: பிரகாஷ் ஜவடேகர் தகவல்

ஏழு அம்ச திட்டம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

நீர்ப்பாசன வசதியை அதிகரிப்பது, தரமான விதைகள் அளிப்பது, அறுவைக்கு பிந்தைய தானிய இழப்பை தடுப்பது உள்ளிட்ட 7 அம்ச திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.

One India தமிழ்

அதிமுக நடத்தும் இப்தார் விருந்து.. எடப்பாடி தலைமையில்.. து.பொ.செ.வுக்கு நோ அழைப்பு

அதிமுக சார்பில் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் இப்தார் நோன்பு நிகழ்ச்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் நடக்கும் என்று அதிமுக தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் மகனை கொஞ்சும் பாசக்கார டோணி.. வைரல் போட்டோ

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் மகனை, இந்திய முன்னாள் கேப்டன் டோணி தூக்கி வைத்திருக்கும் போட்டோவை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

Share