Categories
சென்னை தமிழகம்

சட்டபேரவை முடியும் வரை சென்னை போலீசாருக்கு விடுமுறை இல்லை

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், நேற்று துவங்கியது. இந் நிலையில், ஜூலை, 19 வரை,  ‘லாக்கப் டெத்’ தவிர்க்கும் வகையில் விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களை, மாலை, 6:00 மணிக்கு மேல் இரவு நேரங்களில் போலீஸ் ஸ்டேஷனில் தங்க வைக்கவும், போலீசார், அதிகாரிகள் விடுமுறை எடுக்கவும், உயரதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

மேலும், போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் ஆகிய சம்பவங்கள் நடக்கும் நிலையில், போலீசார், அதிகாரிகள் எக்காரணம் கொண்டும், லத்தி சார்ஜ், கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துதல், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்களை தவிர்க்க வேண்டும். அது மட்டுமின்றி, ஜூலை, 19 வரை, போலீசார் மற்றும் அதிகாரிகள் விடுப்பு எடுக்கவும் தடை விதித்து, உயரதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.இந்த உத்தரவை சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Share