Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வடகொரியாவின் அச்சுறுத்தலை தடுக்க சீனா எதுவும் செய்வதாகத் தெரியவில்லை : டிரம்ப்

வடகொரியா ஏற்படுத்தும் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்ப்பதில் சீனாவுக்குள்ள அக்கறை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதத்தில் சீனா-வட கொரியா இடையிலான வணிகம் 40 சதவீதம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப் சீனாவுடன் பேசுவதில் பயனில்லை என்றும் ஆனாலும் முயன்று பார்ப்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்புக் குழு விதித்த தடையை மீறி நடத்தப்பட்டதாகும். பாதுகாப்புக் குழுவை அவசரமாகக் கூட்டி இப்பிரச்சினையை விவாதிக்கவேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

நிக்கி ஹேலியின் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத் தூதுவர், நிக்கி ஹேலி, புதன்கிழமையன்று, ஐ.நா.வின் சிறப்பு பாதுகாப்புக் கூட்டத்தில் கூறுகையில், “வட கொரியாவை வழிக்குக் கொண்டுவர  அமெரிக்காவிற்கு  கணிசமான இராணுவத் தீர்வுகள் உள்ளன” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், “அமெரிக்கா மோதல் போக்கை விரும்பவில்லை, ஆனால், தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்”, என்று ஹேலி, வட கொரியாவை எச்சரித்தார்.

 எமது பலங்களில் ஒன்று, நாம் கணிசமான இராணுவ சக்திகளைக் கொண்டுள்ளது. தேவைப்பட்டால் நாம் அவற்றைப் பயன்படுத்துவோம். ஆனால் அந்த திசையில் செல்ல வேண்டும் என்று நாங்கள் இதுவரை விரும்பவில்லை

என்று அவர் கூறினார்.

இதனிடையில், அமெரிக்காவும் அதன் நேச நாடான தென் கொரியாவும் கூட்டாக ஜப்பானியக் கடலில் ஏவுகணைப் பரிசோதனை செய்துள்ளன.

போர் நிறுத்தம் போராக மாறாமல் இருப்பதற்குக் காரணம் சுயகட்டுப்பாடுதான் காரணம்; ஆனால் அந்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என அமெரிக்க- தென்கொரியக் கூட்டணி தெரிவித்துள்ளது. வடகொரியா வேறுமாதிரியாக நினைத்தால் அது மோசமான தவறாக மாறிவிடும் என்று இக் கூட்டணி தெரிவித்தள்ளது.

Share
Categories
இந்தியா உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

பண்டைய வரைபடத்தைக் காண்பித்து இந்தியப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடும் சீனா

எல்லையில் இந்தியா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள சீனா 127 ஆண்டுகளுக்கு முந்தைய மேப்பை வெளியிட்டு இந்தியப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாட முயல்கிறது.

இந்திய, திபெத், பூட்டான் முச்சந்திப்பிலுள்ள 269 சதுர கி.மீ பரப்பளவிலான ஒரு நிலப்பரப்பு சீனாவினால் தனது என்று உரிமை கொண்டாடப்படுகிறது. இவ்விடத்தில் சாலைத் கட்டுமானம் தொடர்பாக சீன மற்றும் இந்தியத் துருப்புக்களுக்கு இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. சீனா அடாவடியாக இங்கு புதிதாக ராணுவச் சாலையை உருவாக்க முயலுவதால்,  புது டெல்லிக்கும், பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளில் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2013-ல் தாவ்லத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi) -இல் இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட நெருக்கடியைப் போல இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.

 

தற்போது அங்கு சீனாவின் சாலை அமைக்கும் பணியையும் தடுத்து நிறுத்தி உள்ளது. இந்தியா தனது 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளது.

 

இந்நிலையில் சீனா, பேச்சுவார்த்தைக்கு எல்லையில் இருந்து ராணுவத்தை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்றும் 1962 போரை குறிப்பிட்டு இந்திய ராணுவம் வரலாற்றில் இருந்து பாடத்தை கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் எச்சரிக்கையை விடுத்தது. இதனையடுத்து இந்திய அரசு  எல்லையில் அடாவடியாக சாலை அமைக்கும் திட்டம் விவகாரத்தில் சீனாவிற்கும் இந்தியா எச்சரிக்கையை விடுத்தது. டோக்லாம் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் மிகவும் கவலையை அளிக்கிறது என இந்தியா தெரிவித்தது. எங்களுடைய ராணுவ நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என இந்தியா தெரிவித்துவிட்டது.

 

1962–ல் இருந்த அன்றைய இந்தியாவின் நிலையும், இன்றைய 2017–ம் ஆண்டின் இந்தியாவின் நிலையும் வேறானவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாக சீனாவிற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. டோங் லாங்  சீனாவின் பகுதி. அதை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என புகார் கூறியுள்ளது. மேலும் 1890-ம் ஆண்டு அதாவது 127 ஆண்டுக்கு முந்தைய  ‘மேப்’ (வரை படத்தை) சீனா வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து – சீனா இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் சிக்கிம் மற்றும் திபெத் சம்பந்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த ஒப்பந்தத்தில் இங்கிலாந்து கவர்னர் லாங்ஸ்டவுன் பிரபுவும், சீனாவின் லெப்டினென்ட் கவர்னர் செங்தாயும் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் ஒரு போட்டோவையும் சீனா வெளியிட்டுள்ளது. சீன எல்லையில் இந்திய ராணுவத்தின் 2 புல்டோசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் சிவப்பு கோடிட்டு காட்டியுள்ளது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. டோங் லாங் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி எல்லையில் இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Share
Categories
இந்தியா சீனா தலைப்புச் செய்திகள்

சீனா, பூடான், இந்திய எல்லையில் பதற்றம்

பூட்டானிலுள்ள 269 சதுர கி.மீ பரப்பளவிலான ஒரு நிலப்பரப்பு  சீனாவினால் தனது என்று உரிமை கொண்டாடப்படுகிறது.  இவ்விடத்தில் சாலைத் கட்டுமானம் தொடர்பாக சீன மற்றும் இந்தியத் துருப்புக்களுக்கு இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகிறது.  இதன்விளைவாக, புது டெல்லிக்கும், பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளில் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  2013-ல் தாவ்லத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi) -இல் இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட நெருக்கடியைப் போல இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.

சுமி பள்ளத்தாக்கிற்கு எதிரில் இருக்கும் டோக்லம் பீடபூமியில் நிகழும் இம்மோதல்கள், பூடானின் ஆயுதப் படைகளை பயிற்றுவிக்கும் நோக்கத்துடன், அங்கு பணியிலிருக்கும் இந்திய துருப்புக்கள் எதிர்கொள்கின்றனர்.

மற்றொரு அறிவிப்பின்படி, ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவட் வியாழக்கிழமை சிக்மிற்கு வருகை தருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, இந்தியாவின் பூட்டான் தூதர் வொட்ஸோப் நியாஜெல், தனது நாட்டிலுள்ள டோக்லமின் பகுதியிலுள்ள ஜோம்பில்ரியில், சீன இராணுவ முகாமை நோக்கி ஒரு சாலையை கட்டியெழுப்பவது குறித்து தமது நாடு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், சாலைகட்டும் பணியை உடனடியாக  நிறுத்தம் செய்ய செய்து  நிலைமையை சரியாக்கவும் பீஜிங்கை சீனா கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், பெய்ஜிங், கைலாஷ் மன்சரோவர் யாத்ரீகர்களுக்கு நாது லா கணவாய் திறக்கப்படுவதற்கு முன்பாக “இந்தியா அதன் பிழைகளை சரி செய்ய” புது தில்லியிடம் கூறியது. மேலும் சாலைக் கட்டுமானம் நடைபெறும் பகுதி  சீனாவின் “எல்லைக்குட்பட்டது” என்றும், இந்தியாவுக்கும் பூட்டானுக்கு சொந்தமானபகுதியல்ல என்றும் கூறியுள்ளது. வேறு எந்த நாட்டிலும் தலையிட இந்தியாவிற்கு உரிமை இல்லை என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவின் அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கருத்துக் கட்டுரையில், இந்த நிலைப்பாடு தொடர்ந்தால், இந்தியாவிற்கு விதிகளைக் கற்பிக்கவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.

 

Share
Categories
இந்தியா உலகம் கைலாச மானசரோவர் சீனா தலைப்புச் செய்திகள் திபெத்

மானசரோவர் திருப்பயணிகளை அனுமதிப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சு தொடர்கிறது : சீனா

திபெத்திலுள்ள கைலாச மானசரோவர் நோக்கி திருப்பயணம் சென்ற 47 பயணிகளை, சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் அருகே தடுத்து நிறுத்தியது  குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தையில் உள்ளதாக  சீனா தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெங் சூங்ஹாங் கூறுகையில், “எனக்குக் கிடைத்த தகவலின் படி, இரண்டு அரசாங்கங்களும் இந்த விடயத்தில் தொடர்பில் இருக்கின்றன”, என்றார். ஆனால், சீன-இந்திய எல்லையில் பயணிகள் சீன அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட, நிலச்சரிவுகள் மற்றும் மழை போன்ற வானிலை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இருந்ததா என்பது குறித்து விளக்க மறுத்து விட்டார்.

இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே கருத்து தெரிவிக்கையில், ‘‘நாது லா வழியாக இந்திய ஆன்மிக பயணிகள் செல்வதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. இது பற்றி சீனாவிடம் மத்திய அரசு எடுத்துச்செல்லும்’’ என்று குறிப்பிட்டார்.

மழையினாலும், நிலச்சரிவுகளாலும் சாலைகள் மிகவும் பழுது அடைந்து இருப்பதால்தான், இந்திய ஆன்மிக பயணிகளை தடுத்து நிறுத்தி விட்டதாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர். வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, சாலை நிலை மேம்பட்டவுடன் சீனா வழியாக இந்திய ஆன்மிகப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

Share
Categories
உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

சீனாவில் நிலச்சரிவு : 15 பேர் பலி, 120 பேரை காணவில்லை

சீனாவில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 15 பேர் பலியாகி இருப்பதாகவும் 120 பேரைக் காணவில்லை.   சீனாவின் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்கள் குறிப்பாக மழைக்காலங்களில் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்படுவது  வழக்கமாகும். தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதன் எதிரொலியாக மலை அடிவாரத்தில் உள்ள  ஜின்மோ கிராமத்தில் நேற்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மண்களும், பாறைகளும் சரிந்து விழுந்தன.

இதில் சுமார் பல வீடுகளுடன்,  140க்கும் மேற்பட்டோரும் உயிருடன் மண்ணில் புதைந்தனர். இவர்களின் நிலை  என்ன என்பது தெரியவில்லை. பெரும்பாலானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. திபெத் – அபா பகுதிக்கு இடையே உள்ள மலையின் ஒரு  பகுதி சரிந்து விழுந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், இவை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு ஆற்றின் நீரோட்டத்தை தடுத்துள்ளதோடு, 1.6 கிமீ  தொலைவுக்கு சாலையையும் மூடியுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கயிறு கட்டி பாறைகள் அகற்றப்பட்டு, மீட்பு பணிகள் நடந்து வருகிறது. சுமார் 500 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு மணல் குவியல்களில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தேடி வருகின்றனர்.

Share
Categories
இந்திய சினிமா சினிமா

சீனாவில் தங்கல் சாதனை: ரூ.1913 கோடி வசூல்

நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர்கான் நடிப்பில் சீனாவில் வெளியான தங்கல் திரைப்படம் சுமார் 1913 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர் கான் நடித்த படம், உண்மை சம்பவத்தை தழுவிய தங்கல். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டு வசூலில் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து சீனாவில் மே 5ம் தேதி, வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு அங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் சீனாவில் தற்போது வரை சுமார் 1130 கோடி ரூபாயும், உலகம் முழுக்க மொத்தம் 1913 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்னும் சில நாள்களில் 2000 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சீனாவில் வெளியான படங்களின் டாப் 20 இடத்தில் தங்கல் படம் இடம் பிடித்துள்ளது.

Share