Categories
Phones ஆண்டிராய்ட் சிறப்புச்செய்தி தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம் ஸ்மார்ட்ஃபோன்

சீனாவில் வடிவமைக்கப்படும் சிறந்த செல்போன்கள் – மி மிக்ஸ் 3

தற்போது விற்பனைக்கு வரும் செல்போன்களின் திரை, விளிம்புகளைத் தொட்டவாறு அமைக்கப்படுவதால், அவற்றின் உபயோகப்படுத்தும் பரப்பளவு அதிகமாக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பம்சம் புகழ்பெற்ற செல்போன்களில் இருக்க வேண்டும் என நுகர்வோர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஐ-போன்-X (iPhone X)-ல் இவ்வம்சம் புகுத்தப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே சீனாவின் சியோமி (Xiaomi) நிறுவனம், தமது முதலாவது போனான மி மிக்ஸ் போனில் இவ்வம்சத்தை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து அவர்களது தற்போதைய போனான மி மிக்ஸ் 3 (Mi Mix 3)– யிலும் இவ்வம்சம் மற்றொரு புதிய அம்சமான நழுவித்திரையுடன் (slider) சேர்ந்து இடம் பெற்றுள்ளது.

சிறப்புக்கூறுகள் (Features)

Chipset: Qualcomm Snapdragon 845
Memory: 6/8 GB RAM/128GB storage
Battery : 3200mAh; Fast wired charging (up to 18W);Fast wireless charging (up to 10W)
Camera: Dual 12-megapixel rear cameras; 4K video capable
Camera features: 2x telephoto, Dual Pixel AF, 4-axis OIS
OS: Android 9.0 Pie w/ MIUI 10
Other features :
Ceramic back
6.39-inch 19.5:9 1080×2340 Full HD+ AMOLED display
Slide-out dual 24/2-megapixel front cameras
Dual SIM, dual VoLTE; 2×2 MIMO Wi-Fi ac, Bluetooth 5.0 with aptX HD, dual band GPS/Galileo

மி மிக்ஸ் 3 -யின் திரை பெரிதாகவும் தெள்ளத் தெளிவாகவும் உள்ளது. விரைவாக செயலாற்றும் திறன், அதிக நேரம் செயல்படும் பேட்டரி, பின்புறமுள்ள சக்திவாய்ந்த இரு கேமராக்கள் ஆகியவை இந்த போனின் சுவாரசியமான விஷயங்கள். ஆனால் தடிமனாகவும் கொஞ்சம் கனமாகவும் இருப்பதாலும் சிலருக்கு இதனைப் பிடிக்காமல் போகலாம்.

இதனை வாங்க நீங்கள் முடிவு செய்யுமுன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் :

1) செல்ஃபி கேமரா அதிக தரம் என்று சொல்ல முடியாது

2) HDR படங்கள் எடுப்பதற்கு சிரமப் பட வேண்டியிருக்கும்

3) தற்போது வரும் செல்போன்களின் திரையிலேயே கைரேகைப் பதிவு ஸ்கேனர் வருகிறது. ஆனால், இந்த போனில் அந்த அம்சம் கிடையாது.

அடுத்த பதிவில்: ஹானர் வியூ 20

Share
Categories
English Latest Technology Phones Technical

சீனாவில் வடிவமைக்கப்படும் சிறந்த செல்போன்கள் – ஹுவாவெய் P20 pro

சீனாவிலிருந்துதான் உலக சந்தைக்கு அதிக அளவில் செல்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆப்பிள், சாம்சங், பிளாக்பெரி போன்ற நிறுவனங்கள் வேறு நாடுகளில் இருந்து இயங்கினாலும் அவற்றின் புகழ்பெற்ற செல்போன்கள் உற்பத்தியாவது பெரும்பாலும் சீனாவிலிருந்துதான்.  ஆனால் தற்போது சீன கம்பெனிகள் தாமாகவே செல்போன்களை வடிவமைத்து விற்கின்றன. மேற்கத்திய நாடுகளில் வடிவமைக்கப்படும் செல்போன்களின் தரத்திற்கு இணையாகவும் சற்று விலை குறைவாகவும் இவை விற்கப்படுகின்றன.

தற்போது விற்பனையாகின்ற சீன செல்போன்களில்  சிறப்பாக குறிப்பிடத்தக்க ஐந்தினைப் பற்றி இத்தொடரில் பார்க்கலாம்.

1) ஹுவாவெய் P20 pro (Huawei P20 Pro)

சிறப்புக்கூறுகள் (Features)

Display: 6.1-inch with 1080 x 2240 resolution
CPU: Kirin 970
RAM: 6GB
Storage: 128GB
Battery: 4,000mAh
OS: Android 8.1
Rear camera: 40MP + 20MP + 8MP
Front camera: 24MP

ஐ-போனைவிட சற்று விலை குறைவாக விற்கப்படுகிறது. இதன் கேமரா நல்ல தரம். ஆனால் 4K வீடியோ எடுக்கும்போது ஸ்டபிலைசேசன் (stabilization) சரியில்லை. பேட்டரி அதிக நேரம் தாங்கும். வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஹெட்போன் ஜாக் இல்லாதது குறைதான்.

அடுத்த பதிவில்:  மி மிக்ஸ் 3

 

 

Share
Categories
உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 19 பேர் பலி; 247 பேர் காயம்

சீனாவின் தென்மேற்கு – சிசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 7.0 ரிச்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தினால் இதுவரை வந்த தகவல்களின்படி 19 பேர் இறந்திருப்பதாகவும், 247 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சீனாவின் சிசுவான் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0-ஆக பதிவாகியதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் சுமார் 106 அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், 1.3 லட்ச வீடுகள் சேதமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுகத்தில் பலியானவர்களில் சிலர் வெளிநாட்டு பயணிகளும் உள்ளனர். மேலும் 100 பயணிகள் இன்னும் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நில நடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் மின்சார கம்பங்கள் மற்றும் தண்ணீர் குழாய்கள் புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சிசுவான் மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 8,0ஆக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 80 ஆயிரம்  பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் சீனா தலைப்புச் செய்திகள் ரஷ்யா வட கொரியா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை பொருளாதார ரீதியாக  சீனாவும், ரஷ்யாவுமே ஊக்குவிக்கின்றன என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

நேற்று டில்லர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவில் இருந்து வளர்ந்துவரும் அணுசக்தி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று  அழைப்பு விடுத்தார்.

வெள்ளிக்கிழமை வடகொரியா  நடத்திய ஹுவாசாங்-14 ஏவுகணையை சோதித்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற பெரிய நகரங்களை தாக்க வல்லது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்திய வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் குறித்து கூறுகையில்,  “வடகொரியாவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்றது, ஆபத்தானது. உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் வடகொரியாவின் இந்த ஏவுகணை நடவடிக்கைகள் அந்நாட்டை தனிமைப்படுத்தும், அதன் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும்” என்று கூறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க செனட் சபை வடகொரியா மீதான பொருளாதார தடைகளை  நிறைவேற்றிய சில மணி நேரங்களில் வடகொரியா இந்த புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

மந்திரத்தை ஜபித்தால் சீனாவை வீழ்த்தலாம் : ஆர்.எஸ்.எஸ். யோசனை

சிக்கிம் எல்லையில் உள்ள டோகோலாம் பகுதியை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை,  ஒரு மந்திரத்தை நாள்தோறும் பூஜையின்போது ஜபிப்பதால் தடுக்க முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். யோசனை கூறியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு உறுப்பினரான, இந்தரேஷ் குமார்  பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ” ‘கைலாஷ், ஹிமாலயா, திபெத் ஆகிய பகுதிகளுக்கு, சீன ராட்சசனின் பிடியில் இருந்து விடுதலை வேண்டும்’ என, தினமும் காலையில் பூஜை செய்யும்போது, ஐந்து முறை கூற வேண்டும். ஹிந்துக்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினரும், இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

சீனா வன்முறையின் ஒரு வாக்காளியாக மாறிவிட்டது. சீனா ஒரு ஏகாதிபத்திய மற்றும் விரிவாக்க பாத்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் குமார் கூறினார். இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளின் பிராந்தியத்தை திபெத்திலிருந்து சீனா கைப்பற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.

இதனிடையே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் சீனா செல்லவுள்ளார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த வாரம் சீனா செல்லும் அவர் டோக்லாம் பிரச்சனையை எழுப்புவார் என கூறப்படுகிறது.

 

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள்

சீனாவினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படலாம்: முலாயம் சிங் யாதவ்

இந்தியாவுக்கு சீனாவினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என மக்களவையில் முலாயம் சிங் யாதவ் பேசிஉள்ளார்.

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாமில் பகுதியில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பை இந்திய ராணுவம் தடுத்து உள்ளது. இதனையடுத்து இந்தியாவை எச்சரிக்கும் விதமாக பல அறிக்கைகளை வெளியிட்டு வரும் சீனா, எல்லையில் படைகளையும் அதிகரித்து உள்ளது.  பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறி உள்ள இந்தியா படையை திரும்ப பெற மாட்டோம் என கூறிவிட்டது. இதனால் எல்லையில் போர் மேகம் சூழ்ந்து உள்ளது.

இதுகுறித்து பாராளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்பிய சமாஜ்வாடி எம்.பி. முலாயம் சிங் யாதவ், அண்டைய நாட்டிடம் இருந்து எழுந்து உள்ள அச்சுறுத்தலை சமாளிக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கூறிஉள்ளார்.  மேலும், சீனா, இந்தியாவை இலக்காக அணு ஆயுதங்களை பாகிஸ்தானில் வைத்து உள்ளது. இந்திய உளவுத்துறைக்கு நன்றாக தெரிந்து இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், சீனாதான் நம்முடைய எதிரியாகும், பாகிஸ்தான் கிடையாது என்றும் இந்திய மார்க்கெட்டியில் சீன பொருட்களின் விற்பனை செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

Share
Categories
உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

நோபல் பரிசுப் பெற்றவரான லியு சியாவ்போ உடல் அடக்கம்

சமாதானத்திற்கான நோபல் பரிசுப் பெற்றவரான லியு சியாவ்போ உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சீன அரசின் பிரபலமான விமர்சகராகவும்,   மனித உரிமைச் செயற்பாட்டளரும் இருந்த அவரை சீன அரசு 11 ஆண்டுகளாக சிறையில் அடைத்து இருந்தது.  கல்லீரல் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமையன்று சிகிச்சைகள் பலனின்றி அவர் இறந்தார்.

லியு சியாவ்போவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவருடைய மனைவி லியு சியா சீன அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், லியு சியாவ்போவுக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்ட நகரான ஷென்யாங்கில் நடைபெற்ற இறுதிச் சடங்கில், அவருடைய மனைவி கலந்து கொண்டார். அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் லியு-விற்கு பிரியாவிடை அளித்தனர்.

“உள்ளூர் பழக்கவழக்கப்படியும், குடும்பத்தினரின் விருப்பப்படியும்” லியு சியாவ்போவின் உடல் எரியூட்டப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மொஸாட்டின் இரங்கற்பாட்டு லியு சியாவ்போவின் இறுதிச் சடங்கில் இசைக்கப்பட்டது.

 

 

Share
Categories
இந்தியா காஷ்மீர் சீனா தலைப்புச் செய்திகள்

காஷ்மீர் பிரச்னையில் சீனாவின் மத்தியஸ்தம் ஏற்க முடியாதது : இந்தியா

காஷ்மீர் பிரச்னையில் மூன்றாம் நாடான சீனாவின் மத்தியஸ்தத்தை ஏற்க முடியாது என்று இந்தியா நிராகரித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, இதற்கு பதில் அளித்துப் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தை ஏற்க முடியாது என்றும், அது இருநாடுகள் இடையிலான பிரச்னை மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் காஷ்மீர் விவகாரம் என்பது அந்த மாநில மக்கள் சம்பந்தப்பட்டது என்றும், இதில் எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாகவும் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இருநாடுகளின் பிரச்னை என்ற அடிப்படையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

மேலும், காஷ்மீரில் ரசாயன ஆயுதங்கள் எதையும் இந்தியா பயன்படுத்தவில்லை என்றும், இதுதொடர்பான பாகிஸ்தானின் புகார்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

டோக்லாம் பிரச்சனை

டோக்லாம் பிரச்சனை குறித்து சீனா தெரிவித்த கருத்து எதுவாக இருப்பினும், இந்தியாவைப் பொறுத்தவரையில் இப்பிரச்சனை தூதரக தரப்புகளினால் தீர்த்து வைக்கப்படும்.  கடந்த காலங்களில் பெய்ஜிங் உடனான பல விவகாரங்களையும் தூதரக தரப்புகள் தீர்த்து வைத்திருக்கிறார்கள் என்று கோபால் பாக்லே தெரிவித்தார்.

Share
Categories
அமெரிக்கா உலகம் சீனா

வடகொரியா விவகாரம்: அமெரிக்காவுடன் இணைந்து செயல்படபோவதாக சீனா சொல்கிறது

வடகொரிய அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படப் போவதாக சீனா அறிவித்துள்ளது.

ஆசிய நாடான வடகொரியா தனது எதிரியான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2 நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகளுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசினர்.அப்போது அண்மைக்காலமாக வடகொரியா விடுத்து வரும் அணு ஆயுத சோதனை மிரட்டல் மற்றும் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக உறவில் காணப்படும் சீரற்ற நிலைமை குறித்து விரிவாக விவாதித்தனர்.ஏற்கனவே, அமெரிக்கா- சீனா இடையே அவ்வளவாக நட்புறவு இல்லாத நிலையில் ஹம்பர்க் நகர சந்திப்பு இரு தலைவர்களையும் அமைதிப்படுத்துவதாக இருந்தது.பின்னர், டிரம்ப் நிருபர்களிடம் பேசுகையில், “வடகொரியாவின் அணுஆயுத விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்” என்றார்.டிரம்பை சந்தித்த பிறகு ஜின்பிங்கும், அமெரிக்காவை  பாராட்டி பேசினார்.அவர் கூறும்போது, “அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும், சீனாவும் ஒத்துழைத்து செயல்பட முடிவு செய்துள்ளன. அதேநேரம், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் டிரம்பிடம் எடுத்துக் கூறினேன்” என்றார்.

Share
Categories
இந்தியா உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

காஷ்மீரில் சீன துருப்புக்கள் நுழையலாம் : சீன நிபுணர் சொல்கிறார்

சீனா – பூட்டான் நாடுகளிடையேயுள்ள தர்க்கத்தின் அடிப்படையில் இந்திய ராணுவம் டோக்லாமில் நுழைந்த வாதத்தை முன்வைத்து காஷ்மீர் இந்திய எல்லைக்குள் தனது நாட்டின் துருப்புக்கள் நுழைய முடியும்  என்ற தலைப்பில் ஒரு சீன நிபுணர் வாதிட்டார். சீன அரசின் பத்திரிகையான குளோபல் டைம்ஸில் அவர் மேற்படி வாதத்தைக் கொண்டுள்ள கட்டுரையை எழுதியுள்ளார்.

இந்தியா டோக்லாம் பகுதிக்கு ராணுவத்தைக் கண்டித்து அவர் வெளியிட்ட பல வாதங்களில் மேற்படி வாதமும் ஒன்றாகும். இந்தியா இதுகுறித்தான தனது நிலையை முன்பே தெரிவித்திருந்தது.

சீனாவின் மேற்கு சாதாரண பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையத்தின் இயக்குனர் லோங் ஜிங்சுங், குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான தனது கட்டுரையில் கூறியதாவது:

சீனாவைப் பொறுத்தவரையில் மேற்கு நாடுகளைப் பற்றி கவலைப்படாமல், பெய்ஜிங், டோக்லாம் சர்ச்சைகளை சர்வதேசமயமாக்க முடியும்; ஏனென்றால் மேற்கத்திய நாடுகள் சீனாவுடன் அதிக அளவில் தொழில் முறை நட்புறவைக் கொண்டுள்ளன

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை மற்றும் வட கொரிய பிரச்சினையில் சீனா மீது அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட பிரச்சனைகளில் , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய நடவடிக்கைகள் சீனாவின் வணிக திறன்களால் மேற்கத்திய நாடுகள் (சீனாவுக்குச் சார்பாக) இறங்கி வரவில்லை என்பதை எளிதாகக்  காண முடிகிறது.

 

 

Share