Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள்

ஜூலை 17-ல் ஜனாதிபதி தேர்தல்

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24 ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலை ஜூலை 17-ம் தேதி நடத்துவதாக இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி நசிம் ஜைதி இன்று அறிவித்தார்.

 

இத்தேர்தலுக்கான கால அட்டவணை :

ஜூன் 14 – வேட்பு மனுத்தாக்கல் செய்ய தொடக்க நாள்

ஜூன் 28 – வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்

ஜூன் 29 – வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு நாள்

ஜூலை 1 – வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்

ஜூலை 17 – குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறும் நாள்

ஜூலை 20 – வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்

மேலும் திரு. நசிம் ஜைதி கூறியதாவது :

“இந்த தேர்தலை நடத்துவதற்காக அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.  நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள். அந்தந்த மாநில சட்டமன்றங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கலாம். அவசர காரணங்களுக்காக வேறு இடங்களில் வாக்களிக்க வேண்டும் என்றால் 10 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கக்கூடாது. வாக்களிப்பவர்களுக்கு எந்த வகையிலும் லஞ்சமோ பரிச்ப்பொருளோ கொடுக்ககூடாது.”

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர்

பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத்தலைவராக தொடர வாய்ப்பு கிடைக்குமா?

குடியரசுத்தலைவர் தேர்தலில் மீண்டும் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்த பாஜக முன்வந்தால் போட்டி வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பாரதீய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதேபோல் பாரதீய ஜனதா கட்சிக்கு போட்டியாக எதிர்க்கட்சிகளும் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. இதற்காக 9 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் அவரை எதிர்த்து யாரையும் நிறுத்த வேண்டாம் என்கிற முடிவுக்கு எதிர்க்கட்சிகள் வந்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஓய்வுக்கு பின் பிரணாப் முகர்ஜி வசிப்பதற்க்காக டெல்லியில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு தயாராகி வருவதால் பாஜக அவரை வேட்பாளராக நிறுத்தும் வாய்ப்பு இல்லை என தெரிகிறது. இதையடுத்து குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டி உருவாகியுள்ளது. இந்திய குடியரசுத்தலைவர்களில் ராஜேந்திர பிரசாத் தவிர வேறு யாருக்கும் இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(

Share