Categories
ஐ.பி.எல். கிரிக்கெட்டு விளையாட்டு

ஐ.பி.எல் இறுதிப்போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது மும்பை அணி

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றது.

ஐ.பி.எல். கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி ஐதராபாத் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் – ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதிகபட்சமாக புனே அணியின் கேப்டன் ஸ்மித் 51 ரன்கள் எடுத்தார். மும்பை அணியின் ஜான்சன் 3 விக்கெட்டுகளைவும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

Share
Categories
ஐ.பி.எல். கிரிக்கெட்டு விளையாட்டு

இன்று ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி

இன்றிரவு நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் புனே அணியை எதிர்த்து மும்பை இண்டியன்ஸ் அணி விளையாட உள்ளது.

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் 10-வது ஐ.பி.எல். சீசன் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் தலா 2 முறை மோதின. மே 14ம் தேதியுடன் லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்தன. இதன் முடிவில் மும்பை 10 வெற்றிகளை பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. 9 வெற்றிகளுடன் 18 புள்ளி பெற்று புனே 2வது இடத்தை பிடித்தது.

முதல் 2 இடங்களை பிடித்த மும்பை – புனே அணிகள் இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் மோதின. இதில் புனே 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து நடந்த 2வது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனிடையே, இத்தொடரின் இறுதிப்போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

 

Share