Categories
உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வட கொரியா: நாளை மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை

நாளை மீண்டும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதிக்க உள்ளதாக அமெரிக்க மற்றும் தென் கொரிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தென்கொரியாவுடன் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதை ராணுவ தினமாக வடகொரியா நாளை கொண்டாடுகிறது. அச்சமயத்தில்,  வடகொரியாவின் பியோங்கன் மாகாணத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே வடகொரியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தென் கொரியா பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share
Categories
உலகம் வட கொரியா

வட கொரியா மீண்டும் புதிய ஏவுகணை சோதனை

வட கொரியா தனது மேற்கு கடற்கரை பகுதிக்கு அருகிலிருந்து பேலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு வட மேற்கு புற பகுதியான குஸாங் அருகிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டதாகவும், 700 கிலோ மீட்டர் தூரம் ஏவுகணை பறந்ததாகவும் தென் கொரியா கூறியுள்ளது.

வட கொரியா தொடர்ச்சியான பல ஏவுகணை சோதனைகளை நடத்தி சர்வதேச கண்டனங்கள் மற்றும் அமெரிக்கவுடனான உறவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற இரு ஏவுகணை சோதனைகளில், ஏவுகணை ஏவப்பட்ட சில நிமிடங்களிலே அதன் ராக்கெட்கள் வெடித்து சிதறியதால் சோதனைகள் தோல்வியில் முடிந்தன.

இந்த சமீபத்திய ஏவுகணை சோதனைக்கு தென் கொரியா மற்றும் ஜப்பான் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளன.

தென் கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே-இன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தனது பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share