Categories
உலகம் கத்தார் தலைப்புச் செய்திகள் மத்திய கிழக்கு நாடுகள்

கத்தாரின் மீது புதிய தடைகள் இல்லை : எகிப்து

கத்தாரின் பதில் எதிர்மறையானது என்றாலும்  புதிய தடைகள் எதுவும் இல்லை என்று எகிப்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.
எகிப்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சமே ஷௌக்ரி கூறும் போது, ” எங்களுக்கு உருப்படியான பதில் கிடைக்கவில்லை; ஒட்டுமொத்தமாக பதில் எதிர்மறையாகவுள்ளது. இப்பதில்கள் கத்தார் தனது கொள்கைகளிலிருந்து பின்வாங்கும் என்ற கருத்திற்கு இடம் தரவில்லை” என்றார்.
இதனிடையே சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் ஒன்று கூடி தங்களின் கெடு முடிந்தப் பிறகு கத்தார் அளித்துள்ள பதில்களைப்பற்றி விவாதித்தன. அவை கத்தாரிடம் 13 கோரிக்கைகளை எழுப்பியிருந்தன.
“கத்தாருக்கு எதிரான அரசியல், பொருளாதார தடைகள் அது தனது கொள்கைகளை நல்ல முறையில் மாற்றிக்கொள்ளும் வரை தொடரும்” என்றார் சவூதி வெளியுறவு அமைச்சர் ஜூபேர்.
Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் எகிப்து

கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “கிறிஸ்துவர்கள் மீதான கொலை தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

எகிப்தில் மின்யா மாகாணத்தில் கிழக்குப் பகுதியில் செயிண்ட் சாமுவேல் தேவலாயத்துக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த கிறிஸ்துவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “எகிப்தில் கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்பட்டது இரக்கமற்ற தாக்குதல். ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பொது மக்களுக்கு எதிராக தீவிரவாதிகள் போரில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகள் கிறிஸ்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கிறிஸ்துவர்களுக்கு எதிரான கொலைகள் முடிவுக்கு வர வேண்டும். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும். எகிப்து மக்களுக்கு அமெரிக்கர்கள் துணை நிற்பார்கள், நமது எதிரிகளை தோற்கடிப்போம்” என்றார்.

Share
Categories
உலகம் எகிப்து

எகிப்தில் தாக்குதல் : காப்டிக் கிறிஸ்தவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்சில் துப்பாக்கிதாரிகள் சுட்டு 23 பேர் பலி

வெள்ளிக்கிழமை (இன்று) கெய்ரோவிற்கு தெற்கே காப்டிக் கிறிஸ்தவர்கள்  பயணித்துக் கொண்டிருந்த  பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 23 பேர் கொல்லப்பட்டதுடன்  25 பேர் காயமடைந்தனர் என்று எகிப்திய அரச தொலைக்காட்சி தெரிவித்தது.

எந்தவொரு பயங்கரவாத குழுவும் தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் எகிப்திய காப்டிக் கிரிஸ்துவர்கள்  ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின்  விருப்பமான இலக்காக இருக்கின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில், ஐஸிஸ் அமைப்பு வெளியிட்ட ஒரு காணொளியில்  “எகிப்திய கிறிஸ்தவர்கள்  தங்களுக்கு பிடித்த இரை” என்று கூறியிருந்தனர். டிசம்பர் மாதத்தில் கெய்ரோ தேவாலயத்தில் ஒரு 30 பேரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரின் படத்தை இந்த வீடியோ காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share