Categories
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை வென்றது இங்கிலாந்து

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை  இங்கிலாந்து அணி வென்றது.

இந்திய அணியைப் பொறுத்தவரை, இறுதிப் போட்டியில் பங்கேற்றதே பெரிய சாதனைதான்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.முதலில் நிதானத்துடன் ஆடிய இங்கிலாந்து அணி 150 ரன்களுக்கு பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

சாரா டெய்லர்  45 ரன்களும், நாட் ஸ்கைவர் 51 ரன்களையும் அடித்து இங்கிலாந்த் அணிக்கு வலுசேர்த்தனர். இந்திய அணியின் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளையும், பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக என்.ஆர்.ஸ்கீவர் 51 ரன்கள் எடுத்துள்ளார்.  இதையடுத்து,  50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை எடுத்தது இங்கிலாந்து அணி.

இதனைத் தொடர்ந்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் மந்தனா, கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஜி.ராவட் 115 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அணியின் வலுவான நிலைக்கு அடித்தளமிட்டார். இந்நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், இந்தியா தடுமாறத்தொடங்கியது. இறுதியாக  48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம்  4வது முறையாக இங்கிலாந்து அணி உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Share
Categories
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியா கிரிக்கெட்டு விளையாட்டு

இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டின்  அரைஇறுதிப் போட்டியில் இந்திய அணி, தற்போதைய சாம்பியனான ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியைச் சந்திக்கவுள்ளது.

இப்போட்டியில் 171 ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், தனக்கு கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்து காட்டியிருப்பதாக கூறியிருக்கிறார். மேலும், எனது வாழ்க்கையில் நான் விளையாடிய மிகச்சிறந்த ஆட்டம் இது தான் என்றும் கூறினர்.

இந்திய கேப்டன் மிதாலிராஜ் கூறுகையில், “ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதான வி‌ஷயமல்ல. இது மிகப்பெரிய சாதனையாகும். அசாதாரணமான ஒரு இன்னிங்சை ஹர்மன்பிரீத் கவுர் ஆடியிருக்கிறார். ஒரு இந்தியராக நான் பார்த்த சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்றாகும்.” என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ‘மகளிர் உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றில் இந்திய அணிதான் வெற்றி பெறும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Share