Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள்

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா நாடாளுமன்றத்தில் நடந்தது.

20 நிமிடம் உரையாற்றிய  பிரணாப் முகர்ஜி, தனது உரையில் , ”நாடாளுமன்றம் என்பது ஆக்கபூர்வமான விவாதங்களுக்கானது. அதற்குத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, இடையூறுகள் மூலம் சிதைக்கக் கூடாது. என்னுடைய வாழ்க்கையில் 37 ஆண்டுகளை நாடாளுமன்றத்திற்காக அர்பணித்துள்ளேன்.” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்திரா காந்தி இரும்புப் பெண்மணி. அவர்தான் என்னுடைய வழிகாட்டி, அவரை அடுத்து வாஜ்பாய், நரசிம்ம ராவ் அவர்களைக் கூறுவேன். சில சமயங்களில் அத்வானியை பின்பற்றியுள்ளேன். சோனியா அவர்களிடம் இருந்து எனக்கு தொடர்ந்து ஆதரவு கிடைத்துக் கொண்டு இருந்தது. வண்ண வண்ண நினைவுகளுடன் இந்த மாண்புமிகு நாடாளுமன்றத்தில் இருந்து விடை பெறுகிறேன். நாட்டு மக்களுக்கு அவர்களது சேவகனாக இருந்து சேவை ஆற்றி இருப்பது எனக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கிறது” என்றார்.

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள்

இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் 25-ந் தேதி பதவி ஏற்கிறார்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்கிறார்.

ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற மக்களவை செயலாளருமான அனூப் மிஷ்ரா நேற்று மாலை ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தலித் தலைவர் ஆவார். இவர் 2-வது தலித் ஜனாதிபதி என்ற பெருமையை பெறுகிறார். 1997 முதல் 2002-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்த கேரளாவைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதி ஆவார்.

டெல்லி ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வக்கீலாக பணியாற்றி இருக்கும் ராம்நாத் கோவிந்த், டெல்லி மேல்-சபையில் பாரதீய ஜனதா எம்.பி.யாக 12 ஆண்டுகள் பதவி வகித்து இருக்கிறார்.

வருகிற 25-ந் தேதி இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்கிறார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

 

Share