Categories
ஆப்கானிஸ்தான் உலகம் தலைப்புச் செய்திகள்

ஆப்கானிஸ்தான் மசூதி அருகே குண்டு வெடிப்பு; 7 பேர் பலி

ஆப்கானிஸ்தான் ஹெரட் நகரில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே இன்று குண்டு வெடித்தது. இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் 15 பேர் படுகாயம் காயமடைந்தனர்.

12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய மசூதியான ஜமா மஸ்ஜித் அருகே உள்ள ஒரு பூங்காவில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஈரான் எல்லை அருகே உள்ள ஹெரட் நகரம் ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரம் ஆகும். கடந்த புதன்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் நடந்த ஒரு வன்முறைத் தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்றனர்.
இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தானின் மற்றொரு பெரிய நகரமான ஹெரடில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
Share