Categories
அமர்நாத் இந்தியா ஜம்மு காஷ்மீர் தலைப்புச் செய்திகள்

அமர்நாத் திருப்பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல்

காஷ்மீர்: ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை அருகே அமர்நாத் திருப்பயணிகள் சென்றுகொண்டிருந்த பஸ் மற்றும் அனந்த்னாக் அருகே ஒரு பொலிஸ் குழு  மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் ஒரு உயிர் ஊசலாடும் நிலையில் உள்ளார். இது அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் ஆகும்.

தாக்குதலுக்கு உள்ளான அமர்நாத் பயணிகள் மருத்துவமனையில் முதலுதவி பெறுகின்றனர்

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் முனிர் கான் இந்தத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்ததாக  தெரிவித்தார். காஷ்மீரில் உள்ள இணைய சேவைகள் தாக்குதலுக்கு பின்னர் தடுக்கப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு உள்ளான யாத்ரீகர்களின் பஸ் குஜராத்தில் இருந்து புறப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தாக்குதலுக்கு பின்னர் மூடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த சூழ்நிலையை குறித்து ஆராய்ந்து வருகின்றனர். மோடி டிவிட்டரில் “ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமாதானமானமாக சென்றுகொண்டிருந்த அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான கொடூரமான தாக்குதலால் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவு வேதனை அடைந்தேன். ஆனால் இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்களாலும், வெறுப்புணர்ச்சியின் தீய எண்ணங்களாலும் இந்தியா ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

Share
Categories
அமர்நாத் இந்தியா ஜம்மு காஷ்மீர் தலைப்புச் செய்திகள்

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்

காஷ்மீரில் பர்ஹான் வானி நினைவு தினத்தை முன்னிட்டு  ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக கடந்த இரு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

 

ஞாயிற்றுக்கிழமை அமர்நாத் யாத்திரையின் துவக்கத்தைக் குறிக்க பஹல்கம்  முகாமுக்கு அருகே சிறப்புப் பூஜை நடைபெற்றது.  சுவாமி அமர்நாத் ஜெய் வருடாந்த புனித யாத்திரையின் துவக்க விழாவைக் குறிக்கும் வகையில் ‘வியாச-பூர்ணிமா’ நிகழ்ச்சியில் பஹல்கம்மில் பூமி-புஜான், நவக்ரா-புஜான், சாகரி-பூஜான் மற்றும் தவாஜோருஹன் விழாக்கள் வெத மந்திரங்கள் முழங்க, நிகழ்த்தப்பட்டன.

 

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதி பர்ஹான் வானி நினைவு தினத்தை அனுசரிக்க போவதாக பிரிவினைவாதிகள் அறிவித்ததால் அங்கு பதற்ற நிலை நிலவியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை கடந்த இரு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Share