Latest Posts
May 31, 2017
சென்னை ஐஐடியில் நடந்த மாட்டிறைச்சி விருந்தில் கலந்துகொண்ட மாணவர் ஒருவர், வலதுசாரி ஆதரவு மாணவரால் தாக்கப்பட்டிருக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு கடும் விதிமுறைகளை விதித்து கடந்த மே 25ஆம் தேதியன்று உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) அன்று இரவு சில மாணவர்கள் மாட்டு இறைச்சி விருந்து ஒன்றை நடத்தினர். இதில் சுமார் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விருந்தில் கலந்துகொண்ட சூரஜ் ராஜகோபாலன் என்ற மாணவர் இன்று பிற்பகலில் ஐஐடி வளாகத்திலேயே தாக்கப்பட்டார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் (36) ஐஐடியில் ஏரோஸ்பேஸ் பொறியியலில் ஆராய்ச்சி மாணவராக இருந்துவருகிறார்.
Read More →May 30, 2017
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக, பாரதீய ஜனதா கட்சியின் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிடிஐ செய்தி முகமை தகவல்களின்படி, இந்தத் தலைவர்களின் மேல்முறையீட்டை லக்னெள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று நிராகரித்தது.
எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி மற்றும் பிற தலைவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறிவிட்டது.
நீதிமன்ற விசாரணையின்போது, அத்வானி, ஜோஷி, உமாபாரதி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.
இவர்களைத் தவிர, பாரதீய ஜனதா கட்சியின் வினய் கட்டியார், இந்துத்துவா பிரசாரகர் சாத்வி ரிதம்பரா ஆகியோரும் ஆஜராகினர்.
Read More →May 30, 2017
இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 19 ஆயிரம் குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் பெற்றுள்ளன.
மிக மோசமான பாதிப்புக்குள்ளான ஏழு மாவட்டங்களிலும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை பிந்திய தகவல்களின் அடிப்படையில் 180 ஆக அதிகரித்துள்ளது. 110 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர். மேலும் 109 பேர் காயமுற்றுள்ளனர் .
இதே வேளை வெள்ளத்தினால் மூழ்கிய பகுதிகளில் நீர் மட்டம் குறைந்திருந்தாலும். இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்களை இருப்பிடங்களுக்கு மீள திரும்ப வேண்டாம் என அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் பொது மக்களை கேட்டுள்ளது.
Read More →May 30, 2017
மாட்டிறைச்சி தொடர்பாக மத்திய அரசின் உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவரது பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது :
கடந்த 26-ந்தேதி மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்தது. மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது சட்டவிரோதம். இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும்.
Read More →May 30, 2017
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரும் செலவில் வெளியாகவிருக்கும் சரித்திர பின்னனி கொண்ட படமாக அறிவிக்கப்பட்ட சங்கமித்ராவில், ஜெயம் ரவி, ஆர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
எட்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக அமையவுள்ள இப்படத்தின் முதல் பார்வை கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது; அதில் ஸ்ருதி ஹாசன் உட்பட ஆர்யா, சுந்தர்.சி மற்றும் ஜெயம் ரவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இப்படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியுள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. தற்போது விலகலுக்கான காரணம் குறித்து ஸ்ருதிஹாசன் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Read More →May 30, 2017
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சிபிஐ சோதனை குறித்து அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். அவ்வறிக்கையில் சிபிஐ சோதனையின் இலக்கு தானே என்றும் எப்.ஐ.ஆரில் தனது பெயர் இல்லையெனினும் தன் மீது குறி வைத்தே மத்திய அரசு இந்த சோதனையை மறைமுகமாக நடத்தியுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
மே 17ம் தேதி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. ஐஎன்எஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ விளக்கமளித்தது.
Read More →May 30, 2017
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு இன்று சுற்றுப் பயணம் கிளம்பினார்.
இந்தியாவின் பொருளாதார ரீதியிலான பங்கேற்புகளை அதிகரிக்கவும், நாட்டிற்கு அந்நிய முதலீடுகளைக் கொண்டுவரவும் 6 நாட்கள் அரசு முறை பயணமாக மோடி கிளம்பியுள்ளார். முதலில் ஜெர்மனி செல்லும் அவர், அந்நாட்டின் தலைவர் ஏஞ்சலா மார்க்கலை சந்தித்து சர்வதேச மற்றும் வட்டார ரீதியிலான வளர்ச்சி குறித்து விவாதிக்கிறார். இதில் இந்தியாவுக்கு ஜெர்மனிக்கும் இடையேயான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகள் குறித்து உரையாடுகிறார். மேலும் ஜெர்மனியின் அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மெரையும் சந்திக்கிறார்.
Read More →May 28, 2017
ஐஸ்லாந்தில் நடைப்பெற்று வரும் உலகக்கோப்பை வாள்வீச்சு (Fencing) போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட, தமிழ்நாட்டின் சி.ஏ.பவானிதேவி தங்கப்பதக்கம் வென்று உள்ளார். சர்வதேச அளவில் வாள்வீச்சு போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
அரையிறுதிப்போட்டியில் சி.ஏ.பவானிதேவி பிரிட்டன் நாட்டு வீராங்கனை ஜெஸிகா கார்பை எதிர்கொண்டார். இதில் 15-11 என்ற புள்ளிகணக்கில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியிலும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த சாரா ஜென் ஹம்ப்சன் வீராங்கனையை எதிர் கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய அவர் 15-13 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் சர்வதேச அளவில் வாள்வீச்சு (Fencing)போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Read More →May 28, 2017
இந்தியா-நியூசிலாந்து இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 190 ரன் இலக்கை நோக்கி இந்தியா ஆடியது. 26 ஓவர்களில் முடிவில் மழை குறுக்கிட்டது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. 26 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 129 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டதால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.
Read More →May 28, 2017
உத்தரப் பிரதேசத்தில், தலித் குடும்பத்தினருக்கு சோப்பு வழங்கிய விவகாரத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த சமுதாயத்திடம் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், குஷிநகர் மாவட்டம் மனிப்பூர் தீனாபட்டி கிராமத்துக்கு கடந்த வியாழக்கிழமையன்று சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் முஷார் தலித் குடும்பத்தினரை அவர் சந்தித்தார். ஆனால், அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது முன்னதாக முஷார் தலித் குடும்பத்தினரிடம் சோப்பு மற்றும் ஷாம்பூ வழங்கிய அதிகாரிகள் கூட்டத்துக்கு பங்கேற்க வருவதற்கு முன்பு குளித்து விட்டு வர வேண்டும் என தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து, அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
Read More →