Categories
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியா உர்ஜிட் படேல் காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் ப. சிதம்பரம் பண மதிப்பு நீக்கம் ராகுல் காந்தி ரூபாய் நோட்டு

பணமதிப்பு நீக்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல்லாத நோட்டு எண்ணிக்கை தொடருகிறது

பணமதிப்பு நீக்க நடவடிக்கை துவங்கிய 8 மாதங்களுக்குப் பிறகும் செல்லாத நோட்டுகள் எண்ணும் பணி தொடர்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது தெரிந்ததே. இத்தகவல் சமூக வலைத்தளங்களிலும் மக்களிடையேயும் பலவிதமாக சரமாரியாக கிண்டல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதுகுறித்து காங்கிரஸ்  துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், ரிசர்வ் வங்கிக்கு மட்டுமின்றி, பிரதமர் அலுவலகத்துக்கும் கணக்கு ஆசிரியர்களை  நியமிக்கலாம் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தனது ட்விட்டரில், “பணமதிப்பு நீக்கத்துக்கு 8 மாதங்கள் கழித்து ஆர்பிஐ நோட்டு எண்ணும் இயந்திரம் வாங்கியுள்ளது, குத்தகை என்று ஒன்று இருப்பது ஆர்பிஐ-க்கு தெரியுமா” என்று பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றக் குழுவின் முன்னால் பேசிய ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், தடைசெய்யப்பட்ட நோட்டுகள் இன்னமும் எண்ணப்பட்டு வருகின்றன, ஆகவே எண்ணிக்கை பற்றி இப்போது கூற முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு எவ்வளவு தொகை வங்கிகளில் பழைய நோட்டுகள் டெபாசிட் ஆகின என்ற விவரத்தை இன்னமும் கூட மத்திய அரசு வெளியிடவில்லை.

Share
Categories
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியா பண மதிப்பு நீக்கம்

பணமதிப்பு நீக்கம்: பொருளாதாரம் மெதுவாக பழைய நிலைக்குத் திரும்புகிறது; தகவல்களை மூடிமறைப்பதில் ஆர்.பி.ஐ. தீவிரம்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் துவங்கப்பட்ட 6 மாதங்களுக்குப் பிறகு, அதன் தாக்கம் மெதுவாகக் குறைவதாகத் தெரிகிறது. இந்நடவடிக்கையின் முழு பாதிப்புகளும் இன்னும் அறியப்படாத நிலையில், ஆர்.பி.ஐ. யும் பிரதமர் அலுவலகமும் தகவல்களை மூடி மறைப்பதில் தீவிரமாக இருக்கின்றன.

இந்த நடவடிக்கை குறித்து பிரதமர் அலுவலகத்திற்கும் ஆர்பிஐ-க்கும் இடையே நடைபெற்ற ஆவணப்பரிமாற்றங்களின் நகல்களை  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) அடிப்படையிலான ஒரு மனு கோரியிருந்தது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தீர்மானித்த விவரங்களை வெளியிடுவது நாட்டின் பொருளாதார நலன்களுக்கு கேடு விளைவிக்கும் என்று கூறி ஆர்டிஐ மனுதாரருக்கு தகவல் அளிக்க மத்திய ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.

ஆர்டிஐ கேள்விக்கு பதில் அளித்த ஆர்பிஐ, பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்த முடிவை எடுக்கத் தூண்டிய விவரங்களை வெளியிடுவது நாட்டின் எதிர்கால  கொள்கை, உள்ளிட்ட பொருளாதார நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளது.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் முடக்கம் சென்ற ஆண்டு நவம்பரில் துவங்கப்பட்டபின் ரியல் எஸ்டேட், கார் உள்ளிட்ட பல பெரிய தொழில்கள் முதல் இரு மாதங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டன.  தற்போது  இவை மீண்டும் பழைய நிலைக்கு மெதுவாகத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. ஆனால் சிறுதொழில்கள் இன்னும் நசிந்த நிலையிலே உள்ளன. பெரும்பான்மையான சிறுதொழில்கள் வங்கியில் வாங்கிய கடன்களை அடைக்கமுடியாமல் இன்னும் இருக்கின்றன.

Share