Categories
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியா உர்ஜிட் படேல் காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் ப. சிதம்பரம் பண மதிப்பு நீக்கம் ராகுல் காந்தி ரூபாய் நோட்டு

பணமதிப்பு நீக்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல்லாத நோட்டு எண்ணிக்கை தொடருகிறது

பணமதிப்பு நீக்க நடவடிக்கை துவங்கிய 8 மாதங்களுக்குப் பிறகும் செல்லாத நோட்டுகள் எண்ணும் பணி தொடர்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது தெரிந்ததே. இத்தகவல் சமூக வலைத்தளங்களிலும் மக்களிடையேயும் பலவிதமாக சரமாரியாக கிண்டல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதுகுறித்து காங்கிரஸ்  துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், ரிசர்வ் வங்கிக்கு மட்டுமின்றி, பிரதமர் அலுவலகத்துக்கும் கணக்கு ஆசிரியர்களை  நியமிக்கலாம் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தனது ட்விட்டரில், “பணமதிப்பு நீக்கத்துக்கு 8 மாதங்கள் கழித்து ஆர்பிஐ நோட்டு எண்ணும் இயந்திரம் வாங்கியுள்ளது, குத்தகை என்று ஒன்று இருப்பது ஆர்பிஐ-க்கு தெரியுமா” என்று பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றக் குழுவின் முன்னால் பேசிய ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், தடைசெய்யப்பட்ட நோட்டுகள் இன்னமும் எண்ணப்பட்டு வருகின்றன, ஆகவே எண்ணிக்கை பற்றி இப்போது கூற முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு எவ்வளவு தொகை வங்கிகளில் பழைய நோட்டுகள் டெபாசிட் ஆகின என்ற விவரத்தை இன்னமும் கூட மத்திய அரசு வெளியிடவில்லை.

Share
Categories
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியா தலைப்புச் செய்திகள் வங்கி வர்த்தகம்

லாக்கரில் பொருட்கள் திருட்டு போனால் வங்கி பொறுப்பு ஆகாது: ரிசர்வ் பேங்க்

வங்கிகளில் உள்ள லாக்கரில் விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் போன்றவற்றை வைத்தால் அவை பாதுகாப்பாக இருக்கும் என்றும், ஒரு வேளை அவை திருட்டு போய்விட்டால், வங்கி நிர்வாகம் அதற்கு பொறுப்பேற்று விடும் என்றும் பொதுமக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது உண்மையல்ல, வங்கிகள் அதற்கு பொறுப்பு ஏற்காது என்ற கசப்பான உண்மை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வக்கீல் குஷ் கல்ரா என்பவர் எழுப்பிய கேள்விக்கு பாரத ரிசர்வ் வங்கியும், 19 பொதுத்துறை வங்கிகளும் அளித்த பதிலில் தெரியவந்தது.

வாடிக்கையாளர்களின் பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பை பொதுத்துறை வங்கிகள் துறப்பதையே அது காட்டியது.

இந்தப் பதில்,  வக்கீல் குஷ் கல்ராவை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இதையடுத்து அவர் சி.சி.ஐ. என்னும் இந்திய போட்டி ஆணையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அப்புகாரில் அவர்,  “வங்கிக்கு வாடிக்கையாளர் வாடகை கொடுத்து லாக்கரில் விலை உயர்ந்த பொருட்களை வைத்தும், அவற்றுக்கான பொறுப்பை வங்கி ஏற்காதபோது, அதற்கு பதிலாக விலை உயர்ந்த பொருட்களை காப்பீடு செய்து விட்டு, அவற்றை வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாமே?  வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற வி‌ஷயங்களில் வங்கிகள் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.  லாக்கர் சேவையில் வங்கிகள் கூட்டு சேர்ந்து செயல்படுவது பற்றி போட்டி சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த வேண்டும்”, என்று தெரிவித்துள்ளார்.

Share
Categories
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியா பண மதிப்பு நீக்கம்

பணமதிப்பு நீக்கம்: பொருளாதாரம் மெதுவாக பழைய நிலைக்குத் திரும்புகிறது; தகவல்களை மூடிமறைப்பதில் ஆர்.பி.ஐ. தீவிரம்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் துவங்கப்பட்ட 6 மாதங்களுக்குப் பிறகு, அதன் தாக்கம் மெதுவாகக் குறைவதாகத் தெரிகிறது. இந்நடவடிக்கையின் முழு பாதிப்புகளும் இன்னும் அறியப்படாத நிலையில், ஆர்.பி.ஐ. யும் பிரதமர் அலுவலகமும் தகவல்களை மூடி மறைப்பதில் தீவிரமாக இருக்கின்றன.

இந்த நடவடிக்கை குறித்து பிரதமர் அலுவலகத்திற்கும் ஆர்பிஐ-க்கும் இடையே நடைபெற்ற ஆவணப்பரிமாற்றங்களின் நகல்களை  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) அடிப்படையிலான ஒரு மனு கோரியிருந்தது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தீர்மானித்த விவரங்களை வெளியிடுவது நாட்டின் பொருளாதார நலன்களுக்கு கேடு விளைவிக்கும் என்று கூறி ஆர்டிஐ மனுதாரருக்கு தகவல் அளிக்க மத்திய ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.

ஆர்டிஐ கேள்விக்கு பதில் அளித்த ஆர்பிஐ, பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்த முடிவை எடுக்கத் தூண்டிய விவரங்களை வெளியிடுவது நாட்டின் எதிர்கால  கொள்கை, உள்ளிட்ட பொருளாதார நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளது.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் முடக்கம் சென்ற ஆண்டு நவம்பரில் துவங்கப்பட்டபின் ரியல் எஸ்டேட், கார் உள்ளிட்ட பல பெரிய தொழில்கள் முதல் இரு மாதங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டன.  தற்போது  இவை மீண்டும் பழைய நிலைக்கு மெதுவாகத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. ஆனால் சிறுதொழில்கள் இன்னும் நசிந்த நிலையிலே உள்ளன. பெரும்பான்மையான சிறுதொழில்கள் வங்கியில் வாங்கிய கடன்களை அடைக்கமுடியாமல் இன்னும் இருக்கின்றன.

Share
Categories
இந்திய ரிசர்வ் வங்கி புதிய 2000 ரூபாய் ரூபாய் நோட்டு

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவிய வழக்கில் ஜாமீன் மறுப்பு!

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சேகர் ரெட்டிக்கு உதவியதாக கைதான கொல்கத்தா தொழிலதிபர் பாரஸ்மல் லோதாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில், கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 147 கோடி ரொக்கம், 178 கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் முறைகேடான முறையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பதுக்கியதாக தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகியோரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.

இவர்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியதாக, கடந்த ஜனவரி 3ஆம் தேதி  தொழிலதிபர் பாரஸ்மல் லோதாவை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி லோதா சார்பில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த மனு சிபிஐ நீதிமன்ற நீதிபதி வெங்கடசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணை முழுமையாக முடியாத நிலையில் பரஸ்மல் லோதாவுக்கு ஜாமின் வழங்க கூடாது என சி.பி.ஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தற்போதைய நிலையில் ஜாமின் வழங்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Share
Categories
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியா ரூபாய் நோட்டு ரூபாய் நோட்டு

ஏடிஎம்மில் எடுத்த புதிய 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெறவில்லை

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது. இதனையடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. புதிய ரூபாய் நோட்டுகளில் அச்சு பிழை இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அப்போது உடனடி தேவை என்ற நிலையில் அவசரமாக அச்சடிக்கப்பட்டதால் இந்த பிழை நேரிட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது, ஆனால் இப்போது வரையில் 500 ரூபாய் நோட்டுகளில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது. ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்பட்டாலும், அதனை ஏடிஎம்மில் எடுக்கும்போது பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

சமீபத்தில் வங்கி ஏடிஎம்களிலே போலி ரூபாய் நோட்டுகள் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த ஒருவருக்கு மகாத்மா காந்தியின் உருவப்படம் இல்லாத புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்து உள்ளது. மொரேனாவில் நேற்று பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த ஒருவருக்கு மகாத்மா காந்தியின் உருவப்படம் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. பின்னர், ஏமாற்றமடைந்த அவர் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றியுள்ளார். இதுபோன்ற சம்பவங்களை தடுத்த ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
Share
Categories
அமெரிக்கா இந்திய ரிசர்வ் வங்கி உர்ஜிட் படேல் உலகம்

உலகெங்கிலும் உள்ள திறமைகள் இன்றி ஆப்பிள், ஐபிஎம் வளர்ந்திருக்க முடியுமா? – உர்ஜிட் படேல்

அமெரிக்க தற்காப்புவாதக் கொள்கைகளை விமர்சிக்கும் விதமாக ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், உலகம் முழுதும் உள்ள திறமைகளின் பங்களிப்பின்றி ஆப்பிள், ஐபிஎம் நிறுவனங்கள் வளர்ந்திருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நியூயார்க்கில் சொற்பொழிவாற்றிய பிறகு உர்ஜித் படேல் கூறியதாவது:

உலகின் மிகத்திறமை வாய்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு விலைகள் உலகெங்கிலும் வந்து பங்களிப்பு செய்த திறமைகள் இன்றி உயர்ந்திருக்க முடியுமா?

உலகத்திறமைகளின் பங்களிப்பு இல்லாமல் ஆப்பிள் எங்கிருந்திருக்கும்? சிஸ்கோ எங்கு இருந்திருக்கும்? ஐபிஎம் எங்கு இருந்திருக்கும்? இதற்குத் தடை ஏற்படும் விதமாக கொள்கைகள் வகுக்கப்பட்டால், தற்காப்புவாதக் கொள்கைகளுக்கு ஆதரவளித்தால் ஒரு நாட்டின் செல்வ வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் காரணிகளே அதிகம் பாதிக்கப்படும்.

வாணிப உபகரணங்களான சுங்கத்தீர்வைகள், எல்லை வரி உள்ளிட்டவைகள் மூலம் தற்காப்புவாதத்தை திறம்பட செயல்படுத்தி விட முடியாது. மாறாக வளர்ச்சிக்கு குந்தகமே விளைவிக்கும், என்றார்.

ஜிஎஸ்டி வரி குறித்து..

“சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கூட்டுறவை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருப்பது நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தின் மிகப்பெரிய உதாரணமாகும். இதில் சமரசம் செய்து கொண்டிருந்தால் ஜி.எஸ்.டி. என்பது அமைப்பு ரீதியாக வரி விதிப்பு நடைமுறைகளை பலவீனப்படுத்தியிருக்கும்” என்றார் உர்ஜித் படேல்.

(நன்றி : தி இந்து தமிழ்)

Share