Categories
ஐ.பி.எல். கிரிக்கெட்டு விளையாட்டு

ஐ.பி.எல் இறுதிப்போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது மும்பை அணி

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றது.

ஐ.பி.எல். கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி ஐதராபாத் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் – ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதிகபட்சமாக புனே அணியின் கேப்டன் ஸ்மித் 51 ரன்கள் எடுத்தார். மும்பை அணியின் ஜான்சன் 3 விக்கெட்டுகளைவும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

Share
Categories
ஐ.பி.எல். கிரிக்கெட்டு விளையாட்டு

இன்று ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி

இன்றிரவு நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் புனே அணியை எதிர்த்து மும்பை இண்டியன்ஸ் அணி விளையாட உள்ளது.

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் 10-வது ஐ.பி.எல். சீசன் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் தலா 2 முறை மோதின. மே 14ம் தேதியுடன் லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்தன. இதன் முடிவில் மும்பை 10 வெற்றிகளை பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. 9 வெற்றிகளுடன் 18 புள்ளி பெற்று புனே 2வது இடத்தை பிடித்தது.

முதல் 2 இடங்களை பிடித்த மும்பை – புனே அணிகள் இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் மோதின. இதில் புனே 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து நடந்த 2வது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனிடையே, இத்தொடரின் இறுதிப்போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

 

Share
Categories
கால்பந்து விளையாட்டு

கால்பந்தில் இந்தியா இத்தாலியை வென்றது

உலகக்கோப்பை கால்பந்தில் பதினேழு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் முதன்முறையாக இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான இத்தாலி அணியுடன் இளம் இந்திய அணி நேற்று முன்தினம் மோதியது. அரிஸோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் அபிஜித் சர்கார் 31-வது நிமிடத்திலும், ராகுல் பிரவீன் 80-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.

8-வது நிமிடத்தில் கோமல் தாட்டல், இத்தாலி வீரர்களுக்கு போக்குக்காட்டி பந்தை வேகமாக முன்னெடுத்துச் சென்றார். ஆனால் கோல் அடிக்கும் அவரது முயற் சிக்கு பலன் கிடைக்கவில்லை. 13-வது நிமிடத்தில் அனிகெட் இலக்கை நோக்கி அடித்த பந்தை இத்தாலி கோல் கீப்பர் எளிதாக தடுத்து நிறுத்தினார்.

31-வது நிமிடத்தில் அபிஜித் சர்கார், இத்தாலி அணியின் தடுப்பு அரண்களை லாவகமாக ஏமாற்றி கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. 59-வது நிமிடத்தில் எளிதாக கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை அனிகெட் தவறவிட்டார்.

இதேபோல் 75-வது நிமிடத்தில் ராகுல் பிரவீன் கோல்கம்பத்துக்கு மிகநெருக்கமாக கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றத் தவறி னார். அடுத்தடுத்து கோல் அடிக் கும் வாய்ப்புகளை இந்திய அணி உருவாக்கியதால் இத்தாலி அணி அதிர்ச்சியடைந்தது. 80-வது நிமிடத்தில் ராகுல் பிரவீன், பாக்ஸ் பகுதிக்குள் நுழைந்து அற்புதமாக கோல் அடிக்க இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணிக்கு அகில இந்திய கால்பந்து சம்மேளனம், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல், சேவக் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Share
Categories
டென்னிஸ் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ்: போபண்ணா ஜோடி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகரான ரோம் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் போபண்ணா- உருகுவேயின் பப்லோ குயேவாஸ் ஜோடி, பிரான்சின் பியரே-ஹியூக்ஸ் ஹெர்பெர்ட் – நிகோலஸ் மஹட் ஜோடியை எதிர்கொண்டு விளையாடியது.

இந்தப் போட்டியில் இரு ஜோடிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் மூன்று செட்டுகளும் ‘டைபிரேக்கர்’ வரை சென்றன.

முதல் செட் டைபிரேக்கரில் போபண்ணா ஜோடி 5-7 என தோல்வியடைந்தது. ஆனால், 2-வது செட் டை பிரேக்கரில் 7-2 வெற்றி பெற்றது. வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட் டைபிரேக்கரில் 12-10 என தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

காலிறுதிக்கு நுழைந்ததன் மூலம் போபண்ணா ஜோடிக்கு 180 ஏடிபி புள்ளிகளும், 32,010 யூரோவும் பரிசாகக் கிடைத்தன.

அதுபோல மகளிர் பிரிவில் இந்தியாவின் முன்னணி நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா – ஷ்வேடோவா ஜோடி 3-6, 6-7(7) என்ற செட் கணக்கில் இரண்டாம் நிலை ஜோடியான சான் – ஹிங்கிஸ் ஜோடியிடம் அரையிறுதியில் தோல்வியடைந்தது.

Share
Categories
விளையாட்டு ஸ்கேட்டிங்

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 2 தங்கம் வென்ற விருதுநகர் மாணவி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் மீன்ராஜ் என்பவரது மகள் சுபஸ்ரீ. நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு முடித்து 8ம் வகுப்பு செல்லும் சுபஸ்ரீ, சிறு வயதிலிருந்தே ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதையறிந்த இவரது பெற்றோர் சாத்தூரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் இவரை சேர்த்து பயிற்சி அளித்தனர்.

அங்கு 2 ஆண்டுகள் தீவிரப் பயிற்சி பெற்ற சுபஸ்ரீ, பின்னர் கோத்தகிரியில் உள்ள பள்ளியில் பயின்றபோது 4 ஆண்டுகள் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றார். கடந்த ஆண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்து படித்து வரும் சுபஸ்ரீ மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார்.

கடந்த மே 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மலேசியாவின் மாலாகாவில் நடை பெற்ற சர்வதேச அளவிலான பள்ளி மாணவிகளுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் 10-12 வயது பிரிவில் பங்கேற்று அவர் விளையாடினார். இதில் 500 மீட்டர் தூரத்தை 56 நொடிகளிலும், ஆயிரம் மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களிலும் கடந்து இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்றார்.

Share
Categories
ஐ.பி.எல். கிரிக்கெட்டு விளையாட்டு

டெல்லி குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி கிரிக்கெட்

டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சில சுவாரஸ்யங்கள்:

► குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா இந்த போட்டியில் 43 பந்துகளுக்கு 5 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் 77 ரன்களை எடுத்ததன் மூலம் தனது 5 ஆயிரம்(5,059) ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் தனது 31வது அரை சதத்தை பதிவு செய்தார். 5066 ரன்களுடன் பெங்களூரு அணியின் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

► டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பேட்டிங்கில் மொத்தம் 20 சிக்சர்கள் விளாசப்பட்டது. அதில் ரிசப் பேண்ட் -9 சிக்சர்களும், சாம்சனின் 7 சிக்சர்களும் ஷ்ரெயாசின் 2 சிக்சர்களும், ஆண்டர்சனின் 2 சிக்சர்களும் அடக்கம்.

► இந்த போட்டியில் 37.3 ஓவர்களில் குஜராத் லயன்ஸ் பேட்ஸ்மேன்களால் 11 சிக்சர்கள், டெல்லி டேர்டெவில்ஸ் பேட்ஸ்மேன்களால் 20 சிக்சர்கள் என மொத்தம் 31 சிக்சர்கள் விளாசப்பட்டது. மொத்தம் எடுக்கப்பட்ட 422 ரன்களில் 186 ரன்கள் சிக்சர்கள் மூலம் பெறப்பட்டவை. அதாவது மொத்த ரன்னில் 44% சிக்சர்கள் மூலம் எடுக்கப்பட்ட ரன்களாகும்.

► இந்தப் போட்டியில் மொத்தம் 31 சிக்சர்கள் விளாசப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு முன் 2010ம் ஆண்டில் சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் 30 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

► டெல்லி டேர்டெவில்ஸ் அணி 214 ரன்களை 17.3 ஓவரில் துரத்திப் பிடித்தது 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாகும். அதற்கு முன் 2007ம் ஆண்டில் சவுத் ஆப்பிரிக்கா அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 17.4 ஓவரில் 208 ரன்களை துரத்திப் பிடித்து வரலாற்றை பதிவு செய்திருந்தது.

► 209 ரன்களை டெல்லி டேர்டெவில்ஸ் அணி  துரத்திப்பிடித்தது ஐபிஎல் வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 2008ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்றப் போட்டியில் 215 ரன்களை துரத்திப்பிடித்து வரலாற்றை பதிவுசெய்திருந்தது.

► சஞ்சு சாம்சன் 7 சிக்சர்களை அவரது பங்கிற்கு விளாசித்தள்ளினார். நிதிஷ் ராணாவிற்குப் பிறகு 7 சிக்சர்களை பவுண்டரிகள் ஏதும் எடுக்காமல் விளாசியது குறிப்பிடத்தக்கது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நிதிஷ் ராணா, பவுண்டரிகள் ஏதும் அடிக்காமல் 7 சிக்சர்களை விளாசியிருந்தார்.

► இந்த ஆட்டத்தில் ரிஷப் பேண்ட் 43 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 9 சிக்சர்கள் அடித்து 97 ரன்கள் பெற்றதன் மூலம் 225.58 ஸ்ட்ரைக் ரேட் பெற்றிருந்தார். இது இந்த சீசனில் 90+ ரன்கள் அடிக்கப்பட்டதில் இரண்டாவது அதிகபட்ச ஸ்ட்ரைக்ரேட் ஆகும்.

► இந்த ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் பேட்ஸ்மேன்களால் 20 சிக்சர்கள் விளாசப்பட்டது, ரன்களை சேஸ் செய்வதில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்களாகும். இதற்கு முன் டெல்லிடேர்டெவில்ஸ் வீரர்களால் இரண்டு முறை 19 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே அதிக பட்சமாக இருந்தது. அதற்கு முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் 15 சிக்சர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

► 214/3 ரன்களை டெல்லி டேர்டெவில்ஸ் அணி அடித்தது இரண்டாவது அதிகபட்சமாகும். இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217/7 ரன்களை டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கெதிராக துரத்தி பிடித்திருந்தது.

► 15 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 200+ ரன்களை டெல்லி டேர்டெவில்ஸ் அணி துரத்திப்பிடித்தது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்முறை. இதற்கு முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 10 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 201 ரன்களை துரத்திப்பிடித்து வெற்றியை பதிவு செய்திருந்தது.

► இந்த போட்டியில் உள்ள மற்றொரு சுவாரஸ்யம் என்னவெனில் கடந்த வருடம் இதே நாளில் நடைபெற்ற குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் ரிசப் பேண்ட் 43 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தார். அந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, குஜராத் லயன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

► இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை அதிக சிக்சர்கள் அடித்தவர்கள்:

வார்னர் – 23 சிக்சர்கள்
உத்தப்பா – 21 சிக்சர்கள்
ரிசப் பேண்ட் – 20 சிக்சர்கள்
சாம்சன் – 19 சிக்சர்கள்

(NEWS 7)

Share