Categories
ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் : 10வது முறையாக ரபேல் நடால் சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மகத்தான சாதனை படைத்தார்.

விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் (3வது ரேங்க்) நேற்று மோதிய நடால், அதிரடியாக விளையாடி 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். களிமண் தரை மைதானத்தில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் அசைக்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்தி வரும் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் ((2005 -08, 2010-14, 2017) வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அவர் பெறும் 15வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.

Share
Categories
ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தலைப்புச் செய்திகள் விளையாட்டு

ஜெலீனா ஆஸ்டாபென்கோ ஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார்

டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இது வரை இடம்பெறாத வீராங்கனையான ஜெலீனா ஆஸ்டாபென்கோ, 2017-ஆம் ஆண்டின் மகளிர் ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும், லாத்வியா நாட்டை சேர்ந்த முதல் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் என்ற பெருமையை ஜெலீனா ஆஸ்டாபென்கோ பெற்றுள்ளார்.

இன்று சனிக்கிழமை நடந்த மகளிர் ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதியாட்டத்தில், 20 வயதான ஜெலீனா ஆஸ்டாபென்கோ, முதல் செட்டை இழந்து பின்தங்கி இருந்த போதிலும், பின்னர் போராடி 4-6 6-4 6-3.என்ற செட் கணக்கில், தன்னை எதிர்த்து விளையாடிய முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப்பை ஆஸ்டாபென்கோ வென்றார்.

கடந்த 1933-ஆம் ஆண்டுக்கு பிறகு, முதல்முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற தரவரிசையில் இடம்பெறாத வீராங்கனை என்ற சாதனையையும் ஜெலீனா ஆஸ்டாபென்கோ படைத்துள்ளார்.

தனது வெற்றி குறித்து பேசிய ஜெலீனா ஆஸ்டாபென்கோ, ”எனது 20 வயதில் நான் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனாகி விட்டேன் என்று என்னால் நம்பமுடியவில்லை. இந்த மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. இது எனது கனவு; இது நிறைவேறியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.

Share