Categories
டென்னிஸ் தலைப்புச் செய்திகள் விம்பிள்டன் விளையாட்டு

விம்பிள்டனை 8-வது முறையாக வென்றார் ரோஜர் பெடரர்

விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி ரோஜர் பெடரர் சாதனை படைத்துள்ளார். லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் குரோஷியாவின் மரின் சிலிச்சும் எதிர்கொண்டனர்.

போட்டியின் தொடக்கம் முதலே ரோஜர் ஃபெடரர் ஆதிக்கம் செலுத்தி, 6-3, 6-1, 6-4 என்ற நேர்செட்களில் வென்றார்.  ஒரு செட் கூட இழக்காமல் இந்தப் பட்டத்தை அவர் வென்றுள்ளார். இதன்மூலம் விம்பிள்டன் போட்டியில் ஒற்றையரில் 8 பட்டங்கள் வென்று, அதிக பட்டங்கள் வென்ற வீரர் என்ற சாதனையை ஃபெடரர் படைத்துள்ளார். மேலும், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஃபெடரர் வெல்லும் 19-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

 

 

Share
Categories
டென்னிஸ் விம்பிள்டன் விளையாட்டு

விம்பிள்டன் : ரோஜர் பெடரர் காலிறுதிக்கு தகுதி

லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் போட்டிகளில், ரோஜர் பெடரர் காலிறுதிக்கான தகுதி பெற்றார்.

அவர் ஜெர்மனியின் திறமையான ஆட்டக்காரரான மிஷா செவரேவ்வை 7-6(3), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். முப்பத்தி ஐந்து வயதாகும் பெடரர் வெற்றி பெற்றால் அதிக வயதில் பட்டம் வென்ற வீரராக இருப்பார். பெடரர் கடந்த மூன்று ஆட்டங்களிலும் ஒரு செட்டைக் கூட இழக்காமல் வென்று வருகிறார்.
உலகின் முப்பதாவது தர நிலை வீரராக இருக்கும் செவரேவ் இதுவரை நான்கு முறை பெடரருடன் விளையாடியுள்ளார்; ஆனால் ஒருமுறை கூட வென்றதில்லை. செவரேவ் 18 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பெடரரை வெல்வதற்கு கடும் முயற்சி செய்தாலும் முதல் செட்டில் ஒரு டை-பிரேக்கரை எதிர்கொண்டது தவிர நிலைத்து விளையாடிய பெடரர் அடுத்த இரண்டு செட்களில் பிரேக் பாயிண்ட்களை எடுத்து ஆட்டத்தை ஒரு ஏஸ் சர்வீசுடன் வென்றார்.
Share
Categories
ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் : 10வது முறையாக ரபேல் நடால் சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மகத்தான சாதனை படைத்தார்.

விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் (3வது ரேங்க்) நேற்று மோதிய நடால், அதிரடியாக விளையாடி 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். களிமண் தரை மைதானத்தில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் அசைக்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்தி வரும் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் ((2005 -08, 2010-14, 2017) வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அவர் பெறும் 15வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.

Share
Categories
ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தலைப்புச் செய்திகள் விளையாட்டு

ஜெலீனா ஆஸ்டாபென்கோ ஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார்

டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இது வரை இடம்பெறாத வீராங்கனையான ஜெலீனா ஆஸ்டாபென்கோ, 2017-ஆம் ஆண்டின் மகளிர் ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும், லாத்வியா நாட்டை சேர்ந்த முதல் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் என்ற பெருமையை ஜெலீனா ஆஸ்டாபென்கோ பெற்றுள்ளார்.

இன்று சனிக்கிழமை நடந்த மகளிர் ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதியாட்டத்தில், 20 வயதான ஜெலீனா ஆஸ்டாபென்கோ, முதல் செட்டை இழந்து பின்தங்கி இருந்த போதிலும், பின்னர் போராடி 4-6 6-4 6-3.என்ற செட் கணக்கில், தன்னை எதிர்த்து விளையாடிய முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப்பை ஆஸ்டாபென்கோ வென்றார்.

கடந்த 1933-ஆம் ஆண்டுக்கு பிறகு, முதல்முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற தரவரிசையில் இடம்பெறாத வீராங்கனை என்ற சாதனையையும் ஜெலீனா ஆஸ்டாபென்கோ படைத்துள்ளார்.

தனது வெற்றி குறித்து பேசிய ஜெலீனா ஆஸ்டாபென்கோ, ”எனது 20 வயதில் நான் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனாகி விட்டேன் என்று என்னால் நம்பமுடியவில்லை. இந்த மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. இது எனது கனவு; இது நிறைவேறியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.

Share
Categories
டென்னிஸ் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ்: போபண்ணா ஜோடி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகரான ரோம் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் போபண்ணா- உருகுவேயின் பப்லோ குயேவாஸ் ஜோடி, பிரான்சின் பியரே-ஹியூக்ஸ் ஹெர்பெர்ட் – நிகோலஸ் மஹட் ஜோடியை எதிர்கொண்டு விளையாடியது.

இந்தப் போட்டியில் இரு ஜோடிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் மூன்று செட்டுகளும் ‘டைபிரேக்கர்’ வரை சென்றன.

முதல் செட் டைபிரேக்கரில் போபண்ணா ஜோடி 5-7 என தோல்வியடைந்தது. ஆனால், 2-வது செட் டை பிரேக்கரில் 7-2 வெற்றி பெற்றது. வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட் டைபிரேக்கரில் 12-10 என தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

காலிறுதிக்கு நுழைந்ததன் மூலம் போபண்ணா ஜோடிக்கு 180 ஏடிபி புள்ளிகளும், 32,010 யூரோவும் பரிசாகக் கிடைத்தன.

அதுபோல மகளிர் பிரிவில் இந்தியாவின் முன்னணி நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா – ஷ்வேடோவா ஜோடி 3-6, 6-7(7) என்ற செட் கணக்கில் இரண்டாம் நிலை ஜோடியான சான் – ஹிங்கிஸ் ஜோடியிடம் அரையிறுதியில் தோல்வியடைந்தது.

Share