Categories
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை வென்றது இங்கிலாந்து

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை  இங்கிலாந்து அணி வென்றது.

இந்திய அணியைப் பொறுத்தவரை, இறுதிப் போட்டியில் பங்கேற்றதே பெரிய சாதனைதான்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.முதலில் நிதானத்துடன் ஆடிய இங்கிலாந்து அணி 150 ரன்களுக்கு பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

சாரா டெய்லர்  45 ரன்களும், நாட் ஸ்கைவர் 51 ரன்களையும் அடித்து இங்கிலாந்த் அணிக்கு வலுசேர்த்தனர். இந்திய அணியின் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளையும், பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக என்.ஆர்.ஸ்கீவர் 51 ரன்கள் எடுத்துள்ளார்.  இதையடுத்து,  50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை எடுத்தது இங்கிலாந்து அணி.

இதனைத் தொடர்ந்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் மந்தனா, கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஜி.ராவட் 115 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அணியின் வலுவான நிலைக்கு அடித்தளமிட்டார். இந்நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், இந்தியா தடுமாறத்தொடங்கியது. இறுதியாக  48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம்  4வது முறையாக இங்கிலாந்து அணி உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Share
Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரோபி: இன்று இறுதிப் போட்டியில் இந்தியா சொதப்பல் தோல்வி

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் – 338 ரன்கள் (4 விக்கட்)

இந்தியா – 158 ரன்களுடன் ஆல் அவுட்


ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் 41.5 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 265 ரன்கள் பெற்றுள்ளது.


எல்லோரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரோபியின் இறுதிப் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கிறது.

இதில் கோப்பையை வென்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இரு அணி  வீரர்களும் முழு திறமையையும் வெளிப்படுத்த உள்ளனர். இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறப் போவது யார் என்பதை வைத்து  சூதாட்டமும் கொடி கட்டிப் பறக்கிறது. இங்கிலாந்தில் ஆன்லைன் சூதாட்டம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், பெட் கட்டுவதற்காக ரசிகர்கள்  பணத்தை அள்ளி வீசுகின்றனர்.

 

Share
Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ்: இந்தியா வங்கதேசத்தை வென்று இறுதிபோட்டிக்குத் தகுதி

இன்று நடைபெற்ற இந்தியா,வங்கதேசம் இடையேயான சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்தியா வென்றது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

வங்கதேசம் முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் 265 ரன் வெற்றி இலக்கோடு ஆடத்துவங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும் தவானும் சிறப்பாக ஆடினர். ஷிகர் தவான் முர்தஸாவின் பந்துவீச்சில் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித் சர்மாவும் அணித் தலைவர் விராத் கோஹ்லியும் இணைந்து 40.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பில் மொத்தம் 265 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றியடையச் செய்தனர். ரோகித் சர்மா 123 ரன்களும், விராத் கொஹ்லி 96 ரன்களும் பெற்றனர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும்.

Share
Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி: இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற்றது

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபிக்கான போட்டிகளில் இன்று இந்தியா,  தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரை இறுதிக்குச் செல்ல தகுதி பெற்றது.

டாசில் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில் 191 ரன்களில் ஆல்அவுட்டானது தென் ஆப்பிரிக்கா.  இதையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இந்திய அணி ஆடியது. இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்தியா 192 ரன்கள் இலக்கை  38 ஓவர்களிலேயே எளிதாகக் கடந்தது.

ஷிகர் தவான் 78 ரன், விராட் கோலி 76 ரன்களுடனும், யுவராஜ் 23 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். யுவராஜ் இமாலய சிக்சருடன் போட்டியை முடித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 15 அன்று நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

Share
Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபிக்கான போட்டிகளில் இன்று இந்தியா,  தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.  இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும், தோல்வியடையும் அணி வீட்டுக்கு கிளம்பும். அதனால் இரு அணிகளுக்கும் கட்டாய வெற்றி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

டாசில் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில் 191 ரன்களில் ஆல்அவுட்டானது தென் ஆப்பிரிக்கா.  இதையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இந்திய அணி ஆடி வருகிறது. தற்போது இந்தியா 10 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்துள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி ஒருவேளை மழையால் கைவிடப்பட்டால், ரன் ரேட் விகிதப்படி, இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

Share
Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி – இலங்கை vs இந்தியா : இந்தியா பேட்டிங்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 8-வது ஆட்டம் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா vs இலங்கை போட்டி நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா களமிறங்குகின்றனர். 3 மணிக்குப் போட்டி தொடங்குகிறது.

Share
Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

ஐசிசி சாம்பியன் டிரோபி : பாகிஸ்தானை வென்றது இந்தியா

ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட்டில், பாகிஸ்தானை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 48 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 319 ரன்கள் குவித்தது. இறுதி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர் விளாசினார் பாண்டியா.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 9வது ஓவரில் ஷெஸாதை 12 ரன்களுக்கு இழந்தது. 33.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அசார் அலி 50, முகமது ஹபீஸ் 33 ரன்கள் எடுத்தனர். அபாரமாக பந்து வீசிய இந்திய அணியில் உமேஸ் யாதவ் 3, ஜடேஜா, பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

Share
Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி : இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமத், இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவான், ரோகித் சர்மா ஜோடி களம் இறங்கியது.

இந்திய அணி 9.5 ஒவர்கல் முடிவில் 46 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் விளையாடி வந்தது. இந்நிலையில், மைதானத்தில் மழை பெய்து வருவதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.  இந்திய அணியின் சார்பில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். இந்தியாவின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்தர் அஸ்வின் இந்த போட்டியில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 46-0 (9.5  ஓவர்) உடன் ஆட்டம் மீண்டும் துவங்கியுள்ளது.

Share
Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் நியுசிலாந்தை வென்றது இந்தியா

இந்தியா-நியூசிலாந்து இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 190 ரன் இலக்கை நோக்கி இந்தியா ஆடியது. 26 ஓவர்களில் முடிவில் மழை குறுக்கிட்டது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. 26 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 129 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டதால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

 

Share