Categories
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை வென்றது இங்கிலாந்து

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை  இங்கிலாந்து அணி வென்றது.

இந்திய அணியைப் பொறுத்தவரை, இறுதிப் போட்டியில் பங்கேற்றதே பெரிய சாதனைதான்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.முதலில் நிதானத்துடன் ஆடிய இங்கிலாந்து அணி 150 ரன்களுக்கு பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

சாரா டெய்லர்  45 ரன்களும், நாட் ஸ்கைவர் 51 ரன்களையும் அடித்து இங்கிலாந்த் அணிக்கு வலுசேர்த்தனர். இந்திய அணியின் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளையும், பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக என்.ஆர்.ஸ்கீவர் 51 ரன்கள் எடுத்துள்ளார்.  இதையடுத்து,  50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை எடுத்தது இங்கிலாந்து அணி.

இதனைத் தொடர்ந்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் மந்தனா, கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஜி.ராவட் 115 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அணியின் வலுவான நிலைக்கு அடித்தளமிட்டார். இந்நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், இந்தியா தடுமாறத்தொடங்கியது. இறுதியாக  48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம்  4வது முறையாக இங்கிலாந்து அணி உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Share
Categories
கிரிக்கெட்டு விளையாட்டு

‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாசப்படுத்திய டோனி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி நடந்த சிக்சர் அடிக்கும் போட்டியில் இந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்சின் முன்னாள் கேப்டனுமான டோனி மூன்று சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7.15 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் இடையே சிக்சர் அடிக்கும் போட்டி ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் அரங்கேறியது.

இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன் உள்பட 8 வீரர்கள் கலந்து கொண்டனர். கிரிக்கெட் உலகின் கதாநாயகர்களில் ஒருவரான டோனி வருகை தந்ததால், அவரை காண ரசிகர்கள் படையெடுத்தனர். பெரும்பாலான ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற கொடியை கையில் பிடித்தபடி வந்து இருந்தனர். அவர்கள் டோனி சிக்சர் அடிக்கையில் பலத்த கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தனர். டோனியின் சீருடையில் ‘தல’ என்ற அவரது செல்லப்பெயர் இடம் பெற்றிருந்தது.

பவுலிங் எந்திரம் மூலம் எல்லா வீரர்களுக்கும் தலா 3 முறை பந்துகள் வீசப்பட்டன. டோனி மட்டும் தான் எதிர்கொண்ட 3 பந்துகளையும் சிக்சருக்கு (ஹாட்ரிக்) தூக்கியடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். அவர் அடித்த 3 பந்துகளும் கேலரிக்கு பறந்து சென்றன.அவருக்கு அடுத்தபடியாக வேட்டி அணிந்து வந்த மேத்யூ ஹைடன், பத்ரிநாத், அனிருதா ஆகியோர் தலா 2 சிக்சர் விளாசினர். மொகித் ஷர்மா, பவான் நெகி, கணபதி ஆகியோர் சிக்சர் எதுவும் அடிக்காமல் ஏமாற்றம் அளித்தனர். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி ஒரு சிக்சர் தூக்கினார். டோனி பேட்டிங் மட்டுமின்றி, பவுலிங் எந்திரத்தை இயக்கவும் செய்தார்.

Share
Categories
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியா கிரிக்கெட்டு விளையாட்டு

இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டின்  அரைஇறுதிப் போட்டியில் இந்திய அணி, தற்போதைய சாம்பியனான ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியைச் சந்திக்கவுள்ளது.

இப்போட்டியில் 171 ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், தனக்கு கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்து காட்டியிருப்பதாக கூறியிருக்கிறார். மேலும், எனது வாழ்க்கையில் நான் விளையாடிய மிகச்சிறந்த ஆட்டம் இது தான் என்றும் கூறினர்.

இந்திய கேப்டன் மிதாலிராஜ் கூறுகையில், “ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதான வி‌ஷயமல்ல. இது மிகப்பெரிய சாதனையாகும். அசாதாரணமான ஒரு இன்னிங்சை ஹர்மன்பிரீத் கவுர் ஆடியிருக்கிறார். ஒரு இந்தியராக நான் பார்த்த சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்றாகும்.” என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ‘மகளிர் உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றில் இந்திய அணிதான் வெற்றி பெறும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Share
Categories
இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டு விளையாட்டு

கிரிக்கெட் டெஸ்ட் தொடர்: முரளி விஜய் விலகல், ஷிகர் தவான் சேர்ப்பு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் வருகிற 26–ந்தேதி தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் காயம் காரணமாக விலகியுள்லார்.  ஆஸ்திரேலிய தொடரின் போது  மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் குணம் அடையாததால் அணியில் இருந்து அவர் விலகியுள்ளார். முரளி விஜய்க்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
16 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:– விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா, இஷாந்த் ‌ஷர்மா, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், முகமது ‌ஷமி, குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த்.
Share
Categories
இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்

பி.சி.சி.ஐ. அறிவிப்பின்படி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் பந்துவீச்சு பயிற்சியாளராக  ஜாகீர் கானும், வெளிநாடுகளில்  டெஸ்ட் போட்டிகளில் ஆடும்போது பேட்டிங் ஆலோசகராக ராகுல் திராவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், ரவி சாஸ்திரி, டாம் மூடி உள்ளிட்ட 10 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், இதில் ஆறு பேர் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய குழு, அந்த ஆறு பேரிடம் நேற்று நேர் காணல் நடத்தியது.

அணியின் சிறப்பான முன்னேற்றத்துக்காக, இந்த நியமனங்களைப் பரிந்துரைத்திருப்பதாக பிசிசிஐ கெளரவ செயலர் பொறுப்பு வகிக்கும் அமிதாப் செளத்ரி தெரிவித்துள்ளார். இந்த நியமனத்துக்கான காலம், 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் வரை நீடிக்கும்.

Share
Categories
கிரிக்கெட்டு விளையாட்டு

20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் இந்தியா தோல்வி

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட்கோலி, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடினார்கள். 4.4 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்னை எட்டியது. அணியின் ஸ்கோர் 64 ரன்னாக உயர்ந்த போது கேப்டன் விராட்கோலி (39 ரன்கள், 22 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) கேஸ்ரிக் வில்லியம்ஸ் பந்து வீச்சில் சுனில் நரினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து ரிஷாப் பான்ட், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். ஷிகர் தவான் 12 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் கேஸ்ரிக் வில்லியம்சால் ‘ரன்–அவுட்’ செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் (48 ரன்கள், 29 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன்) சாமுவேல்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த டோனி 2 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். ரிஷாப் பான்ட் 35 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். கேதர் ஜாதவ் 4 ரன்னில் ‘அவுட்’ ஆனார்.

 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ஜெரோம் டெய்லர், கேஸ்ரிக் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டும், சாமுவேல்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். கெய்ல் 20 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

வெஸ்ட்இண்டீஸ் வெற்றி

அடுத்து சாமுவேல்ஸ், எவின் லீவிஸ்சுடன் இணைந்தார். எவின் லீவிஸ் அதிரடியாக ஆடினார். 46 மற்றும் 55 ரன்னில் இருக்கையில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய எவின் லீவிஸ் 53 பந்துகளில் சதம் கண்டார்.

18.3 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எவின் லீவிஸ் 62 பந்துகளில் 6 பவுண்டரி, 12 சிக்சருடன் 125 ரன்னும், சாமுவேல்ஸ் 29 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 36 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றனர்.

 

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 1–0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. வெஸ்ட்இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். முன்னதாக நடந்த ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 3–1 என்ற கணக்கில் வென்று இருந்தது.

 

Share
Categories
இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டு விளையாட்டு

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி, பேட்டிங்குக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தாலும், இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 51 ரன்னும், கைல் ஹோப் 46 ரன்னும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 36 ரன்னும், ரோவ்மன் பவெல் 31 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ‌ஷமி 4 விக்கெட்டும், உமேஷ்யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஷிகர் தவான் 4 ரன்னில் அல்ஜாரி ஜோசப் பந்து வீச்சில் எவின் லீவிஸ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து கேப்டன் விராட்கோலி களம் கண்டார். கடந்த ஆட்டங்களில் ஷாட் பிட்ச் பந்து வீச்சில் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்த விராட்கோலி இந்த முறை ஷாட் பிட்ச் பந்துகளை திறம்பட கையாண்டார். அவரை முந்தைய ஆட்ட பாணியில் வீழ்த்த நினைத்த வெஸ்ட்இண்டீஸ் பந்து வீச்சாளர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அணியின் ஸ்கோர் 84 ரன்னாக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 51 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் பிஷோ பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அடுத்து தினேஷ்கார்த்திக், விராட்கோலியுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடி அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்து சென்றனர். 67 பந்துகளில் அரை சதத்தை கடந்த விராட்கோலி 108 பந்துகளில் சதத்தை எட்டினார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 28–வது சதம் இதுவாகும்.

இந்திய அணி 36.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஸ்டன் சேஸ் வீசிய பந்தை விராட்கோலி சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றி பெற வைத்தார். விராட்கோலி 115 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 111 ரன்னும், தினேஷ் கார்த்திக் 52 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 3–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 4–வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. சதம் அடித்த விராட்கோலி ஆட்டநாயகன் விருதையும், மொத்தம் 336 ரன்கள் குவித்த ரஹானே தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

Share
Categories
ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் கிரிக்கெட்டு விளையாட்டு

மகளிர் உலக கோப்பை : பாகிஸ்தானை வென்றது இந்தியா

ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா  தொடர்ச்சியாக 3வது வெற்றியை வசப்படுத்தி அசத்தியது. டெர்பி கவுன்டி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா  முதலில் பேட் செய்தது. பூனம் ராவுத், மந்தனா இருவரும் இன்னிங்சை தொடங்கினர்.

இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது. மான்சி ஜோஷி 4, பூனம் யாதவ் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான்  பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 4, சாடியா யூசுப் 2, டயானா, அஸ்மாவியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 50 ஓவரில் 170 ரன் எடுத்தால்  வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.

பாக். 38.1 ஓவரில் 74 ரன்னுக்கு சுருண்டது. இந்திய பந்துவீச்சில்  ஏக்தா பிஷ்ட் 5, மான்சி 2, ஜுலன், தீப்தி, ஹர்மான்பிரீத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பிஷ்ட் ஆட்ட நாயகி விருது பெற்றார். இங்கிலாந்து, வெஸ்ட்  இண்டீஸ் அணிகளை தொடர்ந்து பாகிஸ்தானையும் வீழ்த்திய இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

Share
Categories
இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டு விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ஜூலை 10ல் தேர்வு: கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான அனில் கும்பிளேவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு பலர் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்பிளே விலகியதை தொடர்ந்து 2வது முறையாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 9 ஆகும்.  இந்திய அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி இந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.  இதேபோன்று வீரேந்தர் சேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்டு பைபஸ் மற்றும் தோடா கணேஷ் ஆகியோரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள லார்ட்சில் உலக கிரிக்கெட் குழு கூட்டம் வருகிற 3 மற்றும் 4ந்தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி செல்கிறார்.

அதற்கு முன் வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல் வருகிற 10ந்தேதி மும்பையில் நடைபெறும் என கூறினார்.

இநதிய கிரிக்கெட் ஆலோசனை குழுவின் உறுப்பினர்களாக சவுரவ் கங்குலி, சச்சின் தெண்டுல்கர் மற்றும் வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோர் உள்ளனர்.

Share
Categories
கிரிக்கெட்டு விளையாட்டு

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 377 ரன்கள் குவிப்பு

8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் லீசெஸ்டரில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது.

பின்னர் 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 29.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் டக்வொர்த் விதிமுறைப்படி முடிவு அறிவிக்கப்பட்டால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும்.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் சந்திக்கின்றன.

Share