Categories
காணொளி நம்பினால் நம்புங்கள் பலவகைச் செய்திகள் விண்கல் தாக்குதல்

2017 சூரிய கிரகணத்தை அடுத்து ‘நிபிரு’ கிரகம் பூமியை அழிக்குமா? (சதித்திட்டக் கோட்பாட்டாளர்கள் அப்படி நினைக்கிறார்கள்)

உலகெங்கிலும் உள்ள சதி கோட்பாட்டாளர்களில் (Conspiracy Theorists) பலர், “நிபிரு” என்ற ஒரு கிரகம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூமியுடன் இடையில் மோதப்போவதாக கூறி வருகின்றனர். ஆகஸ்டு 21-ம் தேதி வரும் சூரிய கிரகணம், இந்த பேரழிவின் ஆரம்பத்தை அடையாளம் காணும் என்கின்றனர்.

‘பிளானட் எக்ஸ் – தி 2017 வருகை’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான டேவிட்  மீட், 2017 செப்டம்பர் 23 அன்று  நிபிரு என்ற கிரகம் (பிளானெட் எக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது) நமது பூமியை மோதி உடைக்கும் என்று கூறுகிறார்.

நிபிரு  என்று ஒரு கிரகம் இருப்பதை விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள். என்றாலும், மீட் தன்னுடைய கூற்றுக்களை நிரூபிக்க பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்.

அக்டோபர் மாதத்தில் நிபிரு பூமியை அழிக்கும் என்று இந்த ஆண்டு துவக்கத்தில் மீட் வலியுறுத்தியிருந்தார். இருப்பினும் தற்போது அவர் செப்டம்பரிலேயே அது நிகழும் என்கிறார்.

கிரேட் அமெரிக்கன் கிரகணம் – முழு சூரிய கிரகணம் ஆகஸ்ட் 21 அன்று முழுமையான இருட்டில் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருக்கும். இச்சூரிய கிரகணம், நிபிரு கிரகத்தின்  வெளிப்படையான வருகையை குறிப்பதாக மீட் கூறுகிறார்.

 

Share
Categories
தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் பலவகைச் செய்திகள்

2.7 மைல் அகலமுள்ள பாரிய விண்கல் செப்டம்பர் 1 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும்

2.7 மைல் அகலமுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள பாரிய விண்கல் ஒன்று, இவ்வருடம், செப்டம்பர் 1 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப் போகிறது என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

ஃப்ளாரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த பெரிய விண்வெளிப் பாறை நமது கிரகத்திலிருந்து 4.4 மில்லியன் மைல்கள் தொலைவில் கடந்து செல்லும். இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலுள்ள தூரத்தைப் போல 18 மடங்கு அதிக தூரமாகும்.

நாசாவின் கூற்றுப்படி, இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ள, இந்த அளவுள்ள விண்கற்களில்,  இதுதான் பூமியின் மிக அருகில் முதலாவதாக கடந்து செல்லப்போகிறது. இதன்மூலம், தொலைதூர பொருள்களை முதன்முதலாக, பூமியை அடிப்படையாகக் கொண்ட ரேடார் அவதானிப்புகள் மூலம் வெகு அருகிலிருந்து, ஆராய்வதற்கான முதல் வாய்ப்பை இவ்விண்கல் அளித்துள்ளது.

இது ஆபத்தானதாக தோன்றினாலும்,  புளோரன்ஸ் விண்கல் பாதுகாப்பாக பூமியை சுமார் 4.4 மில்லியன் மைல்களுக்கு (7 மில்லியன் கிலோமீட்டர்) அப்பால் பறந்து சென்று விடும் என்று நாசா கூறுகிறது.

 

Share
Categories
பலவகைச் செய்திகள் மகாராஷ்ட்ரா மும்பை

வெளிநாட்டில் இருந்து மகன் திரும்பியபோது எலும்புக்கூடாக தாய்

மும்பையின் அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயதான ஆஷா சஹானி தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அந்த கட்டிடத்திலுள்ள 10 – வது மாடியிலுள்ள இரண்டு அபார்ட்மெண்ட்களில் ஒன்றில் வசித்து வந்தார். அந்த தளத்திலுள்ள இரண்டு அபார்ட்மெண்ட்களும் சஹானி குடும்பத்தினருக்குச் சொந்தமானதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் அங்கு அடிக்கடி செல்வதில்லை எனத் தெரிகிறது.

ஆஷாவின் மகன் ரிதுராஜ் சஹானி, அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர், தனது தாயை பார்ப்பதற்காக நேற்று மும்பை வந்துள்ளார். வீட்டிற்கு வந்த இவர் வீட்டின் கதவினை தட்டியுள்ளார், ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து, பூட்டு சரி செய்பவரை அழைத்து வந்து பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் கதவினை திறந்து உள்ளே சென்றபோது மக்கிப்போன நிலையில் எலும்புக்கூடொன்று கிடந்துள்ளது.

இதனை பார்த்து கதறி அழுதுள்ளார், தாய் ஆஷா எப்போது எப்படி இறந்தார் என்ற தகவல் தெரியவரவில்லை, இது இயற்கை மரணமா, தற்கொலையா, கொலையா என்பதும் தெரியவில்லை.

ரிதுராஜ் தனது தாயாருடன் கடைசியாக ஏப்ரல் 2017 பேசியுள்ளார். கடைசியாக பேசுகையில், அவரது தாயார், தான் உடல் நலம் இல்லாமல் இருப்பதாகவும், வீட்டில் தனிமையாக இருப்பதால் வயதானவர்களுக்கான காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கூறியதாகத் தெரிகிறது.

விரைவில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், மரணம் குறித்து அருகில் வசிப்பவர்களிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
Categories
அமெரிக்கா நம்பினால் நம்புங்கள் பலவகைச் செய்திகள்

நாசா-வின் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவன்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) சமீபத்தில் கோள் பாதுகாப்பு அதிகாரி (Planetary Protection Officer) என்ற வேலைக்கு ஆள் தேவை என விளம்பரம் செய்திருந்தது.  அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த  9 வயது சிறுவன் ஒருவன், தன்னை ஒரு விண்மீன் மண்டல பாதுகாவலர் (Guardian of the Galaxy) என்று கருதிக்கொண்டதால் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.

மேலோட்டமாக இப்பதவியின் பெயர் “மென் இன் பிளாக்” (Men In Black) படத்தில் வரும் கதாநாயகர்களைப் போல பூமியை ஏலியன்களிடமிருந்து காப்பாற்றும் பதவி மாதிரி தோன்றினாலும், நிஜத்தில் நாசாவுக்குத் தேவைப்படுவது வேறு. அவர்களுக்குத் தேவையானவர், பூமியிலிருந்து செவ்வாய், சனி போன்ற பிற கோள்களுக்கு நாம் அனுப்பும் ராக்கெட் மற்றும் ரோபோ ஆய்வுக்கலங்களால் நமது நுண்ணுயிரிகள் அங்கே நோய்த் தொற்று ஏற்படுத்தாமல் இருக்கவும், மற்ற கோள்களிலிருந்து சேகரிக்கப்பட்டு பூமிக்குக் கொண்டு வரப்படும் மாதிரிகளில் இருந்து நுண்ணுயிரிகள் ஏதும் இங்கே தொற்றிவிடாமலும் இருக்கத் தேவையான ஆயத்தங்களைச் செய்யும் ஒருவர். இப்பதவிக்கு கிட்டத்தட்ட ரூ.7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும் என நாசா விளம்பரம் கூறுகிறது.

நியூ ஜெர்சியில் நான்காவது வகுப்பு படிக்கும் ஜேக் டேவிஸ், மேற்படி பதவிக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் “ஜேக் டேவிஸ், விண்மீன் மண்டல பாதுகாவலர்” என்று கையொப்பமிட்டிருந்தார். இப்பதவி தனக்கு ஏன் சரியானதாக இருக்கும் எனச் சில விளக்கங்களையும் கொடுத்திருந்தார். அவற்றுள், விண்வெளி மற்றும் ஏலியன் சம்பந்தமாக பார்க்கமுடிந்த அனைத்துத் திரைப்படங்களையும் தான் பார்த்துவிட்டதாகவும், நன்றாக வீடியோ கேம்கள் விளையாடத் தெரியும் எனவும் கூறியிருந்தார். குறிப்பாக, தான் சிறுவயதினராக இருப்பதால், ஏலியன்கள் எப்படி சிந்திப்பார்கள் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறியிருந்தது பலரையும் கவர்ந்துள்ளது.

இக்கடிதம் நாசா அலுவலர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாசாவின் கோள் ஆராய்ச்சி இயக்குனர் ஜோனத்தன் ரால், ஜேக்குடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால், நாசாவின் கோள்கள் சேவைப் பிரிவின் இயக்குனரான ஜேம்ஸ் எல். கிரீன் அனுப்பியுள்ள பதில் கடிதமே, ஜேக்கிற்கு அதிக நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஜேம்ஸின் கடிதத்தில், “நாங்கள் புத்திசாலித்தனமான அறிவியல் அறிஞர்களிடம் இருந்தும், பொறியியலாளர்களிடம் இருந்தும்  வருங்காலத்தில் எங்களுக்கு உதவிகளை  எதிர்பார்க்கிறோம். ஆகவே, நீர் உமது பள்ளி, கல்லூரிப் படிப்பினை சிறப்பாக முடித்து, நாசாவில் எங்களுடன் சேருவீர் என எதிர்பார்க்கிறோம்” என்று எழுதியுள்ளார்.

 

Share
Categories
கன்யாகுமரி குளச்சல் கேரளா தமிழகம் தல வரலாறு பலவகைச் செய்திகள் மாவட்டம் வரலாறு ஹாலந்து

குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை

குளச்சல் போரில் திருவிதாங்கூர் படைகள் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வெற்றி பெற்றதன் நினைவு தினம் வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது.  இப்போரின் வரலாற்றை கேரளாவை போல், தமிழகத்திலும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவிதாங்கூர் அரசின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் படி, பதினெட்டாம் நூற்றாண்டில், கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. அக்காலத்தைய தெற்கு கேரளமும் கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளும், சிறு சிறு சமஸ்தானங்களாக சிற்றரசர்களின் ஆட்சியின்கீழ் இருந்தன.  வேணாட்டின் அரசரான மார்த்தாண்ட வர்மா அண்மையிலுள்ள சிறு சமஸ்தானங்களுடன் போரிட்டு தனது அரசுடன் இணைத்துக் கொண்டிருந்தார். இதன் முன்னதாக மிளகு வியாபாரத் தலங்களை டச்சுக்காரர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.

 

மார்த்தாண்ட வர்மாவின் ராச்சிய இணைப்பு நடவடிக்கைகளில் ஒன்றான இளைஇடத்து சொரூப (கொட்டாரக்கரை) இணைப்பு முயற்சியின் போது, கொட்டாரக்கரை ராணியார், டச்சுக்காரர்களின் உதவியை நாடினார். இருப்பினும், மார்த்தாண்ட வர்மாவின் படைகள் இளைஇடத்து சொரூபத்தை போரிட்டு கைப்பற்றினர். இது டச்சுக்காரர்களின் மிளகு வியாபாரத்திற்கு பேரிடியாக அமைந்தது. மேலும் மார்த்தாண்ட வர்மா, ஏனைய ஐரோப்பிய வணிகர்களான கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஃப்ரென்சு கம்பெனிகளுடன் வியாபாரம் செய்வதற்கு முன்னுரிமை கொடுத்தார். இவற்றால், டச்சுக் காரர்களுக்குத் தேவையான வணிகப் பொருட்கள் கிடைக்காமல் போனது.

நிலைமையைச் சரியாக்கும் நோக்கில், கொழும்பிலிருந்து டச்சு கவர்னர் வான் இம்ஹாஃப் (Van Imhoff) பேச்சு வார்த்தைக்காக ராஜா மார்த்தாண்ட வெர்மாவைச் சந்திதார். இருப்பினும் பேச்சுவார்த்தையால் தேவையான பயன்கள் எதுவும் விளையவில்லை.

திருவிதாங்கூர்ப் படைகள் பின்னர் காயங்குளத்தின் அரசினைக் கைப்பற்றுவதற்காக வடக்கு நோக்கி அனுப்பப் பட்டனர். இன்னிலையில், டச்சுக் கடற்படை, தென்பகுதியில் கடியப்பட்டணம், மிடாலம், தேங்காப்பட்டணம் ஆகிய இடங்களைக் கைப்பற்றியது. குளச்சலிலிருந்து கோட்டார் வரை டச்சுப்படைகளின் பிடியில் வந்தது. திருவிதாங்கூர் படைகள் காயங்குளம் சென்ற சமயத்தில், நாட்டுக்குள் புகுந்த டச்சுப் படையைத் தடுக்க  யாரும் இல்லாத்தால், அவர்கள் குடிமக்களுக்கு பல்வேறு அட்டூழியங்களையும் செய்தவாறு பத்மனாபபுரம் கோட்டையைப் பிடிக்கச் சென்றனர்.

இதனைக் கேள்விப்பட்ட மார்த்தாண்ட வர்மா, காயங்குளத்திலிருந்த அவரது படையை திரும்பி வரத் தகவல் அனுப்பினார். மேலும் உள்ளூர் நாயர், நாடார் மற்றும் மீனவர்களின் துணையுடன் புதிய படையொன்றை உருவாக்கினார். இப்புதிய படையுடன், காயங்குளத்திலிருந்து திரும்பிய திருவிதாங்கூர்ப் படைகளும் சேர்ந்து, டச்சுப் படைகளுடன் போரிட்டனர். போரில் டச்சுப்படைகள் தோல்வியடைந்தபின் தப்பியோடியவர்கள் குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி வக்கப்பட்ட தங்கள் கப்பல்களில் ஏறி கொச்சி நோக்கிச் சென்று விட்டனர். திருவிதாங்கூர்ப் படை 24 டச்சு வீரர்களை சிறைபிடித்ததுடன் குளச்சலில் இருந்த டச்சுப் படைத்தளத்திலிருந்து பீரங்கிகளையும் வாள்கள் மற்றும் சில இதர போர் ஆயுதங்களையும் கைப்பற்றினர். இப்போரில் ராமன் ஐயன் தளவாய், அனந்த பத்மனாபன் தளவாய் போன்றோர், மார்த்தாண்ட வர்மாவுக்கு பேருதவியாக இருந்தனர்.

இப்போரின் பின் டச்சுக்காரர்களின் இந்திய வணிகம் பெருமளவில் கட்டுப்படுத்தப் பட்டது. 1741-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி  நிகழ்ந்த போரின் வெற்றியின் நினைவாக குளச்சல் கடற்கரையில் “விக்டரி பில்லர்” என்ற வெற்றித்தூண் நிறுவப்பட்டது.

 

Share
Categories
அறிவியல் பலவகைச் செய்திகள்

சூரியனின் மேற்பரப்பில் தோன்றும் பெரிய கருப்புப் புள்ளிகள்

நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம்  சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்ட சூரியப்புள்ளியை கண்டறிந்து உள்ளது. அதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் பரப்பளவு பூமியை விட 19 மடங்கு பெரியதாகும். இந்த பகுதி  சுழன்று வருவதுடன் விரைவாக வளர்ந்து வருகிறது  என நாசா ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது. சூரியனில் காணப்படும் கருப்புப்புள்ளிகள் பொதுவாக சூரியனின் மற்றபகுதிகளை விட குளிர்ச்சியானதாக இருக்கும். தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த பகுதியிலிருந்து  பூமியை நோக்கி கொடிய கதிர்வீச்சுகள் எழலாம் என கருதப்படுகிறது. இப்பகுதியிலிருந்து சோலார் ஃப்ளேர் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.  சோலார் ஃப்ளேர் ஏற்படும்போது இந்த பகுதிகள் மிகப் பிரகாசமாக காணப்படும். சோலார் ஃப்ளேர்  சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரங்கள் வரை நீடிக்கிறது.

இந்த சூரிய பகுதியில் இருந்து கடுமையான  கதிர்வீச்சின் காரணமாக  காந்த ஆற்றல் வெளிப்படுகிறது. இவற்றால் பூமியில் ரேடியோ பிளாக்அவுட்டை ஏற்படுத்தலாம், தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள்  மற்றும் கதிர்வீச்சு புயல்கள் போன்றவையும் உருவாகலாம்.

Share
Categories
ஜெர்மனி பலவகைச் செய்திகள்

ஜெர்மனி: மியூசியத்திலிருந்து 100 கிலோ தங்க நாணயத்தை கொள்ளையடித்தவர்கள் கைது

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் அரிய நாணயங்களை பாதுகாத்து வரும் போட் மியூசியம் என்ற அருங்காட்சியகம் உள்ளது.  இந்த அருங்காட்சியகத்தில் 5,40,000 நாணயங்கள் உள்ளன. ஜெர்மனியின் மதிப்புமிக்க அருங்காட்சியகங்களில் ஒன்றான இதற்கு குண்டுதுளைக்காத கண்ணாடியால் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இங்கு 100 கிலோ எடையில், 53 செ.மீ. விட்டம் 3 செ.மீ. தடிமன் அளவில் சுத்த தங்கத்தால் ஆன கனடா நாட்டு நாணயம் ஒன்று பாதுகாக்கப்பட்டு வந்தது. 2-ம் எலிசெபத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட இந்த நாணயம் தூய்மையான தரத்துக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருந்தது. இதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.26 கோடி) என மதிப்பிடப்பட்டு உள்ளது.

மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்த இந்த நாணயத்தை கடந்த மார்ச் மாதம் மர்மநபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றனர். அருங்காட்சியக ஜன்னலை உடைத்து நாணயத்தை திருடிச்சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் ஜெர்மனியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த பெர்லின் நகர போலீசார், அங்குள்ள நியூகொய்லின் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நாணய கொள்ளையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். எனினும் அந்த நாணயத்தை போலீசார் மீட்டனரா? என்பது குறித்து தெரியவில்லை. அதை கொள்ளையர்கள் உருக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
Categories
ஏ.டி.எம். தொழில் நுட்பம் பலவகைச் செய்திகள்

ஏ.டி.எம். உபயோகத்தில் வந்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகின்றன

இன்றிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஏடிஎம்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டன. பார்க்லேஸ் வங்கி இந்த் முதல் ஏடிஎம்மை அறிமுகம் செய்தது.
இந்த ஏடிஎம்கள் எப்படி பயன்பாட்டிற்கு வந்தன என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உள்ளது. ஷெப்பர்ட்-பேரென் என்பவர் ஒரே ஒரு நிமிடம் தாமதமாக வங்கிக்கு சென்றதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் வருத்தமுற்ற அவர் வங்கி மூடியிருந்தாலும் பணம் எடுக்க வசதியாக ஓர் இயந்திரம் இருந்தால் என்ன என்று சிந்தித்தார். அந்த இயந்திரத்தில் ஓர் அட்டையை நுழைத்தால் அது பணம் வழங்கியது. இந்த முறையை அவர் சாக்லேட் வழங்கும் இயந்திரத்தைப் போன்று செயல்படும் தன்மையுடன் அமைத்தார்.
முதல் ஏடிஎம் ஜூன் 27 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டில் வடக்கு லண்டனில் திறக்கப்பட்டது. ஆறு இலக்க குறியீட்டை இட்டால் பணம் கிடைத்தது. ஆனால் ஆறு இலக்கம் என்பது நான்காக குறைக்கப்பட்டது. ஏன்? பேரெனின் மனைவிக்கு ஆறு இலக்கங்களை நினைவுபடுத்த இயலவில்லை. எனவே மாற்றப்பட்டதாம்!
இன்று உலகம் முழுதும் 3 மில்லியன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது எங்கு முதன்முதலாக அமைக்கப்பட்டதோ அந்த லண்டனில் இன்று சுமார் 70,000 ஏடிஎம்கள் உள்ளனவாம்.
இன்றைய தினத்தை நினைவுபடுத்தும் விதமாக பார்க்லேஸ் வங்கி தனது முதல் ஏ டி எம் அமைந்திருந்த என்ஃபீல்ட் கிளையை தங்கத் தகடுகளால் அலங்கரித்திருந்தது. அதையும் கடந்து வாடிக்கையாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருந்தது.
தற்போது டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகளவில் வந்து விட்டாலும் பணம் எடுக்கும் இயந்திரங்களுக்கான தேவை குறையவில்லை என்கின்றனர் வங்கி அதிகாரிகள்.
Share
Categories
இந்தியா பலவகைச் செய்திகள்

யுவபுரஸ்கார், பால சாகித்ய விருதுகளுக்கு கவிஞர் ஜெயபாரதி, நாடக கலைஞர் வேலு சரவணன் தேர்வு

சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகளுக்கு தமிழ் மொழியில் ஜெயபாரதி, வேலு சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் 35 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும், குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதும் வழங்கப்படுகின்றன. இதற்காக சாகித்ய அகாடமியின் நிர்வாக குழு கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் யுவ சாகித்ய புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் ஆகிய விருதுகளுக்கு தகுதி பெற்ற படைப்புகள், அவற்றின் எழுத்தாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது பெற 24 மொழிகளில் இருந்து 16 கவிதை தொகுப்புகளும், 5 சிறுகதை தொகுப்புகளும், 2 சுயசரிதை நூல்களும், ஒரு கட்டுரை தொகுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டன. பால சாகித்ய புரஸ்கார் விருது பெற 24 படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ் மொழியில் இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது பெற கவிஞர் ஜே.ஜெயபாரதி (மனுஷி) எழுதிய ‘ஆதி காதலின் நினைவு குறிப்புகள்’ கவிதை தொகுப்பு தேர்வாகி உள்ளது. பால சாகித்ய புரஸ்கார் விருது பெற குழந்தைகள் நாடக கலைஞர் வேலு சரவணன் தேர்வானார். ஒட்டுமொத்த குழந்தைகள் இலக்கிய பங்களிப்பை வழங்கியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளை பெறுவோருக்கு தலா ஒரு தாமிர பட்டயம், ரூ.50 ஆயிரம் காசோலை வழங்கப்படும். பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கும் விழா நவம்பர் 14–ந்தேதி நடைபெறும் என்றும், யுவ புரஸ்கார் விருது வழங்கும் விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சாகித்ய அகாடமி தெரிவித்துள்ளது.

தமிழ் மொழிக்கான பால சாகித்ய விருதுக்கு தகுதி பெறுவோரை வி.அண்ணாமலை, டாக்டர் ஆர்.இளங்கோவன், டாக்டர் எம்.பழனியப்பன் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழுவும், யுவ புரஸ்கார் விருதுக்கு தகுதி பெறுவோரை பி.மதிவாணன், பி.செல்வபாண்டியன், எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோர் அடங்கிய குழுவும் தேர்வு செய்தனர்.

Share
Categories
பலவகைச் செய்திகள்

மைசூரு ராஜ பரம்பரையின் வாரிசும் 400 ஆண்டுகள் சாபமும்

தற்போதைய கர்நாடகா மாநிலத்தின் மைசூரு நகரை, 400 ஆண்டுகளுக்கு முன், விஜயநகர பேரரசின் திருமல ராஜா ஆட்சி செய்துவந்தார். அப்போது உடையார் அரசை சேர்ந்த ராஜா உடையார், மைசூரு மீது படையெடுத்து, வெற்றி பெற்றார்.

இதையடுத்து, திருமல ராஜா உடையார் குடும்பத்தினர், ஸ்ரீரங்கபட்டணத்தினுள்  நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள்,அருகிலுள்ள மாலகி கிராமத்தில் தங்கியிருந்தனர். திருமல ராஜா உடையாரின் இரண்டாவது மனைவி அலமேலம்மா அணிந்திருந்ததங்க ஆபரணங்கள், ராஜா உடையாருக்கு மிகவும் பிடித்து போனது. தன் படையினரை அனுப்பி, நகைகளை வாங்கி
வரும்படி கூறினார்.

இதற்கு அலமேலம்மா மறுப்பு தெரிவித்தார். அரசரோ, நகைகளை வலுக்கட்டாயமாக வாங்கி வரும்படி ஆணையிட்டார். இதனால்,அலமேலம்மா, அங்கிருந்து தப்பியோடினார்; அவரை, படையினர் துரத்தினர்.மலை உச்சிக்கு சென்ற அலமேலம்மா, ‘தலக்காடுமணலாகட்டும், மாலகி கிராமம் புதை குழியில் மூழ்கட்டும், மைசூரு உடையார் பரம்பரைக்கு வாரிசு இல்லாமல் போகட்டும்’ என,சாபமிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மைசூரு அரச குடும்பத்தினருக்கு வாரிசுகளே பிறக்கவில்லை.

தற்போதைய மைசூரு உடையார் பரம்பரையினரான,  ஸ்ரீகண்டதத்த நரசிம்ம ராஜ உடையார் – பிரமோதா தேவிக்கு குழந்தைபேறு இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்ட ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார், 2013ல் காலமானார். இதையடுத்து, பிரமோதா தேவி, தன் உறவினர் மகனான, யதுவீரை, 2015ல், தத்தெடுத்தார்.

அவருக்கு, மைசூரு மன்னராக பட்டாபிஷேகமும் சூட்டப்பட்டது. 2016ல், யதுவீருக்கும், ராஜஸ்தான் துங்கார்பூர் அரச குடும்பத்தைசேர்ந்த திரிஷிகா குமாரிக்கும் திருமணம் நடந்தது.திருமணமாகி ஓராண்டான நிலையில், திரிஷிகா குமாரி, நான்கு மாத கர்ப்பமாகஇருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, அரச குடும்பத்திடம் கேட்டால், வாய் திறக்க மறுக்கின்றனர்.

இந்த தகவல், மைசூரு முழுவதும் பரவியதும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டுமின்றி, விஜயநகர பேரரசின் திருமலராஜாவின் இரண்டாவது மனைவி அலமேலம்மாவின் சாபம் நீங்கி விட்டது என்று அரச குடும்பத்தினர் குதுாகலம் அடைந்துள்ளனர்.உடையார் பரம்பரையில், ஆறு அரசர்களுக்கு குழந்தை பேறு இல்லாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share