Categories
இந்தியா தொழில் நுட்பம் போர் விமானங்கள்

அமெரிக்க நிறுவனமான லாக்ஹீட்-மார்டினுடன் டாடா போர் விமானங்கள் தயாரிக்க ஒப்பந்தம்

இந்தியாவில் ஃஎப் 16 ரக போர் விமானங்களை தயாரிக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீடு மார்டின் நிறுவனத்துடன் டாடா அட்வாண்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் இந்திய ராணுவத்தில் பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டர்களை வெல்ல ஃபோர்ட் வொர்த் டெக்சாஸ் ஆலை திட்டமிட்டுள்ளது.

இந்திய ராணுவம் வசம் உள்ள சோவியத் சகாப்த விமானங்களை மாற்ற திட்டமிட்டுள்ளது. அதனால் இ ந்திய விமானபடைக்கு நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் தேவைப்படுகிறது. ராணுவ தளவாட பொருட்களை வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு பங்குதாரருடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்கும் நோக்கத்தோடு ராணுவ தளவாட பொருட்கள் இறக்குமதியை ரத்து செய்து பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதற்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அமெரிக்காவிலேயே தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் பிரச்சாரம் செய்தார். இதன் மூலம் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது.

இந்தியாவுக்கு ராணுவ தளவாட பொருட்களை வழங்குவதில் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் வரும் 26ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பபை முதன் முறையாக மோடி சந்திக்கவுள்ளார். அவரது பயண அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களில் டாடா, லாக்ஹீடு மார்டின் நிறுவன ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஒப்பந்தம் மூலம் உலகளவில் ஃஎப் 16 ரக விமானங்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும். 26 நாடுகளில் 3 ஆயிரத்து 200 ஃஎப் 16 ரக விமானங்கள் பறக்கின்றன. இதில் மிகவும் நவீனமயமான பிளாக் 70 மாடல் விமானம் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது.

100 முதல் 250 விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை இந்தியா இன்னும் வெளிப்படையாக கோரவில்லை. இதேபோல் ஸ்வீடன்’ஸ் ஸாப் நிறுவனமும் கிரிபன் ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க தயாராக உள்ளது. ஆனால், இந்த நிறுவனம் உள்நாட்டு பங்குதாரரை இது வரை அறிவிக்கவில்லை.

டாடா நிறுவனம் ஏற்கனவே சி&130 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களுக்கான கூண்டு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
அறிவியல் செவ்வாய் கிரகம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்தில் 10 லட்சம் மனிதர்கள் குடிபெயர்ந்து வாழும் திட்டம்: கோடீஸ்வரர் இலான் மஸ்க் வெளியிட்டார்

கோடீஸ்வரரும், கண்டுபிடிப்பாளரும், தனியார் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் கம்பெனியின் தலைவருமான இலான் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் 10 லட்சம் மனிதர்கள் குடிபெயர்ந்து வாழும் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

மனிதர்களை ஒரு பல-கிரக இனமாக உருவாக்குதல்” (Making Humans a Multi-Planetary Species) என்ற அவரது திட்டத்தில் இதன் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்து ஒரு உலகளாவிய அழிவு நிகழும் முன்னர் மனிதகுலத்தை பூமியை விட்டு வெளியேற வைக்க வேண்டும் என்று மஸ்க் நம்புகிறார். அந்த முயற்சிக்கான சரியான தேர்வு செவ்வாய் கிரகம்தான் என்கிறார்.

இம்முயற்சிக்குத் தேவையானது மிக அதிக அளவில் உந்துபொருள்(propellant) நிரப்பப்பட்ட, கிரகங்களுக்கு இடையிலான விண்வெளிக்கலம் (interplanetary spaceship).

மஸ்கின் திட்டப்படி விண்கப்பலைக் காலியாக பூமியிலிருந்து முதலில் அனுப்பிவிட்டு, பின்னர் தொடர்ச்சியாக டேங்கர் ராக்கெட்டுகளில் எரிபொருளை அனுப்பி, வழியில் ஆங்காங்கே விண்கலத்தில் நிரப்பவெண்டும். ஒரு வெற்று விண்கப்பலுக்குக் கூட, மனிதகுலம் இதற்கு முன்னர் அனுப்பிய ராக்கெட்டுகளில் நிரப்பியதைவிட அதிக அளவில்  எரிபொருள் தேவைப்படும்.

விண்வெளிக் கப்பலும், ராக்கெட் டேங்கர்களும், மீண்டும் மீண்டும் உபயோகிக்கத் தக்கனவாக இருக்க வேண்டும். மேலும், செவ்வாய் கிரகத்தில் விண்கலத்தில் மீத்தேனை எரிபொருளாக நிரப்பி உபயோகித்து, மீண்டும் விண்கலத்தையும், டேங்கர் ராக்கெட்டுகளையும் பூமிக்கு அனுப்ப முடிய வேண்டும். இல்லையென்றால், செவ்வாய் கிரகம் விண்கப்பல்களின் சுடுகாடாக மாறிவிடும், என்கிறார் மஸ்க்.

 

மேலும் கிரகங்களுக்கு இடையிலான விண்வெளிக் கப்பல், 100 பேர் 80 நாள்கள்வரை வசிக்கும் அழுத்தம் ஊட்டப்பட்ட தளத்துடன் மற்றொரு 400 டன் வரையிலான சரக்கு சேமிக்கும் இடமும் கொண்டதாக இருக்கவேண்டும், என்கிறார் மஸ்க். இச்சரக்குகளில் செவ்வாயில் கட்டுமானப் பணிக்கான சாதனங்களுடன், பிரயாணிகளின் சாமான்களும், எரிபொருள் சாலை கட்டத் தேவையான பொருட்களும் அடங்கும்.

 

Share
Categories
தொழில் நுட்பம்

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல தயாராகும் புதிய ரோவர் விண்கலத்தின் மாதிரி

செவ்வாய் கிரகம் தொடர்பில் தொடர்ச்சியான ஆராய்ச்சியில் நாசா நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக சில வருடங்களுக்கு முன்னர் கியூரியோசிட்டி ரோவர் எனும் விண்கலத்தினை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது.

பல நூற்றுக்கணக்கான மைல்களைக் கடந்து குறித்த விண்கலம் பூமிக்கு தகவல்களை அனுப்பி வருகின்றது.

இந்நிலையில் மற்றுமொரு ரோவர் விண்கலத்தினை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா நிறுவனம் முனைப்புக் காட்டி வருகின்றது.

அங்குள்ள பௌதீக அமைப்பு மற்றும் காலநிலைகள் என்பவற்றிற்கு தாக்குப் பிடிக்கக்கூடிய வகையில் இவ் விண்கலம் அமைக்கப்படவுள்ளது.

அத்துடன் முன்னைய கியூரியோசிட்டி ரோவர் விண்கலத்தினை விடவும் வித்தியாசமான வடிவமைப்பினை இது கொண்டுள்ளது.

விரைவில் வடிவமைப்பு பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில் அதன் மாதிரியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் நீளமானது 8.5 மீற்றர்களாக இருப்பதுடன், எடையானது 5,000 பவுண்ட்களாகவும் காணப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

தவிர இதன் வேகமானது 96 to 112 kmh (60 to 70 mph) ஆகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
ஆண்டிராய்ட் தொழில் நுட்பம்

ஆண்ட்ராய்டு 8.0 ஒ : சிறப்பம்சங்கள்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பதிப்பு 8ல் பல்வேறு புதிய வசதிகளுடன் முந்தைய இயங்குதளங்களுடன் ஒப்பீடுகையில் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் உள்பட ஸ்மார்ட் அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு என் எனப்படும் நௌகட் இயங்குதளத்தை தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த புதிய பதிப்பில் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் மிகப்பெரிய வருமானம் வரும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.ஆண்ட்ராய்டு 8.0 ஒ-இன் பீட்டா பதிப்பை அதன் சாதனங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது, கடந்த காலத்தைப் போலவே, அதன் கைபேசிகளும், கூகிள் பிக்சல், பிக்சல் எக்ஸ்எல், நெக்ஸஸ் 5 எக்ஸ், நெக்ஸஸ் 6 பி, பிக்சல் சி மற்றும் நெக்ஸஸ் பிளேயர் ஆகியவற்றில் கிடைக்கும் என எதிப்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ஓஎஸ் மூலம் நீங்கள் ஒரு செயலியில் இருந்து இன்னொரு செயலியில் காப்பி செய்து பேஸ்ட் செய்வது எளிதாகிவிடுகிறது. அதேபோல் நீங்கள் காப்பி செய்த விவரங்கள் வேறு எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை செர்ச் இஞ்சின் மூலமும் தெரிந்து கொள்ளும் வசதியும் உண்டு. இதனால் அதிக சிரமங்கள் இல்லாமல் பல விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.தற்போது வந்த இந்த வசதியைப் பொறுத்தமட்டில் ஒரு டெக்ஸ்ட் மெசேஜில் வந்த முகவரியை நீங்கள் க்ளிக் செய்தால் உடனே அந்த முகவரி கூகுள் மேப்பில் ஓபன் ஆகும். நீங்கள் அந்த முகவரியை காப்பி செய்து அதன் பின்னர் கூகுள் மேப் சென்று பேஸ்ட் செய்து தேட வேண்டிய அவசியம் இருக்காது.

நோக்கியா 3, நோக்கியா 5,மற்றும் நோக்கியா 6 ஆகியவற்றுடன் அண்ட்ராய்டு ஓ மேம்படுத்தல் கிடைக்கும் என்று எச்எம்டி குளோபல் அறிவித்துள்ளது. இது விண்டோஸ் ஒஎஸ்-இல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மொபைல்போன்களில் இந்த ஆண்ட்ராய்டு 8.0 ஒ வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Share
Categories
ஆண்டிராய்ட் தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு ஓ அறிமுகம்

கூகுளின் மொபைல் இயக்க முறைமை இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட உள்ளது. தற்போது அண்ட்ராய்டு ஓ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் மாநாடு கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வருவதனை ஒட்டி ஆண்ட்ராய்டு 8.0 அல்லது ஆண்ட்ராய்டு ஓ பீட்டா நிலையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பதிப்பு 8ல் பல்வேறு புதிய வசதிகளுடன் முந்தைய இயங்குதளங்களுடன் ஒப்பீடுகையில் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் உள்பட ஸ்மார்ட் அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது. ஆண்ட்ராய்டு என் எனப்படும் நௌகட் இயங்குதளத்தை தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த புதிய பதிப்பில் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இதன் மூலம் மிகப்பெரிய வருமானம் வரும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இதில் பிக்சர் முறை மற்றும் ஆப்பிளின் 3டி டச் அம்சம் ஆகியவை உள்ளடங்கும். இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், அது அண்ட்ராய்டு ஓ ஆண்ட்ராய்டு 8.0 பதிப்பு இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு 8.0 வாயிலாக சிறப்பான பேட்டரி பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த பதிப்பில் பல்வேறு வகையில் பின்புல ஆப் பயன்பாட்டை குறைப்பதுடன், கிராபிக்ஸ் போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும். இந்த பதிப்பில் டெக்ஸ்ட்களை இலகுவாக காப்பி செய்யும் வகையில் ஸ்மார்ட் டெஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 படம்-இன்-பிக்சர் முறையில், அண்ட்ராய்டு ஒ பயனர்கள் ஒரே நேரத்தில் மற்ற பணிகளைச் செய்யும்போது வீடியோக்களைப் பார்க்க முடியும். இந்த மாநாட்டில் புதிய ஆண்ட்ராய்டு கோ இயங்குதளம் உள்பட கூகுள் லென்ஸ், ஐபோன் மொபைலுக்கு கூகுள் ஆசிஸ்டன்ஸ்,ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோவில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் அண்ட்ராய்டு ஓ-ல் அமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
Share
Categories
தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

இண்டர்நெட் திட்டங்களுக்கு இனி ஒரு வருஷம் வேலிடிட்டி

மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள இண்டர்நெட் திட்டங்களை வழங்க வேண்டும் என்று ‘தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்’ (ட்ராய்) அறிவுறுத்தியுள்ளது.

பொதுவாக ‘தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்’ (ட்ராய்) பரிந்துரைக்கும் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதை, மொபைல் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் தெரிவிப்பதே இல்லை. எனவே குறைந்த செலவில் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்பிய ட்ராய், தற்பொழுது மொபைல் சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக ட்ராய் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் வழங்கும் இண்டர்நெட் திட்டங்களில், ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள ஒரு இன்டர்நெட் சேவை திட்டமானது கண்டிப்பாக இடம்பெற வேண்டும். அத்துடன் அந்த திட்டமானது அதிக அளவு டேட்டா பயன்பாடு கொண்டாதாகவும் இருக்க வேண்டும்.
நாடு முழுவதும் தொலை தொடர்பு சேவையை விரிவு படுத்தும் பொருட்டும், டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் பொருட்டும், ட்ராய் அறிமுகப்படுத்தும் இந்த திட்டத்தினை, அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்;என்று எதிர்பார்க்கிறோம்.
ட்ராய் அமைப்பானது இது தொடர்பாக விரைவில் மொபைல் சேவை நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை கூட்டங்கள் நடத்த உள்ளது. அலைபேசி நுகர்வோர் அமைப்புகளும் இத்தகைய ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலமே வாடிக்கையாளர்களின் மன ஓட்டத்தினை நாங்கள் அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Share
Categories
இந்தியா இஸ்ரோ செயற்கை கோள் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

இந்தியாவின் சக்திவாய்ந்த ராக்கெட் ஜிஎஸ்எல்வி-MkIII செயற்கைகோள் ஜிசாட் – 19 ஐ விண்ணில் செலுத்தியது

ஜி.சாட்-19 (GSAT-19) செயற்கைக் கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. Mk III ராக்கெட் (GSLV Mk III), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

“ராட்சத ராக்கெட்” என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட்டாகும்.

ஏறக்குறைய 400 கோடி ரூபாய் செலவில் இந்தியா தயாரித்த, அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே இந்த ராக்கெட் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரோஜன் ஆகியவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதீத குறைவான எரிபொருளில் இயங்கும் எஞ்சினால் இந்த ராக்கெட் இயங்கவுள்ளது.

இந்த ராக்கெட் ஜி.சாட்-19 என்ற தகவல் தொடர்புக்கான செயற்கை கோளை விண்ணுக்கு சுமந்து செல்கிறது. இந்த செயற்கை கோள் 3,136 கிலோ எடை கொண்டது. இதுவரை ஏவப்பட்ட ஏவுகணைகளை விட மிக அதிக எடை கொண்டது.

அதி நவீன வசதிகளுடன் ஆன தகவல் தொடர்பு டிரான்ஸ்பாண்டர்களை கொண்டது. இது பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு பணிகளை மேற்கொள்ளும். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.

 

 

Share
Categories
இந்தியா இஸ்ரோ தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

இந்தியாவின் மிகப்பெரிய ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

இஸ்ரோ நிறுவனம் உருவாக்கிய, இந்தியாவின் மிகப்பெரிய ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட, அதிக எடை தாங்கும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்ட் டவுண் நேற்று தொங்கியது.

மேலும், ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ள நேரத்தில், வானிலை நிலவரம், காலநிலை மாறுபாடு எவ்வாறு இருக்கும் என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.

இஸ்ரோ தலைவர் கிரண்குமார் இதுகுறித்து, “மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்று(திங்கட்கிழமை) மாலை 5.28 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். இதற்கான அனைத்து ஆயத்த பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன. ராக்கெட் புறப்பட தயார் நிலையில் உள்ளது. இது தகவல் தொலை தொடர்புக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்தியாவுக்கு அவசியமானதாகவும் இருக்கும்.” என்று கூறினார்.

Share
Categories
இந்தியா ஐ.டி. தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

விப்ரோ : 2-வது முறையாக மிரட்டல் மெயில்

பெங்களூரு விப்ரோ நிறுவனத்துக்கு இரண்டாவது முறையாக ரூ.500 கோடி பிட்காயின் கேட்டு மிரட்டல் மெயில் வந்துள்ளது. அதில் 72 மணி நேரத்துக்குள் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் அசம்பாவிதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

முதல் மிரட்டல் வந்த ஒரு மாதத்துக்குள்ளாக, மீண்டும் இந்த மெயில் வந்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.பி. முகவரியில் இருந்து மெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது போலியான முகவரியாகவும் இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சைபர் கிரைம் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மே 5-ம் தேதியும் அதே மெயில் ஐடியில் இருந்து மிரட்டல் வந்திருந்தது. அப்போதும் ”ரூ.500 கோடி பிட்காயின்களை அனுப்பவேண்டும். தவறினால் இயற்கை நச்சு மற்றும் ரிசின் நச்சுகளை உணவகங்கள், குடிநீர்க் குழாய்கள் வாயிலாகக் கலந்துவிடுவோம்” என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Share
Categories
இணைய தாக்குதல் உலகம் தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

உங்கள் கணினி இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது ?

உலகளவில் நடைபெற்றுள்ள இணைய தாக்குதலுக்கு பின்னர் மீண்டும் ரான்சம்வேர் போன்ற இணைய தாக்குதல்கள் நடைபெறலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரான்சம்வேர் என்பது கேட்கப்படும் தொகையை செலுத்துவது வரை கணினியிலுள்ள கோப்புக்களை பூட்டி வைத்துகொள்ளும் தீங்கான கணினி மென்பொருளாகும்.

இவ்வாறு இணைய தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதியதல்ல. ஆனால் மாபெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அளவுக்கு வான்னாகிரை வைரஸால் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் இதற்கு முன்னர் நடைபெறாதது ஐரோப்பிய ஒன்றிய காவல்துறை அமைப்பான யூரோபோல் தெரிவித்திருக்கிறது.

எனது கணினி பாதிக்கப்பட்டுள்ளதா?

வின்டோஸ் இயங்குத்தளத்தை பயன்படுத்தி இயங்குகிற கணினிகளை மட்டுமே வான்னாகிரை வைரஸ் தாக்கியுள்ளது.

விண்டோஸ் இயங்குத்தளம் வழங்குகின்ற மென்பொருட்களின் மேம்பாடுகளை பயன்படுத்தாமலோ, மின்னஞ்சல்களை திறந்து வாசிக்கின்றபோது கவனமாக இல்லாமலோ இருந்தால் நீங்களும் பாதிப்படையும் ஆபத்து நிலவுகிறது.

இருப்பினும், இந்த இணைய தாக்குதலை பொறுத்த வரை வீட்டில் கணினி பயன்படுத்துவோர் மிக குறைவான ஆபத்தையே சந்திப்பதாக நம்பப்படுகிறது.

மென்பொருட்களின் மேம்பாட்டு மென்பொருட்களை, ஃபயர்வயர்கள் மற்றும் வைரஸ் தடுப்பு மென்பொருட்களை தரவிறக்கி கணினியில் செயல்பட வையுங்கள். மின்னஞ்சல் செய்திகளை வாசிக்கின்றபோது கவனமாக இருங்கள்.

உங்களுடைய கோப்புக்களின் இன்னொரு பதிப்பை எடுத்து வைத்துகொள்ளுங்கள். அப்படியானால், உங்களுடைய கோப்புகளில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், மீட்புத்தொகை செலுத்தாமலேயே உங்களுடைய கோப்புக்களை திறந்துவிட முடியும்.

மீட்புத்தொகை செலுத்தினாலும் உங்களுடைய கோப்புக்களை திறக்க முடியும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால், இன்னொரு பதிப்பை வைத்திருப்பது நல்லது.

ரான்சம்வேரின் செயல்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கும், அது நடக்க முடியாமல் போனால் செய்ய வேண்டியது என்ன? என்பதற்கான ஆலோசனைககள் (எம்எஸ்17-010) ஐக்கிய ராஜ்ஜியத்தின் இணைய பாதுகாப்பு இணையதளத்தில் உள்ளன.

Share