Categories
Phones ஆண்டிராய்ட் சிறப்புச்செய்தி தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம் ஸ்மார்ட்ஃபோன்

சீனாவில் வடிவமைக்கப்படும் சிறந்த செல்போன்கள் – மி மிக்ஸ் 3

தற்போது விற்பனைக்கு வரும் செல்போன்களின் திரை, விளிம்புகளைத் தொட்டவாறு அமைக்கப்படுவதால், அவற்றின் உபயோகப்படுத்தும் பரப்பளவு அதிகமாக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பம்சம் புகழ்பெற்ற செல்போன்களில் இருக்க வேண்டும் என நுகர்வோர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஐ-போன்-X (iPhone X)-ல் இவ்வம்சம் புகுத்தப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே சீனாவின் சியோமி (Xiaomi) நிறுவனம், தமது முதலாவது போனான மி மிக்ஸ் போனில் இவ்வம்சத்தை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து அவர்களது தற்போதைய போனான மி மிக்ஸ் 3 (Mi Mix 3)– யிலும் இவ்வம்சம் மற்றொரு புதிய அம்சமான நழுவித்திரையுடன் (slider) சேர்ந்து இடம் பெற்றுள்ளது.

சிறப்புக்கூறுகள் (Features)

Chipset: Qualcomm Snapdragon 845
Memory: 6/8 GB RAM/128GB storage
Battery : 3200mAh; Fast wired charging (up to 18W);Fast wireless charging (up to 10W)
Camera: Dual 12-megapixel rear cameras; 4K video capable
Camera features: 2x telephoto, Dual Pixel AF, 4-axis OIS
OS: Android 9.0 Pie w/ MIUI 10
Other features :
Ceramic back
6.39-inch 19.5:9 1080×2340 Full HD+ AMOLED display
Slide-out dual 24/2-megapixel front cameras
Dual SIM, dual VoLTE; 2×2 MIMO Wi-Fi ac, Bluetooth 5.0 with aptX HD, dual band GPS/Galileo

மி மிக்ஸ் 3 -யின் திரை பெரிதாகவும் தெள்ளத் தெளிவாகவும் உள்ளது. விரைவாக செயலாற்றும் திறன், அதிக நேரம் செயல்படும் பேட்டரி, பின்புறமுள்ள சக்திவாய்ந்த இரு கேமராக்கள் ஆகியவை இந்த போனின் சுவாரசியமான விஷயங்கள். ஆனால் தடிமனாகவும் கொஞ்சம் கனமாகவும் இருப்பதாலும் சிலருக்கு இதனைப் பிடிக்காமல் போகலாம்.

இதனை வாங்க நீங்கள் முடிவு செய்யுமுன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் :

1) செல்ஃபி கேமரா அதிக தரம் என்று சொல்ல முடியாது

2) HDR படங்கள் எடுப்பதற்கு சிரமப் பட வேண்டியிருக்கும்

3) தற்போது வரும் செல்போன்களின் திரையிலேயே கைரேகைப் பதிவு ஸ்கேனர் வருகிறது. ஆனால், இந்த போனில் அந்த அம்சம் கிடையாது.

அடுத்த பதிவில்: ஹானர் வியூ 20

Share
Categories
இந்தியா கர்நாடகா தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் பெங்களூரு

ஆதார் தகவல்கள் திருட்டு : பெங்களூரு மென்பொருள் பொறியாளர் கைது

40 ஆயிரம் பேரின் ஆதார் தகவல்களை திருடியதாக ஓலா நிறுவனத்தின் பணியாற்றிய, காரக்பூர் ஐஐடி – யில் படித்த, 31 வயது பெங்களூரு மென்பொருள் பொறியாளர் அபினவ் ஸ்ரீவத்சவை (Abhinav Srivastav) பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

இவர் ஆதார் தகவல்களை சட்ட விரோதமாக கையாடல் செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அவரை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய அரசின் தனிநபர் அடையாள ஆணைய சர்வரை முடக்கி தகவல்களை திருடியதை ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த ஜனவரி மாதம் ‘Aadhaar e-KYC’ என்ற ஆப் மூலம் ஆதார் தகவல்கள் பலவற்றை திரட்டியுள்ளார். இந்த ஆப் சமீபத்தில் கூட கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தது. இதுபோன்ற 5 ஆப்களை உருவாக்கி, அதில் வரும் விளம்பரங்கள் மூலமாக ரூ.40,000 வருவாய் ஈட்டியுள்ளார். ‘Aadhaar e-KYC’ ஆப் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து சுமார் 50,000 முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

e-Hospital என்ற ஆப்-பிற்காக தகவல் சரிபார்ப்பு செல்போன் செயலியை அபினவ் உருவாக்கியதுடன், அதை கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெறச் செய்து ஆதார் தகவல்களை திருடியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது அதிகாரபூர்வ பயனாளர் முகமையைச் சேர்ந்த ஆப் ஆகும். தனது ‘Aadhaar e-KYC’ ஆப்-பிற்கு அதிகாரபூர்வ தன்மை வேண்டும் என்பதற்காக தேசிய தரவுப்பாதுகாப்பு சர்வரை அபினவ் ஹேக் செய்துள்ளார். அதில்தான் இ-ஹாஸ்பிடல் சிஸ்டம் உள்ளது. இந்த சர்வரில்தான் அரசு மருத்துவமனைகளின் மருத்துவப் பதிவு மேலாண்மை விவரங்கள் அடங்கியுள்ளன என்று கூறியுள்ளது போலீஸ்.

 

Share
Categories
இந்தியா ஐ.டி. தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ஸ்மார்ட்ஃபோன்

இலவச ஜியோஃபோன்: ரூ.1500 டிபாசிட், ரூ.153 மாதக்கட்டணம், வாட்ஸப் இல்லை

ரூ.1500 டிபாசிட்டுடன் இலவசமாக ஜியோ ஃபோன்  என்ற அதிரடி அறிவிக்கை ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் மூகேஷ் அம்பானியால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதக்கட்டணமாக ரூ.153 செலுத்தினால் போன்கால்கள், எஸ்எம்ஸ், இணையவசதி இலவசம் என்று கூறப்பட்டுள்ளது. ஜியோ ஸ்மார்ட் போனில் ஜியோ அப்ளிகேஷன்களான ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்டவை முன்கூட்டியே இடம்பெற்றிருக்கும், பயன்பாட்டாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் வாட்ஸப் வசதி தற்போது அந்த ஃபோனில் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் தினசரி 4G டேட்டா  500MB அளவுக்குமேல் கிடைக்காது.  இதர வசதிகளாவன :  நம்பர் கீபேடுகள், 2.4 இன்ச் டிஸ்பிளே, எஃப் எம் ரேடியோ, டார்ச் லைட்டு, ஹெட்ஃபோன் ஜேக், எஸ்டி கார்டு ஸ்லாட்டு, 4 வழி நேவிகேஷன் சிஸ்டம், தொலைபேசி எண் சேகரிப்புகள், தொலைபேசி பதிவுகள், ஜியோ செயலிகள் இடம்பெற்றிருக்கும்.

ரூ.309 மாதக்கட்டணத்தில் ஜியோ ஃபோன் கேபிள் டிவியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜியோ ஃபோன் கேபிள் டிவிடியை ஸ்டார்ட் டிவி மட்டுமல்லாது எந்த டிவியில் வேண்டுமானாலும் பொருத்திவிட்டு 3 முதல் 4 மணி நேரத்திற்கு பெரியத்திரையில் தங்கள் விருப்ப வீடியோவை பார்க்கலாம் என்பதே இதன் சிறப்பாகும்.

டிபாசிட் தொகையான ரூ.1500  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப கிடைக்கும். மேலும் இதற்கான முன்பதிவானது ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு இந்த போன் செப்டம்பர் 2017ல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
Categories
தொழில் நுட்பம் பேஸ்புக்

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகத்தில் இந்தியா முதலிடம்

சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’  உலகமெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் சேர்ந்து, செய்திகளை, தகவல்களை, படங்களை பகிர்ந்துகொள்வதில் இளைய தலைமுறையினர் அலாதியான ஆர்வம் கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக இந்தியா ‘பேஸ்புக்’ உபயோகத்தில் முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் இந்த சமூக வலைத்தளத்தை மொத்தம் 24 கோடியே 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

அமெரிக்காவில் 24 கோடி பேர் ‘பேஸ்புக்’கை உபயோகித்து வருகின்றனர்.

எனவே ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பயன்பாட்டில் அமெரிக்காவை இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது. ‘தி நெக்ஸ்ட் வெப்’ என்ற சஞ்சிகையின் அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ‘பேஸ்புக்’ குறிப்பிட்டு கூறத்தக்க வகையில் நல்லதொரு வளர்ச்சியைப் பெற்று வந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் மட்டுமே ‘பேஸ்புக்’ பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இது 12 சதவீதமாக அமைந்துள்ளது.

Share
Categories
இந்தியா ஓட்டுனர் இல்லாத வாகனம் கர்நாடகா தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம்

இந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்

இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்ட முதலாவது டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்.

இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ.  விஷால் சிக்கா பெங்களூரில் உள்ள அந்நிறுவனத்தின் சமீபத்திய செய்தி ஊடக சந்திப்பின்போது அதனை அறிமுகப்படுத்தினார். இவ்வாகனம் இன்ஃபோஸிஸின் மைசூர் வளாகத்தில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) போன்ற வளர்ந்து வரும்  தொழில்நுட்ப துறைகளில்  ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக இந்த மாதிரியான வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்சார் வரிசைகள் பொருத்தப்பட்ட, ஓட்டுநர் இல்லாத வண்டி, சுற்றியுள்ளவைகளை  தன்னியக்கமாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டது. ஒரு மனித ஓட்டுநரை நம்பியிருக்காமல் செயற்கை நுண்ணறிவினால் (AI) இயக்கப்படும் கணினியைப் பயன்படுத்துவதன் மூலம் அதனால் அவ்வாறு இயங்க முடிகிறது. இவ்வாகனமானது மேம்பட்ட கட்டுப்பாட்டு அம்சங்கள் பொருத்தப்பட்டு,  சாலை அடையாளங்கள், போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் தடைகளை அடையாளம் கண்டுகொள்கிறது.

இவ்வாகனத்தின் புதுமையான வடிவமைப்பைக் குறித்து கருத்து தெரிவித்த விஷால் சிக்கா, “எங்கள் சொந்த உள்நாட்டு ரீதியில் கட்டமைக்கப்பட்ட தானாக இயங்கும் கோல்ஃப் வண்டியில்தான் நான் இன்று இங்கு வந்தேன். இந்த ஓட்டுநர் இல்லா வாகனத் தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான பொறியாளர்களை பயிற்றுவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சோதனைத் தளம் ஆகும்.   ஆட்டோமேஷன் மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகிய  இரட்டைப் பிரிவுகளின் அடிப்படையில்   நாங்கள் தற்போதுள்ள சேவைகளை புதுப்பிக்கிறோம். ”

டிரைவர் இல்லாத வண்டி,  இன்ஃபோசிஸின் புதிய தொழில்நுட்பங்கள், மென்பொருள் மற்றும் சேவைகளை பல்வேறு புதிய துறைகளில் ஈடுபடுத்துமாறு ஆய்வு செய்வதற்கு உதவுவதற்காக செய்யப்படும் முயற்சிகள் ஒன்றாகும்.

 

Share
Categories
அமெரிக்கா தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் மைக்ரோசாஃப்ட்

ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு

மைரோசாஃப்ட் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களை நீக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டம் தீட்டி வருவதாக பல நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன .

இது குறித்த எமது முந்தைய செய்தியை இங்கே பார்க்கலாம் :

மைக்ரோசாஃப்ட்: ‘க்ளௌட்’ சேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதால், ஆயிரக்கணக்கானோரை வேலையிலிருந்து தூக்குகிறது

இந்த நிலையில், இதனை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று உறுதி படுத்தி உள்ளது.

 

இது தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறியிருப்பதாவது:

 

சுமார் 4000 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  பிற நிறுவனங்களில் நடப்பதை போன்று தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும் மாற்றங்கள் நடந்து வருகிறது.

மைக்ரோசா ஃப்ட் நிறுவனத்தில் அமெரிக்காவை தவிர்த்து பிற நாடுகளில்  121,000 பேர் வேலை செய்கிறார்கள்.  அமெரிக்காவில் சுமார் 71000 பேர் வேலை  செய்கிறார்கள்.  இதில் அமெரிக்காவுக்கு வெளியே உள்ள ஊழியர்களைத்தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் குறி வைத்துள்ளது.

ஹெச்-1பி விசா மூலம் அதிக பணியாளர்களை அமெரிக்கா வரவழைக்கும் நிறுவனங்களில் மைக்ரோசாஃப்ட் இந்த ஆண்டு முதல் இடத்தில் உள்ளது. எனவே வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்த முடிவால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share
Categories
தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட்: ‘க்ளௌட்’ சேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதால், ஆயிரக்கணக்கானோரை வேலையிலிருந்து தூக்குகிறது

மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் உலகளாவிய விற்பனைப் பிரிவை  மறுசீரமைத்தது, தனித்தனி மென்பொருள்களுக்கு பதிலாக கிளவுட் சேவைகளை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளது.  இம்மறுசீரமைப்பு, 2014-ல் முன்னாள் நிர்வாக அதிகாரி, ஸ்டீவ் பால்மர் வெளியேறி, சத்யா நடெல்லா பதவிக்கு வந்த பின் அடுத்தடுத்து நிகழும் மறுசீரமைப்புகழில், சமீபத்திய ஒன்றாகும். இதனால் உடனே யாரையும் வேலையை விட்டு நீக்கமாட்டார்கள் என்று சிலர் சொன்னாலும், வியாபார உத்தியை மாற்றுவதால் ஆயிரக்கணக்கானோருக்கு நாட்கள் போகப்போக வேலை போகலாம் என்று தெரியவருகிறது.

இருப்பினும் இம்மறுசீரமைப்பினால் மைக்ரோசாப்டின் அன்றாடப் பணிகளில் பெரும் பாதிப்பு எதுவும் இராது.

மைக்ரோசாப்ட் கிளௌட் பிரிவின் முன்னாள் தலைவரான நாடெல்லவை நிர்வாக அதிகாரியாக நியமித்ததில் இருந்து, அதன் அஜூர் கிளவுட் கம்ப்யூட்டிங் (Azure cloud services) தளத்தை கட்டமைப்பதற்கும், பிற நிறுவனங்களுக்கு மென்பொருள் சந்தாக்களை விற்பனை செய்வதற்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகமான நபர்களையும் தேவையான பிறவற்றையும்  ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவரை மைக்ரோசாஃப்ட், விண்டோஸ் மற்றும் ஆஃபீஸ் போன்ற தயாரிப்புகளுக்கான மென்பொருள்  உரிமங்களை ஒரு பதிப்புக்கு ஒரு தடவை என்ற முறையில் பிற நிறுவனங்களுக்கு விற்று வந்தது. தற்போது அந்த வியாபாரத்தை மாற்றியமைத்து வருடத்திற்கொருமுறை சந்தா போன்ற அடிப்படையில் கிளௌட் முறையிலான வியாபாரத்தை முன்னிறுத்த முயற்சி செய்கிறது. இவ்விஷயத்தில் மைக்ரோசாப்ட் இன்னும் அமேசானின் ஏ.டபிள்யூ.எஸ்.(AWS) வணிகம்,  மற்றும் கூகிளின் வளர்ந்து வரும் கிளௌட் பிரிவு ஆகியவற்றை எட்டவில்லை என்றாலும் கடுமையாக போட்டியிட முயல்கிறது.

இப்போது மைக்ரோசாப்ட்  இரண்டு தனித்துவமான பகுதிகளில் கவனம் செலுத்துகிறது: 1 – பெரிய நிறுவன வாடிக்கையாளர்கள்;  2- சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள். ஆயினும் மைக்ரோசாஃப்டில் அடுத்துவரும் மாற்றங்கள் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. மைக்ரோசாப்ட்டின் உலகளாவிய வர்த்தக வணிகத்தின்  நிறைவேற்றுத் துணைத் தலைவரான ஜுட்சன் அல்தோஃப் (Judson Althoff) அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், “சரியான நேரத்தில் சரியான வாடிக்கையாளருக்கு சரியான ஆதாரங்களை ஒழுங்குபடுத்துவதற்காக” விற்பனை பிரிவு மறுசீரமைக்கப்படும் என்று கூறியுள்ளார். தற்போது எந்த அளவுக்குப் பணிநீக்கங்கள் இருக்கும் என்பது தெளிவாக  தெரியவில்லை. ஆனால் சில பத்திரிகைகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு மைக்ரோசாஃப்ட் அலுவலகங்களில் பணிநீக்கங்கள் நடக்கலாம் என்று கூறுகின்றன.

Share
Categories
உலகம் ஐரோப்பிய யூனியன் தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம்

ஐரோப்பாவில் ‘பெட்யா’ ரேன்சம்வேர் தாக்குதல்: பெரிய அளவில் இடையூறு

ஐரோப்பா முழுவது, குறிப்பாக யுக்ரேனில், ‘பெட்யா’ (Petya) என்ற ரேன்சம்வேர் தாக்குதல் தரவு மையங்களிலுள்ள செர்வர்கள் மற்றும் தனிப்பட்ட கணினிகள் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்டுள்ளது. பெரிய அளவில் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ‘வான்னக்ரை’ (Wanna Cry) என்ற ரேன்சம்வேர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை விடவும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யுக்ரேனில், தனியார் நிறுவன மற்றும் அரசாங்க அதிகாரிகள்  அங்குள்ள மின்கட்டமைப்புகள், வங்கிகள் மற்றும் அரசாங்க அலுவலகங்களில் கடுமையான ஊடுருவல்கள் இருந்ததாக அறிவித்தனர்.  மூத்த அதிகாரி ஒருவர், இருண்ட கணினி திரையின் புகைப்படத்தைக் காண்பித்து, “முழு நெட்வொர்க்கும் வேலை செய்யவில்லை ” என்று பதிவு வெளியிட்டுள்ளார். கீவ் நகரிலுள்ள போரிஸ்ஸ்பில் விமான நிலையத்தில் ‘பெட்யா’  ரேன்சம்வேரினால் கணினிகள்  பாதிக்கப்பட்டதால் விமானங்கள் இயங்கவில்லை.

ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் எண்ணெய் நிறுவனமும் டென்மார்க்கின் கப்பல் நிறுவனமான ஏ.பீ. மோல்லர்-மேர்க்கும் ஹேக்கிங்கினால் தமது நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதாக கூறின.

லண்டனை தளமாகக் கொண்ட விளம்பர நிறுவனமான டபிள்யு.பி.பி. (WPP) -யும் ரேன்சம்வேரினால் பாதிக்கப் பட்டதாக ட்விட்டரில் உறுதிப்படுத்தியது.

ரேன்சம்வேர் என்றால் என்ன ?

ரேன்சம்வேர் என்பது கட்டணம் செலுத்தப்படும் வரை ஸ்கிராம்ப்லிங் (scrambling) மூலம் தரவுகளைப் (data) பிணையில் வைத்திருக்கும் நிரல்களுக்கு(software) வழங்கப்படும் பெயர். தற்போதைய பெட்யா  தாக்குதல், இதற்கு முன்னர் உலகளாவிய அளவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள  வான்னகிறை (WannaCry)  ரேன்சம்வேரின் பாதிப்புக்களை  நிறுவனங்கள் முழுமையாக சரிசெய்வதற்குள் ஏற்பட்டிருக்கிறது.

கருப்பு இணைய தளம் (dark web) எனப்படும் சட்டவிரோத பொருட்கள் விற்கும் இணைய தளங்களில்  ரேன்சம்வேர் கிட் என்ற பெயரில் இவை விற்கப்படுவதாகவும், அவற்றைச் சிலர் கொள்முதல் செய்து இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், கசிய விடப்பட்ட அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கோப்புகளிலும் ஹேக்கிங் செய்பவர்களுக்கு உபயோகமாகும் தகவல்கள் இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கைகளில் சில :

  • ரேன்சம்வேர் பொதுவாக விண்டோஸ் கணினிகளையே அதிகமாக பாதிக்கிறது. ஆகவே மைக்ரோசாஃப்டின் சமீபத்திய மென்பொருள் இணைப்பினை நிறுவுதல், பெரும்பாலான பாதுகாப்புப் பிரச்சினைகளை தடுக்கிறது.
  • ஆப்பிள் மற்றும் லினக்ஸ் அடிப்படையிலான தனிக்கணினிகளுக்கு அதிக அளவில் பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது.
  • சந்தேகத்திற்குரிய இமெயிலில் வரும் இணைப்புகளையோ, சில விளம்பரங்களில் வரும் இணைப்புக்களையோ கிளிக் செய்ய வேண்டாம்.
  • இண்டர்னெட்டிலிருந்து தரவிறக்கம் செய்யும் கோப்புக்களை ஆன்டி வைரஸ் ஸ்கேன் செய்தபின் உபயோகிப்பது நல்லது.

 

 

 

 

Share
Categories
உலகம் ஐரோப்பிய யூனியன் கூகிள் தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம்

கூகுள் நிறுவனத்தின்மீது ஐரோப்பிய யூனியன் 2.42 பில்லியன் யூரோ அபராதம் விதித்தது

கூகுள் நிறுவனம் ஐரோப்பிய யூனியனின் நம்பிக்கையின்மை விதிகளை (Antitrust rules) மீறியதால், அபராதத்தொகையாக 2.42 பில்லியன் யூரோ செலுத்தியாக வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

தனது இணையத் தேடல் இயந்திரம் ( Search Engine) மூலம் கொடுக்கும் தேடல் முடிவுகளில், கூகிள் தனது சந்தை ஒப்பீட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகளை 90 நாட்களுக்குள் அநுசரித்து, சேவைகளை மாற்றியமைக்காவிட்டால், கூகிளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் உலகளாவிய தின வருமானத்தில் 5% வரை அதிகமாக அபராதத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அந்த உத்தரவில் கூகுளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் மிகச் சமீபத்திய நிதி அறிக்கையின்படி, அதன் வருமானம் நாளொன்றுக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதை முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படலாம் என்று கூகிள் நிறுவனம் கூறியுள்ளது.

 

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்தியா உலகம் ஐ.டி. தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம்

நியூயார்க் விசா மீறல் வழக்கில் இன்ஃபோசிஸ் $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம்

நியூயார்க் மாகாண அட்டார்ணி ஜெனரல் எரிக் ஸ்னைடர்மேனுடன் இந்தியாவின் இன்ஃபோசிஸ்,  விசா மீறல் வழக்கில்  $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளது.

இத்தீர்வு இன்போசிஸ், அவுட்சோர்சிங் சேவைகளை வழங்கும் போக்கில், நியூயார்க் மாகாணத்திற்கு வெளிநாட்டு ஐடி பணியாளர்களை கொண்டுவந்து, தங்கள் விசாக்களின் விதிமுறைகளை மீறி பணியாற்றச் செய்ததாக அம்பலமான கூற்றுக்களை நிவர்த்தி செய்கிறது.

அட்டார்ணி ஜெனரல் மேலும், “இன்போசிஸ் நியூயார்க்கில் உள்ள அவர்களது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொதுவாக நடைமுறையில் உள்ள ஊதியம் வழங்காமலும்,  வரி செலுத்தாமலும் இருந்து வந்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது:

நிறுவனங்கள்  நியூயார்க் மாகாணத் தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக, எங்கள் சட்டங்களை மீறி நடக்க அனுமதிக்க மாட்டோம்.  தொழிலாளர்  சந்தை  நியாயமானதாகவும், நேர்மையான போட்டித்தன்மை உடையதாகவும், அனைவருக்கும் வெளிப்படையானதாகவும் இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு எனது அலுவலகம் கடமைப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ல விவரப்படி, இன்போசிஸ் பணியாளர்களுக்கு B-1 விசாக்களைப் பெற்றுள்ளது. இது H-1B வேலை அனுமதிக்கு பதிலாக தற்காலிக பார்வையாளர் விசாக்கள் ஆகும். பார்வையாளர் விசாக்கள் மிகவும் எளிதாகப் பெறலாம்;  H-1B விசாக்களுக்கு  65,000 உச்ச அளவு இருப்பதுபோல B-1 விசாக்களுக்குக் கிடையாது.

 

 

Share