Categories
Phones ஆண்டிராய்ட் சிறப்புச்செய்தி தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம் ஸ்மார்ட்ஃபோன்

சீனாவில் வடிவமைக்கப்படும் சிறந்த செல்போன்கள் – மி மிக்ஸ் 3

தற்போது விற்பனைக்கு வரும் செல்போன்களின் திரை, விளிம்புகளைத் தொட்டவாறு அமைக்கப்படுவதால், அவற்றின் உபயோகப்படுத்தும் பரப்பளவு அதிகமாக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பம்சம் புகழ்பெற்ற செல்போன்களில் இருக்க வேண்டும் என நுகர்வோர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஐ-போன்-X (iPhone X)-ல் இவ்வம்சம் புகுத்தப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே சீனாவின் சியோமி (Xiaomi) நிறுவனம், தமது முதலாவது போனான மி மிக்ஸ் போனில் இவ்வம்சத்தை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து அவர்களது தற்போதைய போனான மி மிக்ஸ் 3 (Mi Mix 3)– யிலும் இவ்வம்சம் மற்றொரு புதிய அம்சமான நழுவித்திரையுடன் (slider) சேர்ந்து இடம் பெற்றுள்ளது.

சிறப்புக்கூறுகள் (Features)

Chipset: Qualcomm Snapdragon 845
Memory: 6/8 GB RAM/128GB storage
Battery : 3200mAh; Fast wired charging (up to 18W);Fast wireless charging (up to 10W)
Camera: Dual 12-megapixel rear cameras; 4K video capable
Camera features: 2x telephoto, Dual Pixel AF, 4-axis OIS
OS: Android 9.0 Pie w/ MIUI 10
Other features :
Ceramic back
6.39-inch 19.5:9 1080×2340 Full HD+ AMOLED display
Slide-out dual 24/2-megapixel front cameras
Dual SIM, dual VoLTE; 2×2 MIMO Wi-Fi ac, Bluetooth 5.0 with aptX HD, dual band GPS/Galileo

மி மிக்ஸ் 3 -யின் திரை பெரிதாகவும் தெள்ளத் தெளிவாகவும் உள்ளது. விரைவாக செயலாற்றும் திறன், அதிக நேரம் செயல்படும் பேட்டரி, பின்புறமுள்ள சக்திவாய்ந்த இரு கேமராக்கள் ஆகியவை இந்த போனின் சுவாரசியமான விஷயங்கள். ஆனால் தடிமனாகவும் கொஞ்சம் கனமாகவும் இருப்பதாலும் சிலருக்கு இதனைப் பிடிக்காமல் போகலாம்.

இதனை வாங்க நீங்கள் முடிவு செய்யுமுன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் :

1) செல்ஃபி கேமரா அதிக தரம் என்று சொல்ல முடியாது

2) HDR படங்கள் எடுப்பதற்கு சிரமப் பட வேண்டியிருக்கும்

3) தற்போது வரும் செல்போன்களின் திரையிலேயே கைரேகைப் பதிவு ஸ்கேனர் வருகிறது. ஆனால், இந்த போனில் அந்த அம்சம் கிடையாது.

அடுத்த பதிவில்: ஹானர் வியூ 20

Share
Categories
தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் பலவகைச் செய்திகள்

2.7 மைல் அகலமுள்ள பாரிய விண்கல் செப்டம்பர் 1 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும்

2.7 மைல் அகலமுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள பாரிய விண்கல் ஒன்று, இவ்வருடம், செப்டம்பர் 1 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப் போகிறது என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

ஃப்ளாரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த பெரிய விண்வெளிப் பாறை நமது கிரகத்திலிருந்து 4.4 மில்லியன் மைல்கள் தொலைவில் கடந்து செல்லும். இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலுள்ள தூரத்தைப் போல 18 மடங்கு அதிக தூரமாகும்.

நாசாவின் கூற்றுப்படி, இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ள, இந்த அளவுள்ள விண்கற்களில்,  இதுதான் பூமியின் மிக அருகில் முதலாவதாக கடந்து செல்லப்போகிறது. இதன்மூலம், தொலைதூர பொருள்களை முதன்முதலாக, பூமியை அடிப்படையாகக் கொண்ட ரேடார் அவதானிப்புகள் மூலம் வெகு அருகிலிருந்து, ஆராய்வதற்கான முதல் வாய்ப்பை இவ்விண்கல் அளித்துள்ளது.

இது ஆபத்தானதாக தோன்றினாலும்,  புளோரன்ஸ் விண்கல் பாதுகாப்பாக பூமியை சுமார் 4.4 மில்லியன் மைல்களுக்கு (7 மில்லியன் கிலோமீட்டர்) அப்பால் பறந்து சென்று விடும் என்று நாசா கூறுகிறது.

 

Share
Categories
இந்தியா கர்நாடகா தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் பெங்களூரு

ஆதார் தகவல்கள் திருட்டு : பெங்களூரு மென்பொருள் பொறியாளர் கைது

40 ஆயிரம் பேரின் ஆதார் தகவல்களை திருடியதாக ஓலா நிறுவனத்தின் பணியாற்றிய, காரக்பூர் ஐஐடி – யில் படித்த, 31 வயது பெங்களூரு மென்பொருள் பொறியாளர் அபினவ் ஸ்ரீவத்சவை (Abhinav Srivastav) பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

இவர் ஆதார் தகவல்களை சட்ட விரோதமாக கையாடல் செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அவரை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய அரசின் தனிநபர் அடையாள ஆணைய சர்வரை முடக்கி தகவல்களை திருடியதை ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த ஜனவரி மாதம் ‘Aadhaar e-KYC’ என்ற ஆப் மூலம் ஆதார் தகவல்கள் பலவற்றை திரட்டியுள்ளார். இந்த ஆப் சமீபத்தில் கூட கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தது. இதுபோன்ற 5 ஆப்களை உருவாக்கி, அதில் வரும் விளம்பரங்கள் மூலமாக ரூ.40,000 வருவாய் ஈட்டியுள்ளார். ‘Aadhaar e-KYC’ ஆப் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து சுமார் 50,000 முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

e-Hospital என்ற ஆப்-பிற்காக தகவல் சரிபார்ப்பு செல்போன் செயலியை அபினவ் உருவாக்கியதுடன், அதை கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெறச் செய்து ஆதார் தகவல்களை திருடியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது அதிகாரபூர்வ பயனாளர் முகமையைச் சேர்ந்த ஆப் ஆகும். தனது ‘Aadhaar e-KYC’ ஆப்-பிற்கு அதிகாரபூர்வ தன்மை வேண்டும் என்பதற்காக தேசிய தரவுப்பாதுகாப்பு சர்வரை அபினவ் ஹேக் செய்துள்ளார். அதில்தான் இ-ஹாஸ்பிடல் சிஸ்டம் உள்ளது. இந்த சர்வரில்தான் அரசு மருத்துவமனைகளின் மருத்துவப் பதிவு மேலாண்மை விவரங்கள் அடங்கியுள்ளன என்று கூறியுள்ளது போலீஸ்.

 

Share
Categories
அறிவியல் செயற்கை கோள் தலைப்புச் செய்திகள்

11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல

11 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ராஸ் 128 என்ற மங்கலான சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்திலிருந்து வந்ததாகக் கருதப்பட்ட “விநோத” சமிக்ஞை எதனால் என்று தீர விசாரித்த பிறகு, அது வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து வந்தது அல்ல என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த “விநோத” சமிக்ஞை நம்மால் அனுப்பப்பட்டு தொலைவில் சுற்றுக்கொண்டிருக்கும் துணைக்கோள்களின் சிக்னல் குறுக்கீடுகளால் உருவாகி இருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகின்றனர்.

வானியல் வல்லுனர்களைப் பொறுத்தவரை, இதன் உண்மையான மர்மம் என்னவென்றால், இந்த சமிக்ஞைகள்  அசாதாரணமான விண்மீன் நிகழ்வுகளாலா , பிற பின்னணி பொருள்களிலிருந்து உருவானவையா அல்லது செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளின் குறுக்கீடுகளாலா என அவர்கள் அறுதியிட்டுக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான்.

“இந்த சிக்னல்கள், வேற்று கிரக வாசிகளிடமிருந்து வந்திருக்க கூடும் என்பதே பலரையும் இவ்விஷயத்தில் ஆர்வம் காட்டச் செய்தது”, என்கிறார் போர்டோ ரிகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அபெல் மென்டெஸ் எனும் வானியல் நிபுணர்.

பிரபஞ்சத்தில் வேறு இடங்களில் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பதற்கான நிபுணர் குழுவினை வரவழைத்து, இது குறித்த அவர்களின்   ஊகங்களையும் கேட்டறிந்த பின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேற்றுக் கிரகவாசி ஆராய்ச்சிக் குழுவின்  (SETI) பெர்க்லி ஆராய்ச்சி மையம்  அதன் முடிவை வெளியிட்டுள்ளது.

“இச்சமிக்ஞைகளுக்கான சரியான விளக்கமாக இவை  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புவிசார் செயற்கைக்கோள்களில் இருந்து வெளியான தகவல் பரிமாற்றங்களே ஆகும். ராஸ் 128 நட்சத்திரமானது நமது வான்வெளி நடுக்கோட்டில் (celestial equator) காணப்படுகிறது; இங்குதான் நமது புவிநிலை செயற்கைக்கோள்களும் (geostationary satellites) காணப்படுகின்றன.”

 

 

Share
Categories
இந்தியா இஸ்ரோ செயற்கை கோள் தொழில் நுட்பம்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்–2 செயற்கை கோள்

இன்று காலை ராமேசுவரம் வந்த இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, அங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டுக்கு சென்று,  அப்துல் கலாமின் அண்ணன் முகமது மீராலெப்பை மரக்காயரை சந்தித்து நலம் விசாரித்தார். அப்துல்கலாம் மணி மண்டபம் அமைக்கப்பட்டதற்கு நன்றியும் தெரிவித்தார்.பின்னர் மணி மண்டபம் சென்ற மயில்சாமி அண்ணாதுரை அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மேலும் மயில்சாமி அண்ணாதுரை , “மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மிகச்சிறந்த மனிதர். இந்தியா மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரிடமும் மாணவ-மாணவிகளிடமும் ஒரு அடையாளமாக திகழ்ந்தவர். அவர் பிறந்த ஊரில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்தது.விண்வெளி ஆராய்ச்சி பாதுகாப்பு துறை என பல்வேறு துறைகளுக்கு ஆலோசகராக இருந்தவர் அப்துல்கலாம். அவரது ஆசைப்படி கடந்த 2 மாதங்களில் 14 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 10 செயற்கை கோள்கள் விஞ்ஞானிகள் மூலமும் 4 செயற்கை கோள்கள் மாணவர்கள் மூலமும் உருவாக்கி ஏவப்பட்டுள்ளது. கலாம் ஆசையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.சந்திரயான்-2 செயற்கைகோள் 2018-ம் ஆண்டுக்குள் விண்ணில் ஏவப்பட உள்ளது. மங்களயான்-1 ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மங்கள்யான்-2 ஏவ திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.” என்றும் கூறினார்.

Share
Categories
இந்தியா ஐ.டி. தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ஸ்மார்ட்ஃபோன்

இலவச ஜியோஃபோன்: ரூ.1500 டிபாசிட், ரூ.153 மாதக்கட்டணம், வாட்ஸப் இல்லை

ரூ.1500 டிபாசிட்டுடன் இலவசமாக ஜியோ ஃபோன்  என்ற அதிரடி அறிவிக்கை ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் மூகேஷ் அம்பானியால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதக்கட்டணமாக ரூ.153 செலுத்தினால் போன்கால்கள், எஸ்எம்ஸ், இணையவசதி இலவசம் என்று கூறப்பட்டுள்ளது. ஜியோ ஸ்மார்ட் போனில் ஜியோ அப்ளிகேஷன்களான ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்டவை முன்கூட்டியே இடம்பெற்றிருக்கும், பயன்பாட்டாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் வாட்ஸப் வசதி தற்போது அந்த ஃபோனில் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் தினசரி 4G டேட்டா  500MB அளவுக்குமேல் கிடைக்காது.  இதர வசதிகளாவன :  நம்பர் கீபேடுகள், 2.4 இன்ச் டிஸ்பிளே, எஃப் எம் ரேடியோ, டார்ச் லைட்டு, ஹெட்ஃபோன் ஜேக், எஸ்டி கார்டு ஸ்லாட்டு, 4 வழி நேவிகேஷன் சிஸ்டம், தொலைபேசி எண் சேகரிப்புகள், தொலைபேசி பதிவுகள், ஜியோ செயலிகள் இடம்பெற்றிருக்கும்.

ரூ.309 மாதக்கட்டணத்தில் ஜியோ ஃபோன் கேபிள் டிவியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜியோ ஃபோன் கேபிள் டிவிடியை ஸ்டார்ட் டிவி மட்டுமல்லாது எந்த டிவியில் வேண்டுமானாலும் பொருத்திவிட்டு 3 முதல் 4 மணி நேரத்திற்கு பெரியத்திரையில் தங்கள் விருப்ப வீடியோவை பார்க்கலாம் என்பதே இதன் சிறப்பாகும்.

டிபாசிட் தொகையான ரூ.1500  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப கிடைக்கும். மேலும் இதற்கான முன்பதிவானது ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு இந்த போன் செப்டம்பர் 2017ல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
Categories
அறிவியல் தொழில் நுட்பம்

கொசுக்களை அழிக்க கூகுளின் புதுத் திட்டம்

வெரிலி நிறுவனம் பாக்டீரியா தொற்றிய ஆண் கொசுக்களை கலிஃபோர்னியாவிலுள்ள ஃப்ரெஷ்னோவில் வெளியே அனுப்பியுள்ளது.

இது மஞ்சள் காய்ச்சல் கொசுக்களை (Aedes aegypti) ஃப்ரெஷ்னோ விலிருந்து அழிப்பதற்கான முதல் முயற்சி. இக்கொசுக்களால் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, ஜிக்கா வைரஸ் ஆகியவை பரவுகிறது.

கூகுளின் துணை நிறுவனமான ஆல்ஃபாபேட்ஸ் லைஃப் சயின்ஸ் (வெரிலி), தனது உயிர் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வகத்தில் ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு மில்லியன் கொசுக்களை உருவாக்க உள்ளது.

உலகில் உள்ள பல நோய்களுக்கு முக்கிய காரணம் கொசு. அளவில் சிறிதாக இருந்தாலும் நோய்களை பரப்புவதில் கொசுவுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த மாபெரும் அந்நிய சக்தியான கொசுவை உயிர் அறிவியல் தொழில் நுட்பவியல் மூலம் அழிக்கும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது.

உயிர் அறிவியல் தொழில் நுட்ப துறையான (Verily Life Science)  வெரிலிஉதவியுடன் தற்போது 20 மில்லியன்ஆண் கொசுக்களை உற்பத்தி செய்து பறக்கவிடப் போகின்றது கூகுள்நிறுவனம். கொசுக்களை அதிகபடுத்துவதால் நன்மை ஏற்படுமா என சந்தேகம் ஏற்படுவதுண்டு.கொசுவை உருவாக்குவதேகொசுக்களை அழிக்கதான் என கூகுள்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது வால்பாஷியா பாக்டீரியா மூலம் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் ஆண்கொசுக்களை உருவாக்கி அதை வெளியே அனுப்ப உள்ளனர். இந்த ஆண் கொசுக்களுடன் சேரும் பெண்கொசுக்கள் போடும் முட்டைகள், புதியகொசுக்களை உருவாக்கும் தன்மை அற்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃபிரஸ்னோவில் உள்ள ஆய்வகத்தில் இந்த கொசுக்கள் உருவாக்கப்படுகின்றன. இது, அமெரிக்காவின் மிகப்பெரிய சோதனையாக கருதப்படுகிறது. இந்த சோதனை குறித்து எம்ஐடி டெக்னாலஜி மூத்த பொறியாளர் லினஸ் அப்ஸன் கூறுகையில், “உலக மக்களுக்கு உண்மையாக உதவ விரும்பினால் இதுபோன்று நிறைய கொசுக்களை நாங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். அதனை எந்தப் பகுதிக்கு அனுப்ப வேண்டும் என திட்டமிட்டு அங்கு செலுத்துவோம். இதற்கு மிகக்குறைந்த செலவே ஆகிறது. ஆஸ்திரேலியாவிலும் இந்த சோதனையை இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த சோதனை நடத்துவதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (EPA) ஒப்புதல் வழங்கியுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த மலட்டு தன்மையுள்ள கொசுக்கள் மற்ற உயிரினங்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது என உறுதியளிக்கிறோம்” என்று கூறினார்.

Share
Categories
தொழில் நுட்பம் பேஸ்புக்

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகத்தில் இந்தியா முதலிடம்

சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’  உலகமெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் சேர்ந்து, செய்திகளை, தகவல்களை, படங்களை பகிர்ந்துகொள்வதில் இளைய தலைமுறையினர் அலாதியான ஆர்வம் கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக இந்தியா ‘பேஸ்புக்’ உபயோகத்தில் முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் இந்த சமூக வலைத்தளத்தை மொத்தம் 24 கோடியே 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

அமெரிக்காவில் 24 கோடி பேர் ‘பேஸ்புக்’கை உபயோகித்து வருகின்றனர்.

எனவே ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பயன்பாட்டில் அமெரிக்காவை இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது. ‘தி நெக்ஸ்ட் வெப்’ என்ற சஞ்சிகையின் அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ‘பேஸ்புக்’ குறிப்பிட்டு கூறத்தக்க வகையில் நல்லதொரு வளர்ச்சியைப் பெற்று வந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் மட்டுமே ‘பேஸ்புக்’ பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இது 12 சதவீதமாக அமைந்துள்ளது.

Share
Categories
இந்தியா ஓட்டுனர் இல்லாத வாகனம் கர்நாடகா தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம்

இந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்

இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்ட முதலாவது டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்.

இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ.  விஷால் சிக்கா பெங்களூரில் உள்ள அந்நிறுவனத்தின் சமீபத்திய செய்தி ஊடக சந்திப்பின்போது அதனை அறிமுகப்படுத்தினார். இவ்வாகனம் இன்ஃபோஸிஸின் மைசூர் வளாகத்தில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) போன்ற வளர்ந்து வரும்  தொழில்நுட்ப துறைகளில்  ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக இந்த மாதிரியான வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்சார் வரிசைகள் பொருத்தப்பட்ட, ஓட்டுநர் இல்லாத வண்டி, சுற்றியுள்ளவைகளை  தன்னியக்கமாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டது. ஒரு மனித ஓட்டுநரை நம்பியிருக்காமல் செயற்கை நுண்ணறிவினால் (AI) இயக்கப்படும் கணினியைப் பயன்படுத்துவதன் மூலம் அதனால் அவ்வாறு இயங்க முடிகிறது. இவ்வாகனமானது மேம்பட்ட கட்டுப்பாட்டு அம்சங்கள் பொருத்தப்பட்டு,  சாலை அடையாளங்கள், போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் தடைகளை அடையாளம் கண்டுகொள்கிறது.

இவ்வாகனத்தின் புதுமையான வடிவமைப்பைக் குறித்து கருத்து தெரிவித்த விஷால் சிக்கா, “எங்கள் சொந்த உள்நாட்டு ரீதியில் கட்டமைக்கப்பட்ட தானாக இயங்கும் கோல்ஃப் வண்டியில்தான் நான் இன்று இங்கு வந்தேன். இந்த ஓட்டுநர் இல்லா வாகனத் தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான பொறியாளர்களை பயிற்றுவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சோதனைத் தளம் ஆகும்.   ஆட்டோமேஷன் மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகிய  இரட்டைப் பிரிவுகளின் அடிப்படையில்   நாங்கள் தற்போதுள்ள சேவைகளை புதுப்பிக்கிறோம். ”

டிரைவர் இல்லாத வண்டி,  இன்ஃபோசிஸின் புதிய தொழில்நுட்பங்கள், மென்பொருள் மற்றும் சேவைகளை பல்வேறு புதிய துறைகளில் ஈடுபடுத்துமாறு ஆய்வு செய்வதற்கு உதவுவதற்காக செய்யப்படும் முயற்சிகள் ஒன்றாகும்.

 

Share
Categories
செயற்கை கோள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

புதன் கோளைச் சுற்றப் போகும் இரட்டை செயற்கைக் கோள்கள் சென்றடைய 7 ஆண்டுகள் ஆகும்

புதன் கோளுக்கு கொண்டு செல்லும் இரட்டை செயற்கைக்கோள் தயாராகிவிட்டது. அது ஊடகவியலாளர் பார்வைக்காக நெர்லாந்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.


புதன் கோளுக்கு அனுப்புவதற்கான இரட்டை செயற்கைக்கோள்கள் தயாராக உள்ளன. பெப்பிகொலம்போ விண்வெளி பயணத்திற்கு தயாராக உள்ள இந்த செயற்கைக்கோள்களை, நெதர்லாந்தில் உள்ள நூர்ட்விக்கில் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டது.
இந்த இரு செயற்கைக்கோள்களும், விண்ணில் ஏவப்பட்ட பின்னர் புதன் கிரகத்தை சென்றடையும். அதன் பின்னர், அவை தனித்தனியாக பிரிந்து அவைகளுக்குரிய கண்காணிப்பு பணிகளை தனித்தனியாக மேற்கொள்ளும்.

அடுக்கப்பட்ட விமானங்கள் என்று கூறப்படும் இந்த இரு செயற்கைகோள்கள் இணைக்கப்பட்ட நிலையிலேயே பார்வைக்கு வைக்கப்பட்டன.

ஐரோப்பாவின் மெர்க்குரி பிளானட்டரி ஆர்பிட்டர் மற்றும் ஜப்பானின் மெர்க்குரி மேக்னேட்டோஸ்பெரிக் ஆர்பிட்டர் ஆகிய செயற்கைக்கோள்கள் ஃபிரெஞ்சு கினியாவில் உள்ள விண்கல ஏவுதளத்திலிருந்து ஏவப்படும். அதற்கு முன், தனித்தனியாக பிரித்து இறுதி சோதனை நடைபெறும்.

இந்த இரட்டை செயற்கைக்கோள்களின் பயணம் அடுத்த ஆண்டு விண்வெளியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இந்த செயற்கைக்கோள்கள் புதனை சென்றடைய ஏழு ஆண்டு காலம் ஆகுமாம்.

7 ஆண்டுகள் பயணித்து புதன் கோளுக்கு சென்றடையும் இந்த செயற்கைக்கோள்கள் தங்களது கண்காணிப்பை சிறப்பாக செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், அது பூமிக்கு அனுப்பும் தகவல்களை பொறுத்து அடுத்தக்கட்ட ஆய்வு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Share