Categories
தமிழகம் போராட்டம்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து வேலைநிறுத்தம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,700 கோடி நிலுவை தொகை, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து வேலைநிறுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

போக்குவரத்துக் கழக ஊழியர் களின் காலவரையற்ற வேலைநிறுத் தப் போராட்டம் தீவிரமடைந்துள் ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளா கினர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
Categories
காவல் துறை தமிழகம்

சென்னை: புதிய காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம்

சென்னை மாநகர காவல் ஆணையராக டாக்டர் ஏ.கே. விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். காவல் ஆணையராக இருந்த கரண் சின்கா தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக இருந்த சுனில்குமார் சிங் ஊர்க்காவல் படை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையராக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல் தலைமை அலுவலக துணை ஆணையராக எஸ்.சரவணன் நியமனம். மெட்ரோ ரெயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக ஜெயகவுரி நியமனம். ஊர்க்காவல் படை ஏடிஜிபியாக சுனில்குமார் சிங் மாற்றப்பட்டுள்ளார். காவல் தலைமை அலுவலக ஏடிஜிபியாக எம்.ரவி நியமனம்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Categories
தமிழகம் பிளஸ் 2 தேர்வு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 92.1 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய 9 லட்சம் பேரில் 92.1 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 1,171 பேர் 1,180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிடும் முறையில் இந்த ஆண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அளவில் முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பெற்றவர்கள் விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மாணவ-மாணவிகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு முடிவுகள் அதிகாரப் பூர்வமாக வெளியான அடுத்த சில நொடிகளில், தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் அவர்கள் ஏற்கெனவே அளித்திருந்த செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன. இதுபோன்று எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களுக்கு தேர்வு முடிவு களை தெரிவிப்பது இந்த ஆண்டு முதல்முறையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
Share
Categories
தமிழகம் பிளஸ் 2 தேர்வு

பிளஸ் 2 தேர்வு முடிவு செல்போனில் அனுப்பப்படும்: அமைச்சர் தகவல்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 12ம் தேதி வெளியிடப்படும். பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். தேர்வு முடிவு வெளியான 10 நிமிடத்தில் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்த மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்படும்.

மாணவர்களின் சான்றிதழ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படும். புதிய பாடத்திட்டங்கள் குறித்து நாளை (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இட ஒதுக்கீடு செய்யாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Share
Categories
குற்றம் தமிழகம்

முகநூல் தோழியைக் கொன்ற தீயணைப்பு வீரர் சிறையில் தற்கொலை

தன்னுடைய முகநூல் தோழி மீது காரை ஏற்றிக் கொலை செய்த தீயணைப்பு வீரர் இளையராஜா, சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

வேறொரு நபருடன் நட்பு ஏற்பட்டதால், முகநூல் தோழியும் அரசுப் பள்ளி ஆசிரியருமான நிவேதா மீது காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் தீயணைப்பு வீரர் இளையராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று (புதன்கிழமை) சிறையில் உள்ள கழிவறை ஜன்னலில் கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

என்ன நடந்தது?

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் நிவேதா(47). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நிவேதா கருத்து வேறுபாட்டால் 20 வருடங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்துள்ளார். இந்நிலையில், நிவேதாவுக்கும் கோவை கிணத்துக்கடவைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான இளையராஜா(28) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பி.இ பட்டதாரியான கணபதி (33) என்பவருடனும் நிவேதாவுக்கு முகநூலில் கூடா நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கட்கிழமை இரவு அண்ணா நகரில் கணபதியும், நிவேதாவும் ஒரே பைக்கில் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளையராஜா, காரில் மோதியதாக கூறப்படுகிறது. இதில், நிவேதா கொலை செய்யப்பட, காயமடைந்த கணபதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த அண்ணா நகர் போலீஸார், இளையராஜாவை கைது செய்தனர். இளையராஜா அளித்த வாக்குமூலத்தில், ”நிவேதாவுக்கும் எனக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் நட்பு ஏற்பட்டது. அவரது வயது முதிர்ந்த தாயார் கோவை சிங்காநல்லூர் குடியிருப்பில் வசித்தார். நான் அருகில் உள்ள வீட்டில் தங்கி இருந்தேன். அப்போது தாயாரை பார்க்க வரும் நிவேதாவுக்கும், எனக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

இந்நிலையில் நிவேதாவின் முகநூல் நண்பர் கணபதி, தானும் மனைவியை பிரிந்தவர் என்று சொல்லி நிவேதாவை திருமணம் செய்வதாக கூறி பணம் பெற்று வந்தார். ஆனால் அவர் தனது முகவரியை தெரிவிக்க மறுத்து வந்தார். ஏற்கெனவே நானும் நிவேதாவும் சென்னை வந்து கணபதியின் முகவரியை 3 நாட்களாக தேடினோம். ஆனால் அவர் எங்களை அலைக்கழித்தார்.

அதன் பிறகு மீண்டும் சென்னை வந்தோம். கணபதியை அண்ணாநகர் 3-வது அவென்யூ அருகே வரச்சொல்லி பேசினோம். அப்போது தனது வீட்டு முகவரியை காட்ட சம்மதித்தார். ஆனால் என்னை வரக்கூடாது என்று இருவரும் சொல்லி விட்டனர். நிவேதாவின் நடவடிக்கையிலும் மாற்றம் தெரிந்தது.

கூடவே இருந்த என்னை உதறி விட்டு கணபதியுடன் நெருக்கம் காட்டி சென்றதை என் மனம் ஏற்கவில்லை. எனவே இருவரையும் தீர்த்துக் கட்ட கார் மூலம் மோதினேன்” என்று கூறியதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இளையராஜா சிறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம்

திருப்பதியில் முதல்வர் எடப்பாடி தரிசனம்

தமிழக அரசு கடுமையான நெருக்கடியில் இருக்கும் நிலையில், திருப்பதியில் முதல்வர் எடப்பாடி தரிசனம் செய்ய குடும்பத்தினருடன் சென்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அதிமுகவில் கடும் நெருக்கடி நிலவி வருகிறது. கட்சி இரண்டாக உடைந்தது; கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருந்தது; சசிகலா சிறைவாசம்; அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை; ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் சிக்கியது; இரட்டை இலை முடக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு சிறைவாசம் என அதிமுக அம்மா அணி அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், அதிமுக இரு அணிகளின் இணைப்பு இழுபறி நிலையில் இருந்து இல்லாமலே போய்விட்டது. புதிய டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு, நீட் தேர்வை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்காததால் அரசு மீது மக்களுக்கு வெறுப்பு என தமிழக அரசு மீதான அதிருப்தி மக்களுக்கு அதிகமாகிக் கொண்டே வருகிறது. மேலும், மத்திய அரசும், பாஜவும் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று இரவு வந்தார். அவருடன் மனைவி ராதா, மகன் மிதுன் ஆகியோரும் வந்தனர்.இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை கோயிலில் நடந்த வாராந்திர சேவையான அஷ்டதள பத்மாராதனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர்உண்டியலில் காணிக்கை செலுத்தினார். இதைத்தொடர்ந்து கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டத்தில் தேங்காய் உடைத்தும், பேடி ஆஞ்சநேயர் கோயிலிலும் தரிசனம் செய்தனர். பின்னர் வெளியே வந்த முதல்வரிடம் நிருபர்கள் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேட்டனர். அதற்கு அவர், ‘தனிப்பட்ட முறையில் நான் குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசிக்க வந்தேன். அரசியல் பற்றி பேச விரும்பவில்லை’ என்று கூறிவிட்டு சென்றார்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம்

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியன் மர்ம மரணம்

தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போது, நாமக்கலில் உள்ள கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் வீட்டிலும் சோதனை நடந்தது. இவர், அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர். இவர், இன்று தனது தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் வருமான வரித் துறை விசாரணை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை இறுக்கிய பிடிகள் தற்போது விலக வாய்ப்புகள் உள்ளன.

Share
Categories
அ.தி.மு.க. அதிமுக கட்சிகள் தமிழகம் திமுக பா.ஜ. பா.ம.க.

தமிழக சட்டசபை தேர்தல் எப்போது வரும் ?

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆளும் கட்சியான, அ.தி.மு.க., பிளவுபட்டு, இரு அணிகளாக செயல்படுகிறது.  முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கமும் தொண்டர்கள் திரளாக உள்ளனர். சசிகலா ஆசியுடன் பழனிசாமி முதல்வரானபின், சசிகலாவின் உறவினரான டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பழனிசாமியின் அமைச்சரவையில் உள்ளவர்களே, பல்வேறு விசாரணை வளையங்களில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. இன்னிலையில் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் டில் கொலையும், கொள்ளையும் நடந் துள்ளது. அதன் பின்னணி மர்மங்கள் முழுமையாக வெளிவராத நிலையில், அதில் சம்பந்தப் பட்டவர்களின் மரணங்களும் தொடர்கின்றன.

 

இதுபோன்ற பலசிக்கல்கள்சூழ்ந்துள்ள நிலையில், தமிழக சட்டசபைக்கு தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘உள்ளாட்சி தேர்தலுக்கு முன், சட்டசபைக்கு தேர்தல் வரும்’ என்றார். அதிமுக இரண்டாவது அணித்தலைவரான பன்னீர் செல்வம் சமீபத்தில் தமிழக தேர்தல் என்னேரமும் வரலாம் என்றார். அதுபோலவே தமிழக பா.ஜ. தலைவர் கள் தமிழிசை சவுந்தர ராஜன், எச்.ராஜா போன்றவர்களும் பா.ம.க. கட்சியினரும் ‘விரைவில் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்து வருகின்றனர்.

 

மறுப்பு

இதற்கிடையே, நிதியமைச்சர், ஜெயக்குமார் ‘விரைவில் சட்டசபை தேர்தல் வரும் என, பன்னீர்செல்வம் கூறியிருப்பது விஷமத்தன மானது’ என்றும் கூறியுள்ளார். ஆட்சியில் உள்ள ஒரு அமைச்சரிடம் இருந்து இப்படிப்பட்ட கருத்தையே நாம் எதிர்பார்க்க முடியும். தற்போதைய நிலைமையை உன்னிப்பாக கவனித்தால், முன்பு ஆர். கே. நகர் தேர்தலை ரத்து செய்வோம் என்று பா.ஜ. தலைவர்கள் அறிவித்துவிட்டு அதை நடத்திக் காட்டியது போலவே, இப்போதும் “தமிழகத்திற்கு விரைவில் தேர்தல்’ என முன்னறிவிப்பு செய்கிறார்களோ என்று மனதிற்குள் தோன்றுகிறது.

 

Share
Categories
தமிழகம் போராட்டம் போராட்டம்

50% இடஒதுக்கீடு ரத்து தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: மருத்துவ மாணவர்கள் அறிவிப்பு

கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டுவந்த 50 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக கடந்த 18 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களும், மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசின் உரிமையை பறிக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டு முறையை குறைந்தபட்சம் இந்த ஆண்டாவது விலக்கு பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள போராட்ட மாணவர்கள், எதிர்காலத்திலும் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் பழைய நடைமுறைகளையே பின்பற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அரசிடம் நேரில் வலியுறுத்தப்படும் என்று தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்து பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளனர்.

 

Share
Categories
அ.தி.மு.க. கொடநாடு எஸ்டேட் சசிகலா ஜெயலலிதா டி.டி.வி. தினகரன் தமிழகம்

கொடநாடு கொலை தொடர்பாக தினகரன், சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டம்

கடந்த ஏப்ரல் 24-ந் தேதி 11 பேர் கும்பல், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் புகுந்து, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்ததுடன் மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கிய செய்தி ஏற்கெனவே தெரிந்ததே. தொடர்ந்து இந்த கும்பல், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைக்குள் சென்று 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

போலிஸ் விசாரணையில், ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், அவரது கூட்டாளி சயான் உள்பட 11 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனிடையே கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் இறந்து விட்டார். மேலும், சயான் பாலக்காடு அருகே விபத்தில் காயமடைந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் இறந்து விட்டனர்.

இவ்வழக்கில் கேரளாவை சேர்ந்த சாமியாரான மனோஜ் மற்றும் அவன் கூட்டாளிகளான சந்தோஷ், தீபு, சதீ‌ஷன், உதயகுமார், சங்கனாச்சேரியை சேர்ந்த சாமி என்ற மனோஜ் மற்றும் ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள குட்டி என்கிற பிஜினை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஜெ.வின் மர்மம் போலவே, கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் மர்மமாகவே இருக்கிறது. அந்த பங்களாவில் இருந்த ஜெ.வின் 3 முக்கிய சூட்கேஸ்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, கொடநாடு எஸ்டேட் பங்களா நிர்வாகம் சார்பாக எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை.
ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலாவும், தினகரனுமே எஸ்டேட் நிர்வாகத்தை கவனித்து வந்தனர். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரிடம் விசாரணை செய்ய முடிவெடுத்துள்ளதாக போலீசார் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
Share