Categories
கட்சிகள் தமிழகம் பா.ஜ.

ரஜினிக்கு எங்களுடைய கதவு எப்போதும் திறந்தே இருக்கும் பா.ஜனதா

ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசிஉள்ள நிலையில் எங்களுடைய கதவு ரஜினிக்கு எப்போதும் திறந்தே இருக்கும் என கூறி பா.ஜனதா தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்து உள்ளார்.
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரஜினிக்காக பா.ஜனதாவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். நல்ல மக்கள் யார் வேண்டு மானாலும் பா.ஜனதாவில் வந்து சேரலாம் என்றார் அமித் ஷா. ரஜினி காந்த் அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அமித் ஷா, எப்போதும் எங்களுடைய கட்சிக்கு சூப்பர் ஸ்டாரை வரவேற்போம் என்றார். ரஜினிகாந்த் அரசியல் விஷயங்களில் முன்நோக்கி நகர்வதற்கு முன்னதாக அவர் அரசியலில் இணைய வேண்டும் என்றும் பேசிஉள்ளார் அமித் ஷா.
Share
Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் காங்கிரஸ் தமிழகம் ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்றது. ப.சிதம்பரம் வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 1 மணிக்கு முடிந்தது.

ப.சிதம்பரம் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

”மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது 2-வது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர்(ஷீனா போரா கொலை வழக்கில் கைதானவர்கள்) ஐஎன்எக்ஸ் மீடியா என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனத்தின் முதலீட்டை அதிகரிப்பதற்காக நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்துக்கு(எப்ஐபிபி) விண்ணப்பித்தனர். அதைத் தொடர்ந்து ரூ.4 கோடியே 62 லட்சத்து 16 ஆயிரத்துக்கு மட்டும் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய எப்ஐபிபி அனுமதி கொடுத்தது. ஆனால் ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்தது.

இந்த மோசடி நடந்த காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். ஐஎன்எக்ஸ் நிறுவன இயக்குநராக இருந்த இந்திராணி முகர்ஜியுடன் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பலமுறை போனில் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஐஎன்எக்ஸ் நிறுவனம் தனது பங்குகளை விற்று முடித்த சில நாட்களில் கார்த்தி சிதம்பரம் நடத்தி வரும் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்துக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் வந்துள்ளது. முறைகேடாக நிறுவன பங்குகளை விற்க உதவி செய்ததற்காக இந்த தொகை வழங்கப்பட்டு இருக்கலாம்” என்றனர்.

Share
Categories
அ.தி.மு.க. அதிமுக கட்சிகள் தமிழகம் திமுக பா.ஜ. பா.ம.க.

தமிழக சட்டசபை தேர்தல் எப்போது வரும் ?

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆளும் கட்சியான, அ.தி.மு.க., பிளவுபட்டு, இரு அணிகளாக செயல்படுகிறது.  முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கமும் தொண்டர்கள் திரளாக உள்ளனர். சசிகலா ஆசியுடன் பழனிசாமி முதல்வரானபின், சசிகலாவின் உறவினரான டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பழனிசாமியின் அமைச்சரவையில் உள்ளவர்களே, பல்வேறு விசாரணை வளையங்களில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. இன்னிலையில் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் டில் கொலையும், கொள்ளையும் நடந் துள்ளது. அதன் பின்னணி மர்மங்கள் முழுமையாக வெளிவராத நிலையில், அதில் சம்பந்தப் பட்டவர்களின் மரணங்களும் தொடர்கின்றன.

 

இதுபோன்ற பலசிக்கல்கள்சூழ்ந்துள்ள நிலையில், தமிழக சட்டசபைக்கு தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘உள்ளாட்சி தேர்தலுக்கு முன், சட்டசபைக்கு தேர்தல் வரும்’ என்றார். அதிமுக இரண்டாவது அணித்தலைவரான பன்னீர் செல்வம் சமீபத்தில் தமிழக தேர்தல் என்னேரமும் வரலாம் என்றார். அதுபோலவே தமிழக பா.ஜ. தலைவர் கள் தமிழிசை சவுந்தர ராஜன், எச்.ராஜா போன்றவர்களும் பா.ம.க. கட்சியினரும் ‘விரைவில் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்து வருகின்றனர்.

 

மறுப்பு

இதற்கிடையே, நிதியமைச்சர், ஜெயக்குமார் ‘விரைவில் சட்டசபை தேர்தல் வரும் என, பன்னீர்செல்வம் கூறியிருப்பது விஷமத்தன மானது’ என்றும் கூறியுள்ளார். ஆட்சியில் உள்ள ஒரு அமைச்சரிடம் இருந்து இப்படிப்பட்ட கருத்தையே நாம் எதிர்பார்க்க முடியும். தற்போதைய நிலைமையை உன்னிப்பாக கவனித்தால், முன்பு ஆர். கே. நகர் தேர்தலை ரத்து செய்வோம் என்று பா.ஜ. தலைவர்கள் அறிவித்துவிட்டு அதை நடத்திக் காட்டியது போலவே, இப்போதும் “தமிழகத்திற்கு விரைவில் தேர்தல்’ என முன்னறிவிப்பு செய்கிறார்களோ என்று மனதிற்குள் தோன்றுகிறது.

 

Share
Categories
கட்சிகள் காங்கிரஸ் தமிழகம் விவசாயிகள் போராட்டம்

அய்யாக்கண்ணுவை அவதூறாக பேசினால் தமிழ்நாட்டில் இனிமேல் எச்.ராஜா நடமாட முடியாது

பாஜகவின் ஹெச்.ராஜா கண்ணியமின்றி பேசுவதாகவும், இனி தொடர்ந்தால் தமிழகத்தில் நடமாட முடியாது என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாஜகவின் எச்.ராஜா நாவடக்கம் இன்றி பேசி வருவதாக குறிப்பிட்டார். பெரியாரைப் பற்றி கேவலமாகப் பேசினார். சோனியா காந்தியைப் பற்றி கேவலமாக பேசினார். தற்போது தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவையும் அவதூறாக பேசியுள்ளதாக கூறினார்.

டெல்லியில் 40 நாட்களுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து போராடிய அய்யாக்கண்ணுவை பேசியது ஏற்றுக் கொள்ள இயலாது என்று கூறி கண்டனம் தெரிவித்தார். தலைவர்கள் குறித்து நாவடக்கம் இன்றி பேசினால், எச்.ராஜா தமிழகத்தில் நடமாட முடியாது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
Categories
அ.தி.மு.க. கட்சிகள் தமிழகம்

ரூ.20 கோடி மோசடி புகார்: போலியான குற்றச்சாட்டை முன்வைத்து விசாரணை நடத்துகின்றனர் தீபா குற்றச்சாட்டு

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா, தனது பேரவையை முறையாக பதிவு செய்ய தவறிவிட்டார் என்றும், பேரவை பதிவு செய்துவிட்டதாக கூறி உறுப்பினர் விண்ணப்பங்களை விற்பனை செய்த வகையில் ரூ.20 கோடி மோசடி செய்துள்ளார் என்றும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படியும் தீபா பேரவையை சேர்ந்த நெசப்பாக்கம் ஜானகிராமன் என்பவர் மேற்கு மாம்பலம் போலீசில் கடந்த 20–ந்தேதி புகார் கொடுத்தார்.

இந்தநிலையில் மேற்கு மாம்பலம் போலீசார் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கினர். சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ள ஜெ.தீபா வீட்டுக்கு  போலீசார் சென்றனர். அங்கு பேரவை முறையாக பதிவு செய்யப்பட்டதா? என்பது முதல் விண்ணப்ப படிவ விற்பனை வரை ஜெ.தீபாவிடம் போலீசார் விசாரித்தனர்.

மோசடி புகார் கொடுக்கப்பட்டு உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடத்தப்படும் என்றும் தகுந்த ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் ஜெ.தீபாவிடம் போலீசார் கூறியுள்ளனர். 1 மணி நேரம் விசாரணை முடிந்த பிறகு அங்கிருந்து போலீசார் சென்றனர்.

அதனைதொடர்ந்து தீபா செய்தியார்களிடம் கூறியதாவது:

 

போலியான குற்றச்சாட்டை முன்வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும் தமிழகத்தில் நல்லாட்சியை கொடுக்க முடியாது.

 

இவ்வாறு அவர் கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. கட்சிகள் தமிழகம்

அ.தி.மு.க அணிகள் இணைய ஒ.பி.எஸ். நிபந்தனை

அ.தி.மு.க அணிகள் இணைய வேண்டுமென்றால் சசிகலாவின் குடும்பத்தினரை கட்சியைவிட்டு ஒதுக்கி வைக்கவேண்டும் என்று ஒ.பி.எஸ் நிபந்தனை விதித்துள்ளார்.

ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

 

Share