Categories
அ.தி.மு.க. உணவுப்பொருள்கள் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் காமராஜ் விளக்கம்

அரசிதழில் அறிவிக்கப்பட்ட பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அமைச்சர் காமராஜ் விளக்கமளித்தார். “நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு என்று பேசிப்பேசியே காலத்தைத் வீணடித்தது போல இதுவும் ஆகிவிடுமோ என்று தமிழக மக்கள் அஞ்சுகின்றனர்.

பொது விநியோகத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள், 5 ஏக்கர் நிலம், வருமான வரி மற்றும் தொழில் வரி செலுத்துபவர்களின் குடும்பத்துக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு சக்கர வாகனம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் ரேஷன் சலுகைகள் வழங்கப்படாது என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது என்றும் தமிழகத்திற்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும்  கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவிநியோக திட்டத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை என தெரிவித்தார். விலையில்லா அரிசி திட்டம், பொது விநியோகத் திட்டம் ஆகியவை தமிழகத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் உறுதிபட கூறினார்.

“நீட்” தேர்வை மத்திய அரசு கட்டாயம் ஆக்கிய நேரத்தில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப் படும் என்று தமிழக அரசு கூறிவந்தது. எனினும் தமிழக மாணவர்கள் அதனை எழுத வேண்டியிருந்தது. பின்னர் 85% தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தும் அதனை செயல் படுத்த முடியாமல் போனது. இதுபோல ரேஷன் பொருள்கள் விஷயத்திலும் நடைபெறுமோ என்று நடுத்தர மக்கள் அச்சப்படுகின்றனர்.

 

Share
Categories
அ.தி.மு.க. உணவுப்பொருள்கள் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பால்முகவர்கள் சங்கம் எச்சரிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அவதூறு வழக்கு தொடரப்படும்

பால்முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து குற்றம்சாட்டும் வகையில், பணத்தை பெற்றுக்கொண்டு தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக பால்முகவர்கள் சங்கம் செயல்படுவதாக கூறிவருகிறார்.

அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தமக்கு சிலவாரங்களாக பால் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர தனி மனித தாக்குதல்களை நடத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அடுத்தவாரம் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றார் அவர்.

Share
Categories
இந்தியா உணவுப்பொருள்கள் ஜி.எஸ்.டி. தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஜி.எஸ்.டி.யின் தாக்கம் : ஹோட்டல் உணவுப் பொருள்கள் மற்றும் சினிமா கட்டணங்கள் விலை உயர்ந்தன

புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஜி.எஸ்.டி.யினால் ஹோட்டல்களில் விற்பனையாகும் உணவுப்புருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. குளிர்சாதன வசதியுடைய ஹோட்டல்களில் 18% சேவை வரியும் இல்லாத ஹொட்டல்களில் 12 % சேவை வரியும் விதிக்கப்படுவதால், இட்லி உள்ளிட்ட அனைத்து விதமான உணவுப்பண்டங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ரூ. 5 -க்கு விற்கப்பட்ட இட்லி தற்போது ரூ. 22 வரை விற்கப்படும் என்று தெரிய வருகிறது.

இதுபோல, தியேட்டரில் டிக்கெட் கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுகின்றது. ரூ. 100-க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், ரூ.100 -க்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யும் தியேட்டர்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது. தியேட்டர் கட்டணங்கள் மீது விதிக்கப்படும் வரியும் பொதுமக்களை பாதிப்பதோடு அல்லாமல் சினிமா துறையையும் பாதிக்கும்.  ஏனென்றால் தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப்பண்டங்களின் விலையும் உயருகிறது. வெளியில் இருந்து கொண்டு வரும் பொருள்களுக்கு தியேட்டர்களில் அனுமதியில்லாததால், இது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவையெல்லாம் திருட்டு விசிடி அதிகரிக்கவும் ஆன்லைனில் படம் பார்ப்பதை அதிகரிக்கவுமே வழி வகுக்கிறது.

Share
Categories
உணவுப்பொருள்கள் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பிளாஸ்டிக் அரிசி: தமிழகம் முழுவதும் மாதிரிகளைச் சேகரிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண்டறிய மாதிரிகளைச் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் முட்டையை அடுத்து பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை ஆகியவை கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக அண்டை மாநிலங்களில் புகார் எழுந்துள்ளனது.

பிளாஸ்டிக் பொருளானது மக்காத தன்மை உடையது. மண்ணில் மக்காத ஒரு பொருளை உடலில் உள்ள ஜீரண உறுப்புகள் எவ்வாறு செரிமானம் செய்யும். இதனால் பிளாஸ்டிக் அரிசி போன்ற உணவை உட்கொண்டால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் செரிமானப் பிரச்னைகளும், வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளும் வரக்கூடும். இதுதவிர, உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நீண்ட காலப் பிரச்னைகளும் வரக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உண்மை நிலை :

தமிழகத்தில் இதுவரை பிளாஸ்டிக் உணவுப் பொருள்கள் எதுவும் வரவில்லை என்று அனைத்துத் தரப்பினரும் உறுதி தெரிவிக்கின்றனர்.

கன்ஸ்யூமர் அசோஸியேசன்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் தகவல் தொடர்பு அலுவலர் எம்.சோமசுந்தரம் கூறியது: பிளாஸ்டிக் அரிசியை உற்பத்தி செய்வது சாதாரண அரிசி உற்பத்தியைக் காட்டிலும் மிகவும் பொருட்செலவு வாய்ந்தது. எனவே, பிளாஸ்டிக் அரிசி உற்பத்திக்கு வாய்ப்பு இல்லை.

குறுணை அரிசி என்று அழைக்கப்படும் சேதமடைந்த அரிசியைச் சேகரித்து, அதனை அரைத்து அதனுடன் வேறு பொருள்களைச் சேர்த்து அரிசி போன்று உருவாக்குகின்றனர். இவ்வாறு தயாரிக்கப்படும் அரிசியில் வெள்ளை நிறத்தை வரவழைப்பதற்காக சில வேதிப்பொருள்களை சேர்க்கின்றனர்.

எனவே, இந்த அரிசி சாதாரண அரிசியைப் போல் எளிதில் வேகாமல் உள்ளது. இதைத்தான் மக்கள் பிளாஸ்டிக் அரிசி என்று புரிந்து கொள்கின்றனர். இதுபோன்ற அரிசி சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது என்றார்.

சர்க்கரையிலும் பிளாஸ்டிக் இல்லை: சர்க்கரையைப் பொருத்தவரை தமிழகத்தில் மணல் போன்ற சிறிய அளவு சர்க்கரையே புழக்கத்தில் உள்ளது. இதில் பிளாஸ்டிக் சர்க்கரை போன்றவை கலப்பதற்கு வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மாதிரி சேகரிப்பு: இந்நிலையில் தமிழகத்தில் அரிசிகளின் மாதிரிகளைச் சேகரிக்க உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரி கூறியது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அரிசியின் மாதிரிகளைச் சேகரித்து, அதில் ஏதேனும் போலி உள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

அரிசி குடோன்கள், மொத்த விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக் கடைகள் என்று அனைத்திலிருந்தும் மாதிரிகள் சேரிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாவட்டங்களின் ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளன. அவற்றில் இதுவரை எங்கும் பிளாஸ்டிக் அரிசி கண்டறியப்படவில்லை. எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்தார்.

Share