Categories
அ.தி.மு.க. இந்தியா டி.டி.வி. தினகரன் தமிழகம்

இரட்டை இலைக்கு லஞ்சம்: ஏஜெண்டு நரேசிடம் ஹவாலா பணம் ரூ.50 லட்சம் சிக்கியது

இரட்டைஇலை சின்னம் பெறுவதற்கு தேர்தல் கமி‌ஷன் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் நடந்த விசாரணைக்கு பின் டி.டி.வி. தினகரனை சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு அலுவலகமான ராஜாஜி பவனிலும், தினகரனின் அடையாறு இல்லத்திலும் வைத்து 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

இதேபோல் தினகரனுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பரான மல்லிகார் ஜுனாவிடமும் போலீசார் ராஜாஜி பவனில் வைத்து விசாரித்தனர்.

சென்னையில் விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து போலீசார் நேற்று மாலை டி.டி.வி.தினகரனை பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் தன்னுடன் தொடர் புடைய ஹவாலா ஏஜெண்டுகளின் விவரங்களை டெல்லி போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.

அதன்பேரில் டெல்லியில் நரேஷ் என்ற ஹவாலா ஏஜெண்டு கைது செய்யப்பட்டார். இவர் மூலமாகவே டி.டி.வி. தினகரனிடம் இருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு பணம் சென்றிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

போலீசார் நரேசின் டெல்லி வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.50 லட்சம் பணம் சிக்கியது. இது ஹவாலா பணம் என்று தெரியவந்தது.

இந்த பணம் சுகேஷ் சந்திரசேகருக்கு கொடுப்பதற்காக வைத்து இருந்ததாக நரேஷ் கூறியதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே டி.டி.வி. தினகரனின் வங்கி கணக்குகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருக்கு ஸ்டேட் வங்கியில் 5 கணக்குகள் உள்ளன.

இந்த கணக்குகளில் அவர் எவ்வளவு பணம் போட்டுள்ளார். யார்- யாருக்கு எப்போது பண பரிமாற்றம் செய்தார் போன்ற விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

தினகரனின் 5 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இன்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நாளை தினகரன் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

தினகரனிடம் சென்னையில் வைத்து மீண்டும் விசாரிக்க வேண்டி உள்ளதால் அவரை மறுபடியும் சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். இதனால் தினகரனுக்கு மேலும் சில நாட்கள் காவல் நீடிப்பு கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Share
Categories
அ.தி.மு.க. கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதா தமிழகம்

கொடநாடு பங்களா காவலாளி கொலையில் குற்றவாளி சிக்கினார்

கொடநாடு பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரளாவை சேர்ந்த நபர் சிக்கினார்.
கடந்த 24ம் தேதி(ஏப்.,24) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கேரளாவை சேர்ந்த நபர் பிடிபட்டார். அவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அளக்கரை அருகே சொகுசு பங்களாவில் சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு மொபைல் போன் மூலம் உதவிய ஒருவரை கேரள மாநிலம் குருவாயூர் அருகே உள்ள சாவக்காடு பகுதியில் போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவலாளி கொலை வழக்கில் இவருக்கும் முக்கிய பங்கு இருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக தெரிகிறது.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம்

டி.டி.வி. தினகரனிடம் தொடரும் விசாரணை

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசரணை நடைபெறுகின்றது.

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க புரோக்கர் சுகேஷை தாம் சந்தித்தது உண்மைதான் என  டிடிவி தினகரன் டெல்லி போலீசில் ஒப்புக் கொண்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் கைதானபோது அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சமும், 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Share
Categories
அ.தி.மு.க. கட்சிகள் தமிழகம்

ரூ.20 கோடி மோசடி புகார்: போலியான குற்றச்சாட்டை முன்வைத்து விசாரணை நடத்துகின்றனர் தீபா குற்றச்சாட்டு

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா, தனது பேரவையை முறையாக பதிவு செய்ய தவறிவிட்டார் என்றும், பேரவை பதிவு செய்துவிட்டதாக கூறி உறுப்பினர் விண்ணப்பங்களை விற்பனை செய்த வகையில் ரூ.20 கோடி மோசடி செய்துள்ளார் என்றும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படியும் தீபா பேரவையை சேர்ந்த நெசப்பாக்கம் ஜானகிராமன் என்பவர் மேற்கு மாம்பலம் போலீசில் கடந்த 20–ந்தேதி புகார் கொடுத்தார்.

இந்தநிலையில் மேற்கு மாம்பலம் போலீசார் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கினர். சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ள ஜெ.தீபா வீட்டுக்கு  போலீசார் சென்றனர். அங்கு பேரவை முறையாக பதிவு செய்யப்பட்டதா? என்பது முதல் விண்ணப்ப படிவ விற்பனை வரை ஜெ.தீபாவிடம் போலீசார் விசாரித்தனர்.

மோசடி புகார் கொடுக்கப்பட்டு உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடத்தப்படும் என்றும் தகுந்த ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் ஜெ.தீபாவிடம் போலீசார் கூறியுள்ளனர். 1 மணி நேரம் விசாரணை முடிந்த பிறகு அங்கிருந்து போலீசார் சென்றனர்.

அதனைதொடர்ந்து தீபா செய்தியார்களிடம் கூறியதாவது:

 

போலியான குற்றச்சாட்டை முன்வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும் தமிழகத்தில் நல்லாட்சியை கொடுக்க முடியாது.

 

இவ்வாறு அவர் கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம்

போலீசில் ஆஜராக டெல்லி சென்றார் டி.டி.வி.தினகரன்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கட்சி இரு அணிகளாக பிரிந்து போட்டியிட்ட நேரத்தில், இரட்டை இலை சின்னத்தை தமது அணிக்குப்பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன் மீது டில்லி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, டில்லி போலீசார் முன்பு தினகரன் இன்று ஆஜராகிறார். அவரை கைது செய்ய டில்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரனையும், அவரது குடும்பத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் ஒன்று சேருவதற்கான முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நேரில் ஆஜராவதற்கு 3 நாட்கள் அவகாசம் கேட்டு தினகரன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது . ஆனால் அவகாசம் அளிக்க டில்லி போலீசார் மறுத்து விட்டனர். இப்படிப்பட்ட பரபர்ப்பான சூழ்நிலையில், இன்று அவர் ஆஜராகும்பட்சத்தில், தினகரனை கைது செய்து காவலில் எடுக்கவும் டில்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Share
Categories
அ.தி.மு.க. கட்சிகள் தமிழகம்

அ.தி.மு.க அணிகள் இணைய ஒ.பி.எஸ். நிபந்தனை

அ.தி.மு.க அணிகள் இணைய வேண்டுமென்றால் சசிகலாவின் குடும்பத்தினரை கட்சியைவிட்டு ஒதுக்கி வைக்கவேண்டும் என்று ஒ.பி.எஸ் நிபந்தனை விதித்துள்ளார்.

ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

 

Share