Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா ரஜினிகாந்த்

திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா : டி. ராஜேந்தர்

லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவரும்  டைரக்டருமான டி. ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா என வினவியுள்ளார். சினிமா மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ரஜினி குரல் கொடுக்காதது ஏன்   அரசியல்வாதிகள் சேவை செய்யும் போது எங்களுக்கு ஏன் சேவை வரி என வினவினார். சினிமா டிக்கெட் விலையை அதிகரிக்கும் முடிவில் தான் முரண்படுவதாக கூறியுள்ளார்.

Share
Categories
சினிமா ஜி.எஸ்.டி. தமிழகம் தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

ஜி.எஸ்.டி. வரியால் சினிமா கடுமையாக பாதிக்கப்படும்: நடிகர் விஷால்

ஜி.எஸ்.டி. வரியால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று நடிகர் விஷால் கூறினார்.

நாடு முழுவதும் ஒரே சீரான சரக்கு சேவை வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி) முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. சினிமா துறைக்கு ரூ.28 சதவீத வரி விதிக்கப்பட்டு ஒட்டு மொத்த திரைப்படத்துறையினர் எதிர்ப்பால் 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுக்கு 18 சதவீத வரி என்றும் அதற்கும் அதிகமான தொகையை வசூலிக்கும் டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத வரி என்றும் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

இதையும் திரையுலகினர் ஏற்காமல் பிராந்திய மொழி படங்களுக்கு சரக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடைசி முயற்சியாக மத்திய அரசுக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர். இந்த கடிதத்தில் நடிகர் கமல்ஹாசனும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களின் தயாரிப்பாளர்களும் கையெழுத்திட்டு உள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சென்னையில் உள்ள திரைப்பட தணிக்கை துறை அதிகாரி மதியழகனை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

காலதாமதமின்றி படங்களை தணிக்கை செய்ய வேண்டும் என்றும் ‘ஏ’ சான்றிதழ் பெறும் படங்கள் மறு தணிக்கை செல்வதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றும், சிறுபட்ஜெட் படங்களை டி.வி.டியில் பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.

தணிக்கை அதிகாரியை சந்தித்து விட்டு வெளியே வந்த விஷால் நிருபர்களிடம் கூறும்போது, “திரைப்படங்களுக்கான தணிக்கை சான்றிதழ் பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினோம். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக தமிழ் திரையுலகம் இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது. இது சினிமா தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.

 

 

Share
Categories
சினிமா ஜி.எஸ்.டி. தமிழ் சினிமா

ஜி.எஸ்.டி: சினிமா மீது விதிக்கப் படும் வரி விதிப்பை எதிர்த்து கமல் ட்வீட்

வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ள செய்தி :

“ஒரே நாடு ஒரு வரி என்ற ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் சரக்கு, சேவை வரி விதிப்பை வரவேற்கிறேன். ஆனாலும் தற்போது உள்ள வரி விதிப்பு வித்தியாசங்களில் சில திருத்தங்கள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். அது முடியாத பட்சத்தில் தமிழ் சினிமாவுக்கு பெரிய அழுத்தமாகவே இந்த சரக்கு சேவை வரி அமையும். சினிமா மீது விதிக்கப் படும் இந்த வரி விதிப்பை எதிர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன்.”

 

Share
Categories
காணொளி சினிமா தமிழ் சினிமா தமிழ்ப்படம்

வெங்கட் பிரபுவின் புதிய படம் “பார்ட்டி”

வெங்கட் பிரபுவின் புதிய படத்துக்கு ‘பார்ட்டி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இந்தப் படத்தின் அறிமுக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நடிக்கும் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா காஸண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ். படத்தொகுப்பு – பிரவீன் கே.எல். இசை – பிரேம்ஜி. தயாரிப்பு – அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா.

Share
Categories
சினிமா தமிழ் சினிமா விஜய்

விஜய் பிறந்த நாளையொட்டி, அவரது 61–வது படத்தின் பெயர் அறிவிப்பு

அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேல், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இந்த படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோ சார்பில் முரளி ராமசாமி தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இது விஜய்யின் 61–வது படம் ஆகும். ஏற்கனவே ‘தெறி’ படத்தில் சேர்ந்து பணியாற்றிய விஜய்யும் அட்லியும் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இதில் விஜய் 3 வேடங்களில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. சென்னையில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.

படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று படக்குழுவினர் தீவிரமாக பரிசீலித்து வந்தனர். ரசிகர்களும் தலைப்பை அறிய ஆவலாய் இருந்தனர். பலத்த எதிர்பார்ப்புக்கு இடையில் நேற்று படத்துக்கு ‘மெர்சல்’ என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விஜய் இன்று தனது 43–வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளையொட்டி பட தலைப்பை வெளியிட்டு உள்ளனர்.

விஜய்யும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘மெர்சல்’ தலைப்பை வெளியிட்டார். மெர்சல் பெயர் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் நேற்று ‘டிரெண்டிங்’ ஆனது. ‘மெர்சல்’ படத்தில் விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தின் முதல் தோற்றமும் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் (ஜூலை) நடத்த ஆயத்த வேலைகள் நடக்கின்றன. அக்டோபர் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

Share
Categories
இந்திய சினிமா ஈஸ்வரி ராவ் சினிமா தமிழ் சினிமா

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சி: நடிகை ஈஸ்வரி ராவ்

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது தன்னுடைய குழந்தைகளை அதிரவைத்து இருப்பதாக நடிகை ஈஸ்வரி ராவ் தெரிவித்துள்ளார்.

‘கபாலி’ வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘காலா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் ரஜினி மும்பையைச் சேர்ந்த தாதாவாக நடிக்கிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாத இறுதியில் மும்பையில் தொடங்கியது.

Tamil Actress Eswari Rao Photos
 இந்தப் படத்தில் பாலிவுட் நடிகைகள் அஞ்சலி பாட்டில், ஹூமா குரோஷி, நானா படேகர், சமுத்திரகனி, பங்கஜ் திரிபாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வரிசையில் தற்போது நடிகை ஈஸ்வரி ராவும் முக்கிய கதாபாத்திரமாக இணைந்துள்ளார். இது குறித்து  நடிகை ஈஸ்வரி ராவ் கூறியதாவது:

ரஜினிகாந்துடன் இணைந்து ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் எனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனது ரோல் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. இதில் நடிப்பதற்காக மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று கூறினார்.

Share
Categories
அனுஷ்கா சினிமா தமிழ் சினிமா

உடல் எடையைக் குறைக்க அனுஷ்கா தீவிர முயற்சி

அதிகமாகிவிட்ட உடல் எடையைக் குறைப்பதற்காக, தீவிரமாக யோசித்து, யோகா பயிற்சியை மேற்கொள்ளப் போகிறாராம் அனுஷ்கா.

பிரகாஷ் கோவலமுடி இயக்கத்தில் அனுஷ்கா, ஆர்யா நடித்த படம் இஞ்சி இடுப்பழகி. இப்படத்தின் கதைக்காக தன்னுடைய உடலை அதிகளவில் அதிகரித்திருந்தார். அதன் பிறகு உடற்பயிற்சி, யோகா என்று பல்வேறு முயற்சிகள் செய்தும் பலனில்லை. அவரால் தன்னுடைய பழைய வடிவத்தை பெற முடியவில்லை. தற்போது உடல் எடையை குறைக்க பட வாய்ப்பை மறுத்து வருகிறார்.

பாகுபலி முதல் பாகத்தைப் போன்று 2ம் பாகத்திலும், அனுஷ்கா ஒல்லியாக இருக்க வேண்டும். ஆனால், 2ம் பாகத்தில் நடிப்பதற்கு அனுஷ்கா உடல் எடையை குறைக்க வேண்டும் என்று இயக்குனர் ராஜமௌலி விரும்பினார். அதற்காக கால அவகாசமும் கொடுத்துள்ளார். ஆனால், அதற்குள் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இந்நிலையில், கிராபிக்ஸ் மூலம், அனுஷ்காவை ஒல்லியாக காண்பிக்க பல கோடி ரூபாய் செலவும் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

எடையை குறைக்க டயட், உடற்பயிற்சி இப்படியெல்லாம் செய்தும் ஒரு பயனும் கிடைக்கவில்லை. எனவே, யோகா பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உடல் எடையை குறைக்க அனுஷ்கா முடிவு செய்திருக்கிறார்.

Share
Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு அழைப்பில் ரஜினி பெயர் இல்லை

ரஜினிகாந்த் – கமல் ஹாஸன் ஆகிய இரு பெரும் சிகரங்களை உருவாக்கிய, தமிழ் சினிமாவின் சாதனை இயக்குநர் பாலச்சந்தர் கடந்த டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் காலமானார். கமல் ஹாஸன் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்படாவிட்டாலும், அவரை பண்பட்ட நடிகனாக உருவாக்கிய பெருமை கே.பாலச்சந்தருக்குத்தான் சேரும்.

இந்நிலையில் பாலச்சந்தருக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக அவரின் பிறந்த நாளான ஜூலை 9-ம் தேதி வெண்கலச் சிலை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் பிறந்த திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இந்த சிலை திறக்கப்படுகிறது. இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த் சாய், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பாலச்சந்தருக்கு புகழுரை வழங்கி பேசுகின்றனர்.

இதனிடையே விழாவுக்கான அழைப்பிதழ்களில் நடிகர் ரஜினியின் பெயர் கூட இடம்பெறவில்லை. ‘சூப்பர் ஸ்டார்’ என்று இன்றைக்கு உலகமே கொண்டாடும் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் கே.பாலச்சந்தர் தான்.

இந்நிலையில் அழைப்பிதழில் கூட அவரின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விழாவில் ரஜினி பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது. கே.பாலச்சந்தருக்காக நடைபெறும் விழாவில் ரஜினியின் பெயர் அழைப்பிதழில் இடம்பெறாதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

Share
Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி சூப்பர்சிங்ஙர்களுக்கு சொன்னபடி வாய்ப்பு கொடுத்த யுவன்ஷங்கர் ராஜா

திரையுலகத்தில் பலரும் பலருக்கு வாக்கு கொடுப்பார்கள். அடுத்த வாரம் வந்து என்னைப் பாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு சான்ஸ் உண்டு என்று சொல்வார்கள். அடுத்த வாரம் வந்தால் வாக்கு கொடுத்தவர் உள்ளேயே நுழைய விட மாட்டார்.

ஆனால், திரையுலகத்தில் சொன்னபடி செய்து காட்டி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. சமீபத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது சிறப்பாகப் பாடும் மூன்று பேருக்கு தான் இசையமைத்து வரும் ‘பலூன்’ படத்தில் பாட வாய்ப்பு கொடுப்பதாகக் கூறினார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதற்கு முன் கலந்து கொண்டு பாடிய பிரியங்கா, ரிஸ்வான், பிரியா ஜெர்சன் ஆகியோர் உட்பட பலர் யுவன் முன் பாடினார்கள்.

அவர்கள் பாடியதைக் கேட்ட யுவன் நிகழ்ச்சி முடிந்ததும் பிரியங்கா, ரிஸ்வான், பிரிய ஜெர்சன் ஆகியோரைத் தன் ‘பலூன்’ படத்தில் பாட வைக்க தேர்ந்தெடுத்தார். அவர் சொன்னது போலவே சில நாட்களுக்கு முன்பு அவர்கள் மூவரையும் தன் இசையில் ‘பலூன்’ படத்தில் பாட வைத்திருக்கிறார்.

சொன்ன வாக்கைக் காப்பாற்றாத பலர் மத்தியில் யுவனின் இந்த செயல் அவருடைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Share
Categories
இயக்குனர் விஜய் சினிமா தமிழ் சினிமா பிரபுதேவா

இயக்குனர் விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா

பிரபல நடிகர் இயக்குனர், நடன இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் பிரபுதேவா கடந்த வருடம் இயக்குனர் விஜய் இயக்கத்தில் ‘தேவி’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் ஹிட் ஆகியது.

‘பிரேமம்’ மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இதையடுத்து, மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில், சாய் பல்லவி தற்போது நானி ஜோடியாக `ஃபிடா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் `கரு’ என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக உள்ள இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. அந்த போஸ்டரை இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா வெளியிடுகிறார். `தேவி’ படத்தின் மூலம் பிரபுதேவா – ஏ.எல்.விஜய் நெருங்கிய நண்பர்களாகி இருக்கின்றனர்.

Share